Monday, May 22, 2023

A Chocolate boy with his endearing vibrations


                                   

                    {Homage to Sarath Babu}

    An actor is remembered not only for how he looks,but also  for how he works.The charisma of an actor is carried on by his looks,voice and winning way of role play.Sarath Babu who is no more today,is one among such rare actors of South Indian cinema.With his prolific contribution to Telugu and Tamil cinema,he has considerably made his indelible marks on the Kannada and Malayalam big screens also.

  Sarath Babu was introduced into Tamil cinema by none other than veteran film maker K.Balachander in his well known film Pattina Pravesam.After that,he went on to act in films like Nizhal Nijamaagiradhu,Ninaithale Inikkum, Uyirullavarai {Maro Charithra}Nool Veli, Netrikan and 47 Naatkal directed by K.Bala chander and later in K.B's home production films such as,Velaikaaran,Annamalai and Muthu directed by S.P.Muthuraman,Suresh Krishna and K.S.Ravikumar respectively.Sarath Babu was equally lucky to act in ace director J.Magendran's highly credited movies like Nenjathai Killaadhe,Udhiri Pookal,Mullum Malarum and Azhagiya Kanne.In'Uthiri Pookal' he breezily gave his lip movements for the mesmerizing song 'Senthaazham Poovil' vibrantly sung by K.J.Yesudas.Similarly,he had the good fortune of playing a significant role as  Kamalahasan's bosome friend in late K.Viswa nath's critically acclaimed film Salangai Oli.He had also done a meaty role in Manirathnam's Pagal Nilavu.

  The other popular films of the late actor are Thisai Maariya Paravaigal,Nadhiyai Thedi vandha Kadal, Ucha Kattam,Sattam,Captain, Vedan,Puthiya Geethai Otran,Arul,Perarasu, Gajendra and a few major films with Sivaji Ganesan such as Sandhippu,Theerpu, Ezhuthaadha Sattangal and the immortal Keezh Vaanam Sivakkum.

  All these films brought out the suave,stylish, delicate and delightful acting touches of this highly commendable,multi lingual actor.He never failed to make a memorable mark in roles relating to estranged friendship and enchanting reunion with those misunderstood friends.This was the high water mark of his singular acting mode, in films like Velaikaaran,Sattam, Annamalai and Muthu.The last two films were his special entries,in association with the super star besides Velaikaaran.

   What had always been attracting the audience was Sarath Babu's excellently elegant face, supported by an enticing voice,loaded with subtle and graceful notes of vibration that gave his profile an absolute masculine touch, dignifying his over all performance pattern, from Pattina Pravesam toVasantha Mullai. None of the audience would ever shirk the temptation to have a second look at him,be it his stills or his animated persona {personae}as a pretty performing actor.

   Sarath Babu's rapport with fellow actors was in an endearing frame,with roaring rivalry and rejocing gusto of love.His unruffled demeanour in delivering his role even in ticklish and entangled contexts in Pattina Pravesam and Keezh Vaanam Sivakkum, as a betrayer of love,would speak a lot about his vibrant perception of characters on hand.He would surpass the entanglement with casual submission and captivating underplay.On the whole,the entire South Indian Cinema has lost an eternal chocolate boy,with his vast,winning vibrations.

PS.This blog already contains a post on Kalyan Kumar and Sararth Babu

  'Two Soft  men of Tamil cinema,from the Kannada &Telugu regions'.

Monday, May 15, 2023

கல்லில் உதித்த கவிதை வரிகள்

"கல்லைத்தான் மண்ணைத்தான்

காய்ச்சித்தான் குடிக்கத்தான்

கற்பித்தானா"

  எனும் ராமச்சந்திர கவிராயர் வரிகளை நடிகர் திலகம் தனது முதல் படமான 'பராசக்தி'யில் கம்பீரமாகக் கூறுவதை நம்மில் பலரும் கேட்டு பரவசமுற்றிருப் போம்.இதேபோன்று சிவாக்கியார் எழுதிய

"நட்டகல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ"

 எனும் அரிய கவிதை வரிகளையும் சிவாஜி கணேசன் தனது சிம்மக்குரலால் உச்சரிக் கக் கேட்டிருப்போம்.

   கல்லை வைத்து,கல் தூண்,கல்லும் கனி யாகும்,கல்லுக்குள் ஈரம்,ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படத் தலைப்பு களும்,'கல்'எனும் சொல் கொண்டு காவியம் படைத்தன.

  கல்லைவைத்து கவிதை புனைந்த கண்ண தாசனின் கற்பனை,தனித்துவம் வாய்ந்தது. மாடர்ன் தியேட்டர்சின்'குமுதம்'திரைப்படத் தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண் கலக்குரலில் நம்மை மெய்மறக்கச் செய்த,

"கல்லிலே கலை வண்ணம் கண்டான்

கண்பார்வை மறைத்தாலும் காணும் வகை தந்தான்"

  எனும் காலம் வென்ற பாடல்,கே.வி.மகா தேவன் இசையில் தமிழ்த்திரையிசையின் புகழ் பரப்பியது.இந்த வகையில்'ஆலய மணி'திரைப்படத்தில் டி.எம்.எஸ்&எல்.ஆர். ஈஸ்வரி குரல்களில் தேனிசையாய் நம் செவிகளில் நிறைந்த,

"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா

கலை எல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா"

  எனும் கவியரசின் பாடல்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரின் இசையில்,பட்டி தொட்டியெல்லாம் பவனிவந்தது.பின்னர் 'ஆனந்தி'எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற கவியரசின்,

"கண்ணிலே அன்பிருந்தால்

கல்லிலே தெய்வம் வரும்

நெஞ்சிலே ஆசை வந்தால்

நீரிலும் தேனூறும்"

  எனும் மகத்தான டி.எம்.எஸ்,P.சுசிலா குரல்களில் மென்மையாய் ஒலித்த பாடல் வரிகள் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆன்ம சுகம் தந்தது.'மகாகவி காளிதாஸ்' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,

"கல்லாய் வந்தவன் கடவுளம்மா

அதில் கனியாய் கனிஞ்சவள் தேவியம்மா

புல்லாய் மொளச்சவ தேவியம்மா

அதில் பூவாய் மலர்ந்தவள் காளியம்மா"    

     எனும் மேன்மைமிகு வரிகள் கண்ணதாச னின் தெயவீகக் கற்பனை வளத்தை காவியமாக்கியது.இதே கே.வி.மகாதேவன் இசைமிடுக்கில் 'என் அண்ணன்'திரைப் படத்தில் இதயம் நனையச்செய்த

"கடவுள் ஏன் கல்லானான்

மனம் கல்லாய்ப்போன மனிதர்களாலே"

  எனும் இயல்பான வரிகளினால்,கண்ண தாசன் சிறந்த தத்துவக்கவிஞர் மட்டுமல்ல; அவர் வாழ்வியல் உணர்ந்த நடைமுறைக் கவிஞருமாவார்,என்பதை வெளிப்படுத் தியது. டி.எம்.எஸ் குழுவினருடன் பாடிய இப்பாடல்,அவர் பாடிய மிகச்சிறந்த பாடல் களிளொன்றானது.

  கமலகாசனின் 'தசாவதாரம்'திரைப்படத் தில் ஹரிஹரன் குழுவினருடன் பாடிய

"கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது

கடவுள்மட்டும் கண்டால் கல்லடி தெரியாது"

  எனும் இறைவனை கல்லோடு கனியாக் கிய ஒளியூட்டும் வரிகள் கவிஞர் வாலியின் வரிகளிலும் ஹிமேஷ் ரேஷம்மியா இசையி லும் இதிகாசம் படைத்தது.இதேபோன்று திருவிளையாடல் திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் டி.ஆர்.மகா லிங்கம் தனது வழக்கமான அசுரபலக் குரலில் பாடிய"இல்லாததும் இல்லை எனும் பாடலுக் கிடையே தவறாமல் கேட்க வேண்டிய,

"கல்லான உருவமும்

கனிவான உள்ளமும்

வடிவான சதுர்வேதனே!"

  எனும் கண்ணதாசனின் வரிகளில் ஒரு தெய்வீக பரவசத்தை அனைவரும் உணர்ந்திருப்பர்.

  கல்லை கடவுளிடமிருந்து பிரித்து காதல் வசப்படுத்திய வித்தியாசமான பாடல் ஒன்று எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவான 'சிவமனசுல சக்தி'எனும் திரைப்படத்தில் இடம் பெற்றது.

"ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல்

 மோதிக்கொண்டால் காதல்.

ஒரு சொல் சில மௌனங்கள் பேசாமல்

பேசிக்கொண்டால் காதல்"

  என்ற அமரர் நா.முத்துகுமாரின் நளின மான வரிகளை,யுவன் ஷங்கர் ராஜா இசை யூட்டி தானே பாடியிருந்தார்.அரிதான குரலில் ஒலித்த இப்பாடல் வரிகளில் 'ஒரு கல் ஒரு கண்ணாடி'எனும் சொற்கள்,பிறகு அதே இயக்குனர் எம்.ராஜேஷின் இன் னொரு திரைப்படத்தின் தலைப்பாயிற்று.

  திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி டி.எம்.எஸ் பாடிய "மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்"என்ற உருக்கமான பாடலில் "வெறும் கல்லானாலும் தணிகை மலை யில் கல்லாவேன்" எனும் இறையுணர்வில் திளைத்த வரி நம்மை இறைவன்பால் இறுக் கமாய் ஈர்த்ததுண்டு.'கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை' என சபரிமலை யாத்திரை செல்வோர் கூறுவது போல அறிவையும் ஆற்றலையும் ஆன்மாவையும் ஒருசேர மேம்படுத்தும் கல்வியிலும் உள்ளதே 'கல்' எனும் சொல். 'இளமையில் கல்'என்பதோர் பொன்மொழியும்'கல்லா தான் கற்ற கவி'எனும் பழம்பாடல் வரியும், உரசிப்பார்தாலே கல்லின் சிறப்பறியும் என்பதன் வெளிப்பாடாகும்.

  கற்கால மனிதன் கல்லில் தீப்பொறி கண்டான்.காலங்கள் கடந்தபின் கல்லில் சிற்பங்கள் செதுக்கி கல்கொண்டு வரலாற்று நினைவுச் சின்னங்களை வார்த் தெடுத்தான்.எண்ணும் எழுத்தம் கற்றபின் 'கல்'எனும் சொல்லால் கவிதைகள் இயற்றி காவியம் படைத்தான்.கல்லைப்பற்றிய கருத்துக்கள்,கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியவையாகும்."கரைப்பாற் கரைத்தால் கல்லும் கரையுமென்பர்" இருப்பினும் கல்லின்றி கனியுமோ நம் வாழ்வு, இப்புவியில்?

ப.சந்திரசேகரன்.


 


Wednesday, May 3, 2023

Lean in size but lofty in role play





   A look of innocence loaded with mischief,was the most impressive role play of Manobala who is no more today.Manobala already finds a place in this blog in the post 'Tamil Film directors as actors'. Thanks to Kamalahasan,Manobala came to Tamil cinema as the assistant director of Bharathiraja for the film Puthiya Vaarpugal and played roles in his films like Tik TIk TIk  Niram Maaradha Pookal and Kallukkul Eeram.

  Manobala had directed about twenty films with mass heroes like Rajinikanth{Oor Kaavalan} VijayaKanth { Sirai Paravai,En Purushanthaan Enakku Mattundhaan,Moonrezhuthil en Moochirukkum}Prabu {Moodu Mandhiram} Karthik Muthuraman{Aagaaya Gangai& Dhoorathu Pachai}Mohan{Pillai Nila} Sathyaraj {Mallu Vetti Minor}and Rehaman{Karuppu Vellai}He has also directed Thendral Sudum that had the story line of Kalaignar Karunanidhi. Above all,he had also directed a film of Sivaji Ganesan(Paarambaryam)

  As a supporting actor his contribution was vast and varied.As a fake Swamiji,as a broker,as a ticket collector,as villain's henchman and as minister's sidekick,as a ludicrous cop,as a school teacher and college principal his roles were many.All his roles were dominated by comedy fervour on account of his Nagesh-like looks and clearly articulated dialogues.He was always a treat to the audience both in looks and character portrayal.With more than 300 films in his kitty,he was an indispensable supporting actor.Manobala has also done Tamil serials.

  Manobala was an actor in the line of Manivannan.He would dominate his fellow actors by his satirical tone and bullying words that would ultimately boomerang and force him to surrender to his own designs.Manobala could not be called an expert in delivering emotions like Manivannan.But his comedy side always helped him to create the greatest appeal to draw the audience to his side.His lank and lean constitution was stuffed with fatty lot of hmour to be remembered as a monumental comedy giant  in association with actors like Ragava Lawrence,Vadivelu Vivek,Santhanam Soori, Mayilsamy and several others.

  As his films were many and as his roleplay was always unique,titles of films do not matter.It is Manobala that matters,because his sync with all actors was significant in all the films that he did.Lean and less in size,but lofty and leading in performance! That was Manobala.He deserves our loving memories.

                                                   ===========0============


ஆசை !ஆசை !

   ஆசையில்லா மனிதரில்லை; ஆசையில் லையேல் வாழ்வில் அர்த்தமில்லை. ஆண்டி முதல் அரசன்வரை,அறிஞன் முதல் அசடன் வரை, அனைவரும் அயராது தோண்டிப் பார்க்க நினைக்கும் புதையலே ஆசை.மண் ணாசை,பெண்ணாசை பொன்னாசை என்று பிரிக்கப்பட்டு,அவற்றை அடைவ தற்கு அதிகார வேட்கை கொண்டுஅலையும் பயணமே வாழ்க்கை!அதற்கான தேடலே ஆசை!.

 "எட்டடுக்கு கட்டிடத்தில் எத்தனை ஓட்டை இதில் நல்ல ரத்தம் உள்ளமட்டும் எத்தனை சேட்டை" என்று பாடியது போல், வாடகைக்கு வாங்கிய உடலெனும் வீட்டிற்கு, ஆசையில் தோரணம் கட்டுகிறது மனம்.இறுதியில், "எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு ; தொல்லை இன்றியே தூங்கிடும் வீடு" என்று ஆனபின்பு ஆசை உறங்குவது கண்டு,அதன் அங்கலாய்ப்புகளை ஆன்மா கலாய்க்கிறது.

  ஆசையின் அங்கலாய்ப்புகளை உணர்ந்து தானோ என்னவோ,கண்ணதாசன் ஆசை யை துன்பத்தின் துவக்மாகக் கண்டு,

"ஆசை வைத்தால் அது மோசம்

அன்பு வைத்தால் அது துன்பம்

பாசம் கொள்வது பாவம் 

பழகிப் பிரிவது துயரம்" 

  என்று நொந்துபோன மனதின் வேதனை யை வரிகளாக்கி 'தங்கமலர்'எனும் திரைப் படத்திற்கு அதனை காணிக்கையாக்கி னார்.டி.ஜி.லிங்கப்பா இசையமைக்க, P.B.சீனிவாஸ் தனது மிருது வான குரலால் அப்பாடலை நினைவில்  அதிர்வலைகளாக் கினார்.

   ஆனாலும் ஆசைக்கடலில் ஆபரணத் தோணி ஓட்டும் திரையுலகு, தலைப்பு களால்,கதைக்களத்தால், வசனங்களால் பாடல்களால்,ஆசைக்கு நினைவுச் சின்னம் எழுப்புகிறது.வழக்கம் போல்,இதில் தமிழ்திரையுலகும் ஆசையுடன் களமிறங்கி, வரலாறு படைத்திருக்கிறது.  

   தமிழில் முதலில் M.நடராஜன் இயக்கத் தில் ஜெமினி கணேசனும் பத்மினியும் இணைந்து நடித்த 'ஆசை'(1956)திரைப்படம் வெளிவந்தது பின்னர் அதே'ஆசை'எனும் பெயரில் அஜித்தும் சுவலட்சுமியும் நடித்த திரைப்படம் வசந்த் இயக்கத்தில் 1995-இல் வெளியானது.ஆசையை மைய்யப்படுத்தி 'ஆளுக்கொரு ஆசை' 'அண்ணாவின் ஆசை' 'ஆசை அண்ணா அருமை தம்பி' 'ஆசை முகம் ''ஆசை அலைகள்''என் ஆசை மச்சான்''ஆசையில் ஓர் கடிதம்'போன்ற பல்வேறு தலைப்புகளைக்கொண்ட திரைப்படங்களை நாம் காண நேர்ந்தது.

  ஆசையை குறிப்பிட்டு முதலில் நாம் கேட்ட பாடல்,தஞ்சை N. ராமதாஸ் எழுதி ஜமுனா ராணியின் மனம் மயக்கும் குரலில்,    

"ஆசையும் என் நேசமும் 

ரத்த பாசத்தினால் ஏங்குவதை பாராயடா

என் ஆவலும் நிறைவேறிடும் 

என் ஆருயிரே நீ அருகில் வாராயடா"

எனும் ஆருயிரை அரவணைத்த வரிகளாகும்.

  விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் இப்பாடல் 'குலேபகாவலி'திரைப்படத்தை கலாபக்காதல் செய்யத் தூண்டியது. 

  இதைத்தொடர்ந்து தத்துவ சிந்தனையுடன் கவியரசு கண்ணதாசனின் கற்பனை ஊற்றில் பெருக்கெடுத்த,காலம் வென்ற பாடலே,'தை பிறந்தால் வழி பிறக்கும்' திரைப்படத்தில் திருச்சி லோகநாதனின் கணீர் குரலில் ஒலித்த, 

"ஆசையே அலைபோலே

நாமெலாம் அதன் மேலே 

ஓடம்போல் ஆடிடுவோமே 

வாழ் நாளிலே" 

  இப்பாடலின் ஒவ்வொரு வரியும் நம் நெஞ்சில் நிறையும் வண்ணம்,அற்புதமாய் இசையமைத்திருந்தார் திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்           

  இதனைத் தொடர்ந்து'கல்யாண பரிசு' திரைப்படத்தில் ஒலித்தது,ஏ.எம்.ராஜா ஜிக்கி குரல்களில் இதமாய் நம்மை களிப்பூட்டிய,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின், 

"ஆசையினாலே மனம் 

அஞ்சுது கெஞ்சுது தினம் 

அன்புமீறி போனதாலே

அபிநயம் புரியுது முகம்"

  எனும் பாடல்.இத்தேனிசை  கீதத்திற்கு ஏ.எம்.ராஜாவே அவரது மென்மையான குரலுக்கு இசை தந்து, குணம் கண்டார். 

  ஜமுனா ராணியின் குரலில் கேட்ட பாடலைப்போல் நம்மை பரவசமூட்டிய மற்றொரு பாடலே,'மறுபடியும்'திரைப்படத் தில் இசைஞானியின் இசையில் எஸ். ஜானகி குழைந்து குதூகலம் கண்ட,

"ஆச அதிகம் வச்சு 

மனச அடக்கி வைக்கலாமா,

என் மாமா;

ஆள மயக்கிபுட்டு 

அழக ஒளிச்சு வைக்கலாமா,

என் மாமா"

  எனும் வாலியின் வசீகரிக்கும் வரிகள். இளையராஜாவின் இசை பின்னூட்டத் திலும்,ஜானகியின் கவர்ந்திழுக்கும் குரலிலும்,நம் ஆசையை கட்டவிழ்த்தது இப்பாடல். இது போல கட்டவிழ்க்கப்பட்ட ஆசையை,காற்றில் தூதுவிடும் கபடநாடகக் கலையாகக் கற்றுத்தந்த மற்றொரு பாடலே,'ஜானி' திரைப்படத்தில் S.P.ஷைலஜா பாடிய,

"ஆசைய காத்துல தூதுவிட்டு

ஆடிய பூவுல வாடை பட்டு

சேதியைக் கேட்டொரு ஜாடை தொட்டு

பாடுது பாட்டு ஓண்ணு

குயில் கேட்குது பாட்ட நின்னு" 

எனும் கங்கை அமரன் எழுதி அவரது தமையன் இசை ஞானி இளையராஜா இன்பம் பொங்கச் செய்த இதமான வரிகளாகும்

   இந்த பாடலுக்கு முன்னரே வந்திருந்தா லும்,இதற்கு எசப்பாட்டு பாடுவதுபோல அமைந்திருந்தது அறிஞர் அண்ணாவின் கதைக்களத்தில் உருவான'காதல் ஜோதி' திரைப்படத்தில் சுப்பு ஆறுமுகம் எழுதி, டி.கே.ராமமூர்த் தியின் இசையில் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய,  

"உன்மேல கொண்ட ஆச உத்தமியே நித்தமுண்டு

சாத்தியமா சொல்லுறேண்டி தங்க ரத்தினமே

தாளமுடியாது கண்ணே பொண்ணு ரத்தினமே" 

  பின்னர் "ஆசை ஆசை" என்று அடுக்குத் தொடராய் நம் நினைவில் நின்ற பாடல்கள் இரண்டு உண்டு.இந்த வகையில் முதலில் நாம் கேட்ட பாடல், லிங்குசாமியின் 'ஆனந்தம்'திரைப்படத்தில் கே.ஜே யேசு தாஸ் பாடிய, 

"ஆசை ஆசையாய் இருக்கிறதே 

இதுபோல் வாழ்ந்திடவே

பாச பூ மழை பொழிகிறதே 

இதயங்கள் நனைந்திடவே" 

   கவிஞர் கலைக்குமாரின் தூய்மையான ஆசை சிந்தனையை,எஸ்.ஏ ராஜ்குமார் தனது மென்மையான இசைத்துளிகளால் மெருகூட்டினார்.இதே போன்று 'தூள்' திரைப்படத்தில் பா.விஜய்யின் கவித்துவத் தில் விளைந்து சங்கர் மகாதேவன், சுஜாதா குரல்களில் நம் உணர்வுக்கூட்டினில் துள்ளிவிளையாடிய, 

"ஆசை ஆசை 

இப்பொழுது பேராசை 

இப்பொழுது ஆசைதீரும் 

காலம் எப்பொழுது" 

  எனும் வரிகள்,வித்யாசாகரின் இசையில் கேட்போரை ஆடவைத்து ஆனந்தம்பரப்பின.

  காதலர்களின் நெஞ்சங்களில் ஆசையை நிதானமாய் நிரப்பிய பாடலொன்று விஜய் யின் 'மின்சார கண்ணா' திரைப் படத்தில் இடம் பெற்றிருந்தது.ஹரிஹரனும், சுஜாதாவும் லயித்துப்பாடிய, 

"உன்பேர் சொல்ல ஆசைதான் 

உள்ளம் உருக ஆசைதான் 

உயிரில் கரைய ஆசைதான் 

......................................................

உன்தோள் சேர ஆசைதான் 

உன்னில் வாழ ஆசைதான் 

உனக்குள் உறைய ஆசைதான்" 

   என்று அடுக்கடுக்காய் ஆசைகளை மூட்டி அழகுபார்த்த வாலியின் வரிகளை, தேனிசை தென்றலாக்கினார்,தேவா.

  தாயையும்,தாய்ப்பாசத்தையும்,காசிருந் தாலும் ஆசைப்பட்டாலும் வாங்க முடியாது என்றது'வியாபாரி'எனும் திரைப்படத்திற் காக கவிஞர் பரிணாமன் எழுதிய, 

"ஆச பட்ட எல்லாத்தையும் 

காசிருந்தா வாங்கலாம்

அம்மாவ வாங்க முடியுமா 

நீயும் அம்மாவ வாங்க முடியுமா" 

  எனும் மனம் நெகிழ்ச் செய்த பாடல். ஹரிஹரன்,உன்னிகிருஷ்ணன்,சுஜாதா எனும் மூவரின் கூட்டுக்குரல்களில் அமைந்த பாடல்,தேவாவின் இசையில் ஆசையை ஓரம் கட்டி,பாசக்கொடி படர விட்டது.

  இப்படி ஆசையைப்பற்றி இன்னும் எத்தனையோ தமிழ்த்திரைப்பாடல்கள் இருக்கக்கூடும்.ஆனால் அவற்றை எல்லாம் மிஞ்சி,பிரம்மாண்ட ஆசைகளை அனுத் திரளாக்கி நம்மை இன்பத்தில் அதிரவைத்த பாடலே,ஏ.ஆர்.ரஹ்மானின் தொடக்கப் படமான 'ரோஜா'வுக்காக கவிப்பேரரசு வைரமுத்து புனைந்த, 

"சின்ன சின்ன ஆசை 

சிறகடிக்க ஆசை" 

  எனும் மின்மினியின் விண்ணைத்தொட்ட பாடல்.வரிக்கு வரி பெரிய பெரிய ஆசை களை சிறியதாக்கி,சீரும் சிறப்பும் ஆசை யிலும் உண்டு எனும் உண்மையை,சரித்திர மாக்கிய இப்பாடல்,ஆசைக்கு மகுடம் சூட்டியது. 

   வெண்ணிலவைத் தொட்டு முத்தமிடவும், தன்னை இப்பூமி சுற்றிவரவும்,மணம் பரப்பும் மல்லிகையாய் மாறிவிடவும், தென்றலுக்கு மாலையிட்டு,சோகங்களை வீசிவிட்டு,கணக்கற்ற ஆசைகளால் உலகையே கார்குழலில் கட்டிவைக்கவும் ஆசைப்பட்ட இப்பாடலின் கற்பனையில், ஆசையே மிரண்டு,சுருண்டு விழுந்தது .

"சட்டி சுட்டதடா

கை விட்டதடா"

என்று ஆசையை உதறித்தள்ள நினைத் தாலும்,

"விட்டுவிடும் ஆவி 

பட்டுவிடும் மேனி 

சுட்டுவிடும் நெருப்பு 

சூனியத்தில் நிலைப்பு"

  என வாழ்வின் வெறுமை விதைகளை மண்ணில் விதைத்தாலும்,மனிதம் தழைப்ப தென்னவோ ஆசைகளின் உரத்தினிலே தான்.ஆசை கொள்வோம்,ஆயுள் வரை, அடுத்தவர் மனம் நோகாமல்!ஆன்மாவுக் கும் ஆசை உண்டு,சிவலோக பதவி பெற!.      

ப.சந்திரசேகரன்.