Friday, October 21, 2022

மாதங்களைக் கொண்டாடும் தமிழ்த்திரை.

   காலத்தின் வரைவுதனில் காவியங்கள் இளைப்பாறும்.கால ஓட்டத்தில் நொடிகள் மான்களென துள்ளிக் குதித்து,நிமிடங் களாய் நேரங்களாய், நாட்களாகி,வாரங்களின் நீட்சியில் மாதங்கள் பன்னிரெண்டாய்,வருடம் ஒன்றாகும்.

 "ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்"என்பர் வாழ்வியல் கவிஞரெல்லாம்.'அந்த ஒரு நிமிடம்'என்று பின்னோக்கிப் பயணிக்க பலரின் வாழ்க்கையில் மறக்க வொண்ணா தருணங்கள் உண்டு.காலத்தை மீறிய வாழ்க்கை இல்லை. ஆனால் காலத்தை வென்ற மனிதர்களும் அவர் தம் மகத்துவமும் வரலாறாய், இலக்கியமாய், திரைச் சுவையாய் நிலைப்பதுண்டு.

  மாதங்களின் பெயர்களை தலைப் புகளாய்க் கொண்டு'தை பிறந்தால் வழி பிறக்கும்''தை பொறந்தாச்சு', 'சித்திரா பௌர்ணமி''வைகாசி பொறந்தாச்சு','ஆடிப் பெருக்கு', 'கார்த்திகை தீபம்'போன்ற தமிழ்மாத திரைப்படங்களும்,ஜனவரி 1, பிப்ரவரி14,ஏப்ரல் மாதத்தில்,மே மாதம், ஜூன் R,டிசம்பர் பூக்கள் எனும் ஆங்கில மாதங்கள் போற்றும் திரைப்படங்க ளும் பல்வேறு கதைகளுடன் வெள்ளித் திரை கண்டன.

  மாதங்கள் வாழ்த்தும் தமிழ்த்திரை கானங்கள் செவிகள் நிறைத்து மனதில் மகுடம் சூட்டிக் கொண்டன. முதலி்ல் தமிழ் மாதங்களைக் கொண்டாடிய பாடல்களைப் பார்ப்போம்.இதில் முதன்மையான, 

"தை பொறந்தா வழி பொறக்கும் 

தங்கமே தங்கம்

தங்க சம்பா நெல் விளையும் 

தங்கமே தங்கம்"

  எனும் அ.மருதகாசியின் பாடல், கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ்,P.லீலா,எல்.ஆர். ஈஸ்வரி, மற்றும் பொன்னுசாமி ஆகியோர் குரல்களில் காலம் வென்றது.மாசி மாதத்தில் தேன்கலந்து சுவை கூட்டிய பாடலே 'தர்மதுறை'திரைப் படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் ஸ்வர்ணலதா மனம் மயங்கிப் பாடிய,

"மாசி மாசம் ஆளான பொண்ணு 

மாமன் எனக்கு தானே

நாளை எண்ணி நான் காத்திருந்தேன் 

மாமன் உனக்குத்தானே"

எனும் இசைஞானியின் இசையில் நனைந்த,பஞ்சு அருணாச்லத்தின் பாடல்.

  பங்குனி மாதத்தை முன் நிறுத்தி சித்திரை மாதத்தை எதிர்நோக்கும் பாடலே 'தேடி வந்த செல்வம்'திரைப் படத்தில் டி.ஜி.லிங்கப்பாவின் இசையில் மனம் குழையச்செய்த, தஞ்சை ராமைய்யாதாஸின், 

பங்குனி போயி சித்திரை வந்தா பத்திரிக்க

வந்துடும்  

கல்யாண பத்திரிக்க வந்துடும் 

அதபாத்தவுடனதான் எனக்கு 

நித்திரையும் வநதுடும்"

எனும் டி.எம்.எஸ்.P.சுசிலா குரல்களில் ஒலித்த எளிமையான வரிகள்.

 'ராமன் எத்தனை ராமனடி' திரைப் படத்தில் சித்திரை மாதத்தை சிறகடித்துப் பறக்கச்செய்த பாடலே, P.சுசிலா ஏகாந்தமாய்ப் பாடிய,

"சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்

முத்துரதங்கள் ஊர்வலம் போகும்" 

எனும் மெல்லிசை மன்னர் மகத்துவமாய் மெட்டுகட்டிய,கவியரசு கண்ணதாசனின்,ரயில் பயணப் பாடல்.

  'நினைவுச்சின்னம்'திரைப்படத்தில் வைகாசி மாசத்திற்கு வாழைமரம் கட்டியது இளயராஜாவின் இசையில் இளையோன் கங்கை அமரனின் பாடல் வரிகளா

வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு
ரெண்டு வாழை மரம் கட்டபோறேன்டி

  என்று எஸ்.பி.பி.யும் கே.எஸ் சித்ராவும் இசையால் வாழைமரத் தோரணம் கட்டிய பாடல்.

  ஆனி மாதத்தையும் ஆவணி மாதத்தையும் ஒன்றாகக் கோர்த்து தேனிசையாய் வந்தது'பாமா விஜயம்' திரைப்படத்தில் P.சுசிலா,சூலமங்களம் ராஜலட்சுமி,எல்.ஆர் ஈஸ்வரி மூவரும் மகிழ்ச்சியில் மனமுவந்து பாடிய

"ஆனி முத்து வாங்கிவந்தேன் 

ஆவணி வீதியிலே;

அள்ளி வைத்து பார்த்திருந்தேன் 

அழகுக் கைகளிலே" 

எனும் மெல்லிசை மன்னரின் இசையில் ஊரிய கண்ணதாசனின் வரிகள்.

   அதே போன்று ஆடி,ஜப்பசி இரண்டு மாதங்களையும் ஒருசேர அன்பால் அணைத்து,நம்மை மனமுருகச்செய்த பாடலே 'வில்லன்' திரைப்படத்தில் வித்யாசாகரின் இதமான இசையில் நனைந்த, 

"ஆடியல காத்தடிச்சா ஐப்பசியில் மழையடிக்கும்

ஆறுகுளம் ஊத்தெடுக்கும் அன்பு மகனே"

எனும் பாடு நிலா எஸ்.பி.பி குரலில்,குளிர்ந்த பாடல்.

  இதே எஸ்.பி.பி,எஸ்.ஜானகயுடன் இணைந்து இளையராஜாவின் இன்னிசையில் வாலியின் வரிகளை கும்மாளமாக்கியது,

"ஆடி மாச காத்தடிக்க வாடி உன்ன சேத்தணைக்க

மானே மாங்குயிலே" 

எனும் ரஜினியின்'பாயும் புலி' திரைப்படப்பாடல்.

  ஆவணி மாதத்தை மங்கையுடன் சுவைக்க வைத்து,சுகம் கண்ட பாடலே, 'உத்தரவின்றி உள்ளே வா'திரைப் படத்தில் காதலைக் கொண்டாடிய,

"மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி

நாளிலே நள்ள நாள் நாயகன் வென்ற நாள்"

   எனும் காதல் களிப்பேற்றிய பாடல்.எஸ்.பி.பி  P.சுசிலா ஆகியோ ரின் தெவிட்டாக்குரல்களில், தென்றலாய் வீசிய இப்பாடலை, கவியரசு எழுத மெல்லிசை மன்னர் இசையால் இனிக்கச் செய்தார்.

    தீபத்தை கையல் ஏந்தி கார்த்திகை மாதத்தை. காணச்செய்தது 'வீரத் திருமகன்'திரைப்படத்தில் P.சுசிலா குழுழனவினருடன் பாடிய 

"ஏற்றுக தீபம் போற்றுக தீபம்

கார்த்திகை தீபம்"  

   எனும் விஸ்வனாதன் ராமமூர்த்தி யின் இரட்டை சிறகுகளில் பறந்த, ஒற்றைக்கவிஞன் கண்ணதானின் பாடல் பறவை.

  மார்கழி என்றவுடன் மார்பில் குழவி எனத் தழுவுகின்ற இரண்டு பாடல்கள் உண்டு.'சங்கமம்' திரைப் படத்தில் உன்னிகிருஷ்ணன் மதுமிதா குரல்களில் நம்மோடு கொஞ்சி விளையாடிய,

"மார்கழி திங்களல்வா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும் பொழுதல்லவா".

  எனும் ஏ.ஆர்.ரெஹமான் இசையில், என்றும்  சோடைபோகாத மற்றுமொரு கண்ணன் பாடலாய் அமைந்த வைரமுத்துவின் மகத்தான வரிகள்.

   புனிதமாகப் பலரால் கருதப்படும் மார்கழி மாதத்தின்  பெயர் போற்றும் இன்னொரு பாடலே,மே மாதம் திரைப் படத்தில் இடம் பெற்ற

"மார்கழிப்பூவே மார்கழிப்பூவே

உனமடிமேலே ஓர் இடம் வேண்டும்"

  எனும் ஷோபா சங்கரின் கனமான குரல்களில் ஏக்க மலர்கள் தூவி,மணம் பரப்பிய பாடல்.இந்த நெஞ்சை முட்டும் வரிகளும் கவிப்பேரரசின் கற்பனை யில் இசைப்புயலின் தணிந்த வேகத் தில் நம் எல்லோயையும் இனம் புரியா ஏக்கத்தில் தள்ளியது.

   மார்கழி மாத்தின் மகிமையை பெண்மைக்கு வழங்கி கவுரவித்த, 'பாவமன்னிப்பு'திரைப்படத்தின் "மாதங்களில் அவள் மார்கழி"எனும் வரி, P.B.சீனிவாஸ் பாந்தமாய்ப்பாடிய "காலங்களில் அவள் வசந்தம்" பாடலுக்கு,பிரகாசம் கூட்டியது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவிதைச்சிறப்பில், காலத்தில் நின்ற பாடலிது.

   மார்கழி மாதத்துடன் மோகமும் கலந்து நம்மை மயக்கத்தில் திக்குமுக்காடச் செய்த பாடலொன்று சிவாஜி கணேசனும் சாவித்திரியும் ஜோடி சேர்த்து நடித்த பிராப்தம் திரைப்படத் தில் இடம் பெற்றிருந்தது. நடிகை சந்திரகலாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி இனிமையாய்ப்பாடிய,

இது மார்கழிமாதம் 

இது முன்பனிக்காலம்

கண்ண மயக்குது மோகம்

ஏன் நடுங்குது தேகம்

 என காதல் மயக்கத்தை கவிதை யாக்கி எம்.எஸ்.வி இசையில் மனக் கண்களுக்கு தையலால் மையிட்ட கவியரசின் வரிகள்.

 மேற்சொன்ன பாடல்களில் புரட்டாசி மாதப் பெயர் அல்லாது இதர பதினோரு மாதங்களின் பெயர்களும் ஒரு முறையோ அல்லது இருமறையோ இடம் பெற்றிருந்ததைக் காணலாம்.

   ஆங்கில மாதங்களைப் பொறுத்த வரை, திரைப்பட தலைப்புகளில் ஓரளவு இடம்பெற்றிருந்தாலும் பாடல்கள் மிகக்குறைவே. அவற்றில் 'இதயம்' படத்தில் இளைஞர்களின் ஏமாற்றத்தை பிரசவித்த, 

"ஏபரல் மேயிலே பஙுமையேயில்ல

காஞ்சு போச்சுடா"

  என்ற இளயராஜா இசையமைத்து தானே தீபன் சக்ரவர்த்தி  எஸ்.என் சுரேந்தருடன் சேரந்து பாடிய, வாலியின் பாடலும், சரணின் 'ஜே ஜே' படத்தில் சுசித்ரா,ரீமா சென்னுக்காக பரத்வாஜ் இசையில் பாடிய,

"மே மாச தொன்னூத்தெட்டில் மேஜர் ஆனேனே" 

எனும் வைரமுத்தவின் மாறுபட்ட பாடலும்,

  'பிரியமானவளே' திரைப்படத்தில் வாலியின் வரிகளிலும் எஸ்.ஏ.ராஜ் குமார் இசையிலும் அமைந்து,சங்கர் மகாதேவன் &ஹரினி குரல்களில் குதூகலம் பரப்பிய,

"ஜூன் ஜூலை மாத்தில் 

ரோஜாப்பூவின் வாசத்தில்

ஜூனியர் சூரியன் கையில் கிடைக்கும்"

  பாடலும்,அதே வாலி வரியமைத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசை கொட்டி, கிருஷ் மற்றும் அருணும் பாடிய

"ஜூன் போனால் ஜூலைக் காற்றே 

கண் பார்த்தால் காதல் காற்றே"

  எனும் 'உன்னாலே உன்னாலே' திரைப்படப் பாடலும், இறுதியாக 'அலைபாயுதே' திரைப்படத்தில் ரெஹ்மானின் இசையில் சங்கர் மகாதேவனும் பிரபல இந்திப் பாடகர் ஆஷா போஸ்லேயும்  உரத்த குரல் களின் கரகோஷத்தால் பரவசமூட்டிய

"செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம்

வாழ்வின் துன்பத்தை தொலைந்து விட்டோம்

அக்டோபர் மாதம் அக்டோபர் மாதம்

வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம்"

  எனும் வைரமுத்தவின் மாத முரண் பாடுகளை முன் நிறுத்திய பாடலும், தமிழ்த்திரையுலகின் ஆங்கில மாதப் பெருமைகளாகும்.

   மாதங்கள் கால ஓட்டத்தின் எல்லைக்கற்கள்.அந்த எல்லைக்கற் களை கவிதை மாலைகளாய் தொடுத்து பல இசைக்கரங்களால் அலங்கரித்த அற்புதத்தை, தமிழ்த் திரை தளராது அரங்கேற்றியது என்பதை,இப்பதிவில் கண்டோம். விட்டுப் போன மாதங்களும் அவை பற்றிய பாடல்  வரிகளும் நினைவுப் புத்தகத்தின் சில மறதிப் பக்கங்களே!மாதங்களோடு சேர்த்து மாதங்களை சிரசில் ற்றிய பாடல் களையும், மனமகிழ்ந்து போற்றுவோம்!

               ============0============







Wednesday, October 12, 2022

Jamuna's gentle acting profile.

   



   Jamuna one of the prime actresses of Telugu Cinema has also had a scintillating stint in Tamil Cinema,with her captivating eyes and graceful reflection of womanhood.She would have acted in nearly 200 Telugu films but her appearance in Tamil films will be less than 15% of her Telugu contribution.Nevertheless,she made herself memorable in Tamil Cinema too.

  Starting her career in Tamil Cinema,with the film Panam Paduthum Paadu along with N.T.Ramarao and Sowcar Janaki, Jamuna went on to act with topnotch heroes like MGR,Sivaji Ganesan,Gemini Ganesan,A.Nageswararao and Jai Shankar.

   Jamuna's single film with MGR was Thai Magalukku Katyiya Thaali.Whereas,with Sivaji Ganesan she made a mark in films like Thenaly Raman,Bommai Kalyanam, Thangamalai Ragasiyam,Nichaya Thamboolam and Marudha Naattu Veeran.Of these,Thangamalai Ragasiyam with the historic P.Suseela's number "Amudhai Pozhiyum Nilave"will live long in audience memory as one of the most remarkable Tamil films of Jamuna.Same is the case with Sridhar's Nichaya Thamboolam showing Sivaji as a suspicious husband and Jamuna as his docile and dignified wife.Songs of T.M.Soundarajan like"Paavaadai Thaavaniyil Paartha Uruvama" and 'Padaithaane Manidhanai Aandavan Padaithaane"will bring the entire theme and narration of the storyline of the film, besides throwing light on the anguished and victimized character of Jamuna.

   Jamuna was paired with Gemini Ganesan in Nalla Theerpu and with Nageswara Rao in films like Thiruttu Raman,Pakka Thirudan and Manidhan Maaravillai.As a spolit daughter of rich and aristocratic parents,Jamuna perfectly fitted into characters in films like Missiamma, Manidhanai Maaravillai and Kuzhandhai yum Dheivamum.In Manidhan Maaravillai it was really a treat to watch her getting transformed into a perfectly understanding wife of Nageswararao from a pampered daughter of a wealthy woman {Sundaribai}who was the incarnation of greed.Manidhan Maaravillai was a breezy movie retold from its original Telugu version.The way Nageswararao would transform his wife Jamuna into a responsible wife was shown with immacculate grace and humour.The song "Kaadhal Yaathiraikku" sung by A.L.Ragavan and P.Suseela,is one of my most heart throbbing tunes from Tamil cinema.

   Kuzhandhaiyum Dheivamum was an excellent film released under the AVM banner.Paired with Jaishankar,an economically ill placed man in the film,Jamuna had to undergo the tormenting ordeal of separation from her husband,whom she ardently loved,on account of her wealth-conscious,snobbish and scheming mother,{neatly played by G.Varalakshmi}.As the title goes,Jaishankar and Jamuna were blessed with two daughters born as identical twins.Owing to the foul scheming of Jamuna's mother,the couple would get separated and the twins{powerfully played by Kutti Padmini} would also be separated between the two parents.The film came to a happy end with the clever daughters suceedding in their contrived moves,towards uniting their parents, besides reforming the attitude and behaviour of their grandmother. 

  Kuzhanthaiyum Dheivamum was one of the brilliant films from AVM Productions and the memories of this wonderful film will be ever haunting audience memory as a great tale well told through the ripe role play of actors like Jaishankar, Jamuna, Nagesh,T.K.Bhagavadhi,G.Varalakshmi, and the cute little girl Kutti Padmini.

  Jamuna's modest performance in that film exhibited her magnificent feminine fortitude and facial felicity.She poignantly brought out the radiance of romance and the ripping pains of love and separation. Songs of the film(Anbulla Mannavare sung by TMS and P.Suseela and the other song Kozhi Oru kootiile,Seval oru  koottile charmingly rendered by M.S.Rajeswari, Naan Nanri Solven En Kangalukku, Pazhamudhircholaiyile and Kuzhandhaiyum Dheivamum Gunathaal Onru all sung by P.Suseela)would perpetuate the grandeur of the film.Above all,this was one of the top most Tamil films of Jamuna,which endeared her more to the Tamil audience.

   Jamuna was last seen in another A.V.M banner film Thoongaadhe Thambi Thoongaadhe as the mother of Kamal in dual roles,again as identical twins . Jamuna's restrictive contribution to Tamil cinema radiates her quality of performance as a multi lingual actor enthralling the Tamil film goers with natural grace in looks and governance in portrayal of roles with control, commitment and concern for meanigful depiction of characters.This post is a special dedication to a former glorious actress,who is in her mid eighties now.

Sunday, October 2, 2022

தமிழ்த்திரையில் திரண்ட ஊர்கள்

"எந்த ஊர் என்றவனே

இருந்த ஊரைச் சொல்லவா 

அந்த ஊர் நீயும் கூட 

அறிந்த ஊர் அல்லவா"  


  என்று தொடங்கும் பாடலொன்று எஸ்.எஸ்.ராஜேந்திரன் &பத்மினி இணைந்து நடித்த 'காட்டு ரோஜா'எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந் தது.கே.வி.மகா தேவன் இசையில், P.B.ஸ்ரீனிவாஸ் பாடிய கண்ணதாச னின் இந்த அரிய பாடலில்,உடலூர், உறவூர்,கருவூர்,மண்ணூர்,கண்ணூர், கலையூர்,காலூர்,காளையூர் விழியூர், பாலூர் காதலூர்,கன்னியுர்,கீழூர், சேர்த்து,மேலூர் வேலூர்,பள்ளத்தூர், கடலூர்,மேட்டூர் போன்ற தமிழக ஊர்களும் இடம்பெற்றிருந்தன. கற்பனையால் எண்ணற்ற மாய ஊர்களைப் படைத்தார் கவியரசு கண்ணதாசன்.

  ஊர்களின் பெயர்களைத் தாங்கி நம்ம ஊர் நாயகன்,ஊர்க்காவலன்,ஊர் மரி யாதை,நம்ம ஊரு நல்ல ஊரு,எங்க ஊரு பாட்டுக்காரன்,எங்க ஊரு காவக் காரன்,தம்பிக்கு எந்த ஊரு,தம்பிக்கு இந்த ஊரு,படங்கள் மட்டுமல்லாது, ராமராஜனின் வெள்ளி விழாப் படமான கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நகைச்சுவையாய் அமைந்த, 

"ஊருவிட்டு ஊரு வந்து

காதல் கீதல் பண்ணாதீங்க"

 எனும் பாடலின் முதல் வரியே,பின்னர் அதே ராமராஜனின்,வேறொரு திரைப் படத் தலைப்பாயிற்று.

   ஊரைச்சுற்றிவந்த திரைப்பாடல் களில்'தேனிலவு'திரைப்படத்தில் தன்னை ஏமாற்றுபவனை நல்லவன் என ஒரு பெண் நம்பிப்பாடுவதாக அமந்த,ஜிக்கி குரலில் நாம் கேட்ட, 

"ஊரெங்கும் தேடினேன் 

ஒருவரைக் கண்டேன்

அந்த ஒருவரிடம் தேடினேன்

உள்ளத்தைக் கண்டேன்" 

  எனும் ஏ.எம்.ராஜாவின் இசையில் அமைந்த பாடலும்,'படிக்காத மேதை" திரைப்படத் தில் அதே கண்ணதாசன் வரிகளை கே.வி.மகாதேவன் இசையமைக்க,டி.எம்.எஸ்ஸும் சூலமங்கலம் ராஜலட்சுமியும் பாடிய, 

"ஒரே ஒரு ஊரிலே ஓரே ஒரு ராஜா

ஒரே ஒரு ராஜாவுக்கு ஒரே ஒரு ராணி"

  எனும் தெளிந்த நீரோடையாய் அமைந்த பாடலும்,ரஜினியின்'படிக்கா தவன்'திரைப்படத்தில் கே.ஜே. ஏசுதாஸ் அட்டகாசமாய்ப் பாடிய,

"ஊரத் தெரிஞ்சுகிட்டேன்

உலகம் புரிஞ்சுகிட்டேன்

கண்மணி ஏங்கண்மணி"

எனும் இளையராஜாவின் மேலான இசையிலமைந்த,வைரமுத்தவின்  மேன்மைமிகுப் பாடலும் தனியிடம் பிடிக்கும்.

   ஊர்களின் பெயர்களைக் கொண்டு திரைப்படத்தலைப்புகளைப் படைப் பதில் மன்னராக விளங்கிய,        இயக்குனர் பேரரசுவின் இயக்கத்தில் உருவான,திருப்பாச்சி,சிவகாசி, திருப்பதி,பழனி,மருதமலை,தர்மபுரி திருவண்ணாமலை,மற்றும் திருத்தனி ஆகிய திரைப் படங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. இவற்றோடு ஆர்.கே. செல்வமணியின் 'செங்கோட்டை', பிரியதர்ஷனின் 'காஞ்சிவரம்' மணி ரத்னத்ணின் 'பாம்பே' ஆர்.பன்னீர் செல்வத்தின் 'ரேணிகுண்டா',பாரதி கண்ணனின், 'திருநெல்வேலி' ப.ரஞ்சித்தின் 'மெட்ராஸ்'போன்ற திரைப்படங்களும் வந்தன.மேலும் மாநிலங்களின் பெயர் வைத்து சரத்குமார் நடித்த 'ராஜஸ்தான்' எனும் படமும் தமிழ்திரை கண்டது.

   ஊர்களின் பெயருடன் கதாநாயகன்/ கதாநாயகியின் பெயரையும் கொண்ட, மதுரை வீரன்,செங்கோட்டை சிங்கம், மலையூர் மம்பட்டியான்,சேலம் விஷ்ணு,கோயம்பத்தூர் மாப்பிள்ளை, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், திண்டுக்கல் சாரதி,அம்பா சமுத்திரம் அம்பானி,ரெங்கூன் ராதா,சித்தூர் ராணி பத்மினி,போன்ற திரைப்படத் தலைப்புகளையும் தமிழ்த்திரை சந்தித்த துண்டு. இவை எல்லாம் போதாதென்று 'வேலூர் மாவட்டம்' என்ற தலைப்பிலும் ஒரு திரைப்படம் இறங்கியது.ஊர்களின் பெயர்களைத் தாங்கி பயணித்த,நீலகிரி எக்ஸ்பிரஸ், மதராஸ் டு பாண்டிச்சேரி,திருமலை தென்குமரி,சிம்ளா ஸ்பெஷல்,போன்ற நினைவில் வேரூன்றிய திரைப்படங் களும் உண்டு.

 பல ஊர்களின் பெயர்களை பரிச்சியப் படுத்தும் சில பாடல்கள் தமிழ்த்திரை யில் கேட்டிருப்போம்.இதற்கு ஆரம்பப் புள்ளி இட்டதே,'மக்களைப் பெற்ற மகராசி' திரைப்படத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ் பாடிய,

"மணப்பாற மாடுகட்டி 

மாயவரம் ஏறுபூட்டி

வயக்காட்ட உழுது போடு செல்லக்கண்ணு"

   எனும் மறக்கமுடியாத பாடல். இப்பாட லில் ஆத்தூர்,மதுரை, பொள்ளாச்சி, விருதுநகர் ஆகிய ஊர்களின் பெயர்கள் வலம்வரும்.இதே திரைப் படத்தில்,

"அடி தாராபுரம் தாம்பரம் 

உன் தலையில கனகாம்பரம்

அட ஏகாம்பரம் சிதம்ரம்

உன் இடுப்புல பீதாம்பரம்"

  என்று இரண்டு ஊர்களை உள்ளடக் கிய எஸ்.சி.கிருஷ்ணனும்T.G ரத்ன மாலாவும் பாடிய நகைச்சுவை பாட லொன்றும் ரசிகர்களை வெகுவாக மகிழ்வித்தது.இப்பாடலை,கவிஞர் தஞ்சை ராமைய்யாதாஸ் எழுதியிருந் தார்.

  பேரறிஞர் அண்ணாவின்'காதல் ஜோதி'திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் ஆனந்தமாய்ப்பாடிய,

"உன்மேல கொண்ட ஆச,உத்தமியே மெத்த உண்டு

சத்தியமா சொல்லுரேண்டி 

தங்க ரத்தினமே 

தாளமுடியாது கண்ணே 

பொன்னு ரத்தினமே"

என்ற காதல்சுவைப் பாட்டின் இடையே,

"ஈரோட்டு சந்தையிலே எனக்கு வேட்டி

எடுத்துக்குவோம்

காஞ்சிபுரம் சிலுக்குசேல தங்க ரத்தினமே

தந்து கண்ணாலம் கட்டிக்குவோம் தங்கரத்தினமே"

  எனும் இதயபூர்வமான வரிகள் இடம் பெரும்.இந்த சீர்காழியாரின் குழை வான பாடல்,டி.கே.ராமமூர்த்தியின் இனிய இசையில் நம் மனம் மயங்கச் செய்தது.

  இதே போன்று,கே.பாலச்சந்தரின் 'பூவா தலையா'திரைப்படத்தில்,

"மதுரையில் பிறந்த மீன்கொடியை

உன் கண்களில் கண்டேனே" 

  எனத்தொடங்கும் டி.எம்.சௌந்தர் ராஜன் பாடிய பாடலில்,தஞ்சை, காஞ்சி,குடந்தை, தூத்துக்குடி,போன்ற ஊர்களின் பெயர்கள் அணி வகுக்கக் காணலாம்.எம்.ஜி.ஆரின் 'தேர்த் திரு விழா'திரைப்படத்தில் ஜெயலலிதாவுக் காக பி.சுசிலா பாடிய,

"தஞ்சாவூரு சீமையிலே கண்ணு

தாவி வந்தேன் பொன்னியம்மா"

எனும் பாடல்,பூம்புகார்,மதுரை,ஆகிய ஊர்களைச் வேகமாகச் சுற்றி வரும்.  

    தஞ்சாவூரை முன் வைத்து வரையப் பட்ட  வைரமுத்துவின் வரிகளுக்கு தேவா இசையமைத்து பாடகர் கிருஷ்ணராஜ் பாடிய வசீகரப்பாடலே 'பொற்காலம்' திரைப்படத்தில் தொழி லோடு மணம்சேர்த்த,

"தஞ்சாவூரு மண்ணு 

தாமிரபரணி தண்ணிய விட்டு 

சேர்த்து சேர்த்து செஞ்சதிந்த பொம்ம

இது பொம்மையில்ல உண்ம"

எனும் ஒப்பற்றபாடல்.

இதே வேகத்தில்'சின்னப்பசங்க நாங்க' எனும் திரைப்படத்தில் இளைய ராஜாவின் இசையில் வாலியின் வரிகளை ரேவதி மற்றும் அவரைச் சுற்றியுள்ளோர் மகிழ்ச்சியுடன் பாடுவது போல,எஸ்.ஜானகி குழுவினருடன் பாடிய,

"என்னை மானமுள்ள பொண்ணு இன்னு 

மதுரையிலே கேட்டாக மன்னார்குடியில் 

கேட்டாக 

அந்த மாயவரத்துல கேட்டாக"

  எனும் சுகமான பாடலில், கோயமுத்தூர்,சின்னமனூர், கண்டமனூர்,மட்டுமல்லாது,மாநிலம் கடந்து 'நெல்லூரில கேட்டாக'என்றும், நாடு கடந்து,'சிங்கப்பூரில கேட்டாக' எனும் வேடிக்கையின் விருட்சத்தில், சுயப்பெருமை களைகட்டும். 

  மேலும்'அழகிய தமிழ்மகன்'திரைப் படத்தில் பென்னி யாள், அர்ச்சித், தர்ஷனா.கே.டி, ஆகியோர் குரல்களில் ஒலித்த,

"மதுரைக்கு போகாதடி 

அங்கே மல்லிப்பூ கண்ண வைக்கும்"

  என்ற பாடலில்,தஞ்சாவூர், தூத்துக்குடி,கொடைக்கானல் போன்ற ஊர்களின் பெயர்கள் பொங்கிவரும். இந்த மென்மையான பா.விஜயின் வரிகள்,ஏ.ஆர்.ரெஹமான் இசையில் தனி நர்த்தனமாடின.

 இசைப்புயல் ஏ.ஆர்.ரெஹ்மானின் ஏகபோக இசையில்,"யாதும் ஊரே யாவரும் கேளீர்"எனும் பாணியில் 'சிவாஜி'திரைப்படத்தில் ஆரவாரத்தை ஏற்படுத்திய,நா.முத்துகுமாரின், 

"பல்லே லக்கா பல்லே லக்கா

சேலத்துக்கா மதுரைக்கா மெட்ராசுக்கா

திருச்சிக்கா,திருத்தணிக்கா,

அண்ணன் வந்தா தமிழ்நாடும்

அமெரிக்கா"

  எனும் உலகளாவிய பாடலை எஸ்.பி.பி, பென்னி டயாள், ஏ.ஆர். ரெஹானா ஆகியோர் உற்சாகத்தை உரமாக்கி,பாடியிருந்தனர். 

  மதுரையின் பெயரைக் கொண்டாடிய வேறொரு பாடலை கார்த்தியும் கல்பனாவும்'திருவிளையாடல் ஆரம்பம்'திரைப்படத்தில் பரவசமாய்ப் பாடியிருந்தனர்.

"மதுர ஜில்லா மச்சான்தான்டி

என் ஜாதகத்தில் குரு உச்சம்தான்டி"

  எனும் விவேக்கின் குறும்புத்தனமான இப் பாடலில் 'பட்டுக்கோட்டை'எனும் ஊரின் பெயரும் இடம் பெரும். ஆடல் கலந்த இப் பாடலுக்கு D.இம்மான் இசையமைத்திருந்தார்.மதுரையின் மணம் பரப்பிய,நெஞ்சில் இனித்த மற்றொரு பாடலே'எங்க ஊரு பாட்டுக் காரன்'திரைப்படத்தில் மனோ,கே.எஸ் சித்ரா குரல்களில் நம்மை வசீகரித்த,

"மதுர மரிக்கொழுந்து வாசம்

என் ராசாத்தி ஒன்னுடைய நேசம்".     

    எனும் கங்கை அமரன் வரிகளிலும் இளையராஜாவின் இசை இனிமை யிலும்,தேனாய் இனித்த பாடல். 

 கமலின் 'பம்மல் சம்பந்தம்' திரைப் படத்தில் பா.விஜயின் வரிகள் கொண்டு,தேவாவின் இசையில் ஒலித்த பாடல் வரிகளே,

"திண்டுக்கல் பூட்ட போட்டு 

வாய பூட்டிக்கோ ஓஹோ 

கோயம்புத்துர் பஞ்ச வச்சி 

காத பொத்திக்கோ ஓஹோ 

ஏ காரைக்குடி உங்கப்பன் வீடு 

நீயும் போய்க்கோ ஓஹோ 

தஞ்சாவூர் பொம்மைக்கு 

இந்த தலைக்கணம் எதுக்கோ"   

 இந்த பாடலை சங்கர் மகாதேவனும் மகாலக்ஷ்மி அய்யரும் அமர்களமாய்ப் பாடியிருந்தனர். 

ஊரைச் சுற்றிவந்த பாடல்களில், ஊரைக்குறை கூறிய,

"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் 

இங்க மெதுவா போறவங்க யாருமில்ல; 

சரியா தமிழ் பேச ஆளுமில்ல;

ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

வித்யாசம் தோணல. 

அநியாயம் ஆத்தாடியோ!" 

  என்று வரிக்கு வரி,தமிழகத் தலை நகரைக் கிண்டலடித்த டி.எம் சௌந்த ராஜன் பாடலொன்று,கே பாலச் சந்தரின்'அனுபவி ராஜா அனுபவி' திரைப்படத்தில்,இன்னும் சென்னை வாழ் மக்களை மிரட்டிக் கொண்டிருக் கிறது.கண்ணதாசனின் இந்த விமர்சனப் பாடலுக்கு,மெல்லிசை மன்னர்,இசையால் கூடுதல் பலம் சேர்த்தார்.சென்னைக்குள் இருக்கும் இடங்களைக் குறிப்பிடும், 

"நான் ஜாம்பஜார் ஜக்கு நீ சைதாப்பேட்ட கொக்கு" 

எனும் மனோரமா பாடிய 'பொம்ம லாட்டம்'திரைப்படப் பாடலும், 'வண்டிச்சக்கரம்'திரைப்படத்தில் எஸ்.பி.பி பாடிய, 

"வா மச்சான் வா வண்ணாரப்பேட்ட"

பாடலும், 

'பம்மல் சம்பந்தம்'படத்தில் கமல் குழுவினருடன் பாடிய,

"ஆழ்வார் பேட்ட ஆண்டவா

வேட்டிய போட்டு தாண்டவா"

  எனும் பாடலும்,சென்னையை சுற்றி வரும் வித்தியாசமான பாடல்களாகும். இந்த பேட்டைகளைப்பற்றிய ஒர்'பேட்ட ராப்' பாடலும் சங்கரின்'காதலன்' திரைப் படத்தில் இடம்பெற்றது.

    மதுரையின் பெயர்கூறும் பாடல்கள் பலவும் மீனாட்சியின் புகழ் பரப்பின. 

"கூடலூரு குண்டு மல்லி 

வாட பிடிக்க வந்த வள்ளி "

  எனும் கங்கை அமரனின்'கும்பக்கரை தங்கைய்யா'திரைப்படப்பாடல் அவரின் அண்ணன் இசையில் மலேசியா வாசுதேவன்,கே.எஸ்.சித்ரா குரல்களில் மல்லியின் நறுமணத்தால் கும்பக்கரையையே கரைத்து  மணம் கமழச் செய்தது. 

  தமிழ்த்திரை வாகனத்தில் இப்பதிவு சுற்றிவந்த ஊர்கள் அதிகமில்லை. ஆனால்,பரந்து விரிந்த திரையுலகில் நாம் காணும் ஊர்கள்,நிசமான ஊர் களைக் காட்டிலும்,கற்பனையாலும் கருத்துக்களுக்காலும்,பார்க்கும் அல்லது கேட்கும் ஊர்களை,வரலாற் றுப் பக்கங்களில்,இதிகாசங்களாக்கு கின்றன. 

                 ======#======#======