Saturday, June 22, 2024

ஒருவனும் ஒருத்தியும்

 "தொல் உலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை"

என்கிறது தமிழ் மூதாட்டி  அவ்வையின் மூதுரை

  ஒருவர் நல்லவராயின் அவர் தயவில் உலகே மாண்புறுமாம்.அவ்வை மூதாட்டி யாகத் தோன்றி 'திருவிளையாடல்' திரைப்படத்தில் K.B. சுந்தராம்பாள் பாடிய, 

"ஒன்றானவன் உருவில் இரண்டானவன்"

 என்று சிவபெருமானை வரிசைப்படுத் திப்பாடிட,ஒருமை இல்லையேல் பன்மை இல்லை என்பதை உணரமுடிந்தது.

   அதே கே.பி.எஸ் 'பூம்புகார்' திரைப் படத்தில் கவுந்தி டிகளாகத் தோன்றிப் பாடிய, 

"ஒருவனுக்கு ஒருத்தி எனும் உயிர் மூச்சை உள்ளடக்கி 

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

 எனும் திருக்குறளை மறவாதே;திசை தவறிப்போகாதே" 

  என்று பாடிட,அப்பாடலில் பொதிந்துள்ள ஒருவன் ஒருத்தியின் உரமேற்றிய பொரு ளையும் உறுதியான நிலைப் பாட்டையும் ஒருசேர உள்வாங்க முடிந்தது.

'தாய் சொல்லைத் தட்டாதே' திரைப் படத்தில் P..சுசீலா குரலால் குழைந்து பாடிய, 

"ஒருத்தி மகனாய்ப் பிறந்தவனாம்

உருவில் அழகாய் வளர்ந்தவனாம்

ஒருத்தி மனதில் நிறைந்தவனாம்

உயிரில் உயிராய்க் கலந்தவனாம்"

    எனும் பாடலில்,ஒருத்தியில் கலந்த ஒருவனின் பலத்தால்,ஒருத்தி வலுப் பெறுவதையும்,ஒருவனை தன்னுள் கரைக்கும் பலத்தினை,ஒருத்தி பெற்றி ருப்பதையும் ஒருத்தியை ஒருவனாகவும் ஒருவனை ஒருத்தியாகவும்,ஒரு அத் வைதத் கோட்பாடாக அனுபவப் பூர்வமாக அறியமுடிகிறது.

  ஆனால் ஒன்றுபட்ட ஒருவனும் ஒருத்தி யும் வாழ்க்கைப்பந்தலில் படர்ந்து பயணிக்கையில்,பன்முகத்தன்மை பெறுவதை,'சாரதா' திரைப்படத்தில் அதே P. சுசீலா P.B ஸ்ரீநிவாஸுடன் இணைந்து  பாடிய, 

"ஒருத்தி ஒருவனை

நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன

காதல்

அந்த ஒருவன் ஒருத்தியை

மணந்து கொண்டால்

அந்த உரிமைக்குப் பெயர் என்ன

குடும்பம்"

 என்று பரந்து விரியச் செய்தது. மகிழ்ச்சிக் கூத்தாட்டத்தில் இணையும் ஆணும் பெண்ணும்,ஒருவன் ஒருத்தி என்பதை மறந்து,

"ஒருவர் ஒருவராய் பிறந்தோம் 

இருவராய் இணைந்தோம் 

உறவு மழையிலே நனைந்தோம்

உலக சுகத்திலே  மிதந்தோம்" 

   என்று டி.எம்.சௌந்தராஜனும் P.சுசிலா வும் 'பணத்தோட்டம்' திரைப் படத்தில் பாடிய பாடல் தனி ராகம்.அதே ஒருவன், தனிமைப்பட்டு நிற்கையில்,அவனைக் கண்டு,

"உறவு சொல்ல ஒருவரின்றி வாழ்பவன் 

அவன் உலக வாழ்க்கை பள்ளியிலே மாணவன்" 

  என்று பிரமிப்புடன்,அவனது தன்னம் பிக்கையையும் மனப்பலத்தையும் புருவம் உயர்த்தி,ஆச்சர்யத்தில் பார்ப்பதும் உண்டு. இப்படிப்பட்ட ஒரு ஆச்சர்யத்தை, P.சுசீலா தன் பாடல் மூலம் 'பாசம்' திரைப் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

 ஒருவனாய்,மண்ணில் உயர்குணங் களால் உலகுக்கு எடுத்துக்காட்டாய் வாழ்வோரை,'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் P.சுசிலா பாடியது போல,

"உன்னை நான் சந்தித்தேன்

நீ ஆயிரத்தில் ஒருவன்

என்று நெஞ்சாரப் பாராட்டுவதும்"

  கள்ளம் கபடமற்ற பெண்ணின் கறைபடாத் தன்மையினை,கனிவுறும் சொற்களால் பாராட்டி,'கை கொடுத்த தெய்வம்' திரைப்படத்தில் டி.எம்.சௌந்த ராஜன் நெகிழ்ந்துப் பாடியது போல,

"ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ

உலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ"

 என்று உலகின் உத்தமப் பெண்ணாக ஒருத்தியை வார்த்தைகளால் வருணிப் பதும்,

"ஓடம் நதியினிலே

ஒருத்தி மட்டும் கரையினிலே" 

  என்று ஒரு அபலைப் பெண்ணிற்காக 'காத்திருந்த கண்கள்' திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் குரலில் மனம் அங்கலாய்ப்பதும்,தமிழ்த்திரை ஒரு வனையும் ஒருத்தியையும் ஒன்றுபடக் கொண்டாடியதன் உட்கருவாம்.

  இவற்றையெல்லாம் கடந்து,"ஒன்றே குலம் ஒருவனே தேவன்"என்ற உறுதியுடன் இறைவன் ஒருவனே எலாலார்க்கும் மேலானவன் என திட்டவட்டமாய் 'முத்து' திரைப்படத்தில் S.P.பாலசுப்ரமணியன் பாடிய,

'ஒருவன் ஒருவன் முதலாளி 

உலகில் மற்றவன் தொழிலாளி"

  எனும் பாடல் இறைவனை ஒருவனாய் உயர்த்திப் பிடித்தன. 

  ஒருவனுக்கும்,ஒருத்திக்கும்,தமிழ்த் திரை ஒருதனி இடம் கொடுத்து வந்துள் ளதை,பாடல்களில் மட்டுமல்லாது,திரைப் படத் தலைப்புகளான,ஒருவன் எவனோ ஒருவன்,எனக்குள் ஒருவன்,என்னைப் போல் ஒருவன்,உன்னைப் போல் ஒருவன் தனி ஒருவன்,ஆயிரத்தில் ஒருவன், கோடியில் ஒருவன்,கூட்டத்தில் ஒருவன், வெற்றிக்கு ஒருவன்,ஒருவனுக்கு ஒருத்தி,ஆயிரத்தில் ஒருத்தி,ஒருத்தி மட்டும் கரையினிலே,போன்ற பல மாறு பட்ட தலைப்புகளால் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் வெண்திரையில் விசால மாய் இடம் தந்து வண்ணக் கோலங்க ளால் அலங்கரித்தது.

   மேலே குறிப்பிட்ட திரைப்படப் பாடல் களில் பூம்புகார் திரைப்படப் பாடலுக்கு கலைஞர் கவிபுனைய 'ஆயிரத்தில் ஒருவன்' பாடலுக்கு வாலியும்,'முத்து' திரைப்படத்திற்கு வைரமுத்துவும் வரிகள் எழுத,இதர பாடல்கள் அனைத்துமே கவியரசு கண்ணதாசனின் கற்பனையில் ஊற்றாகி உவகை யூட்டும் கவிதைக் களஞ்சியமாகின 

  அதே போல பூம்புகாரில் கலைஞரின் வரிகளுக்கு சுதர்சனமும்'தாய் சொல்லைத் தட்டாதே','காத்திருந்த கண்கள்'திரைப்படங்களுக்கு கே.வி.மகா தேவனும்  இசையமைக்க இதர திரைப் படங்கள் அனைத்திற்கும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். ஒருவனும் ஒருத்தியும் உலகில் மனித இனத்தின் ஆரம்பப்புள்ளிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒருவனாய் ஒருத்தியாய் தனித்தன்மை வெளிப்படுத்தாவிடில் உலகில் மனித இனத்தின் உன்னதம் கடலில் கலந்த பெருங்காயமாகவிடும்.வாழ்க்கைப் பூங்காவில் ஒருவனாய் ஒருத்தியாய், ஒவ்வொருவரும் தனி மணம் பரப்பிட, வாழ்க்கை வசந்தம் பெறுகிறது.


Wednesday, June 12, 2024

Sterling and sensible Sriprya.

  


   Women performers of dynamic roles in Tamil Cinema are of a unique kind,since the days of P.Bhanumathi.In the line of Bhanumathi,there was a long line of actors like Sowcar Janaki,Jeyalalitha,Sujatha and Jeya chithra.They would belong to this category of high spirited acting,unlike Anjalidevi,Savithri,Padmini,Devika, K.R.Vijaya, Jamuna,Lakshmi,Sri Vidya and Poornima Jeyaram,whose acting calibre would abound in modesty and subdued feminine grace.

  Contrary to these two categories,there was an actess who combined sterling notes of feminism with feminine sweetness and that was Sriprya who started her acting career in 1974,with her first four films Murugan Kaattiya Vazhi,Aval Oru Thodar Kadhai,Unnaithaan Thambi and Panathukkaaga.

  In Aval Oru Thodar Kadhai she created a remarkable impression as the widowed sister of Sujatha,falling in love with her sister's lover that led to her marriage with him on account of her sacrificing sister. Though her first Sivakumar film was Panathukkaaga her other notable films with that handsome hero were,Pattik kaattu Raja,Thangathile Vairom,Aan Pillai Singam,Avan Aval Adhu &Aattukkara Alamelu.Interestingly,her given name itself is said to be Alamelu.It was this Devar film,that catapulted her image as a  high spirited,fire brand woman,capable of fighting male chauvinism tooth and nail,and establish the gusto of feminine might.

  Sri Priya's only MGR film was Nava Rathnam starring MGR and Latha.In that film,she played the role of a call girl pushed to sex trade,owing to victimized romance and unwed motherhood.How MGR reformed her life on hearing her pathetic life story,made Sri Priya's role in the film an impressive segment of the film. Incidentally,Navarathnam was the only MGR film directed by A.P.Nagarajan.

   But with Sivaji Ganesan,Sri Priya has acted in more number of films starting from Vetrikku Oruvan and travelling with the Chevalier in films like sangili,Thiri soolam,Lorry Driver Rajajannu,Yama nukku Yaman,Amara Kaviyam,Madiveettu Yezhai,Sathya Sundaram,Vasanthathil Oer Naal,Chiranjeevi and Oorukku Oru Pillai. Three of her Jaishankar films were Paa  laabishegam,Mayor Meenakshi,Ullathil Kuzhandhaiyadi,Chakravarthi,Thotta thellaam Ponnaagum,and Vaazha Ninaithal Vaazhalam.

   Sri Priya's dynamic acting career was split between Kamalahasan and Rajini kanth. Another spicy factor of this combination is about films like Aadupuli Aattam,Ilamai Oonjalaadukiradhu and Aval Appadithaan,in which she became the conflict of interest between the two. It should be mentioned here that Sri Priya got the best actress award for her role play in Aval Appadithaan.Her other film with the duo was Allaudinum Arpudha Vilakkum.

  Besides Ilamai Oonjalaadukiradhu,her special Kamal films were,Sattam En Kaiyyil,Savaal, Neeya,Vaazhve Mayam,Ram Lakshman,Moham Muppadhu Varusham, Mangala Vaadhiyam, Enakkul Oruvan, Mariya My darling,Pakadai Panirendu and Simla Special.She did equal number of films with Rajinikanth too. Her most prominent Rajini films were Bhairavi, Thaai Meethu Sathyam,Annai Or Aalayam, Maangudi Minor,En Kelvikku Enna Badhil, Thanikkaattu Raja,Thee,Pollaadhavan and the historic film Billa.In that gangster film Billa,Sri Priya was in her fiery fighting spirit with ebullient energy equal to that of Rajinikanth.

  Sriprya's films also include those that she did with Vijayakumar,(Palootti Valartha Kili besides Aval Oru Thodar Kadhai and Mangudi Minor) Vijayakanth(Kudumbam) Vijayan(Kanneer Pookal),Pratap Pothen (Karaiyellaam Senbagapoo)and Sarath Babu(Kannil Theriyum Kadhaikal).Ulmost a majority of the films of Sri Priya have been listed in this post.But the fact that she is a strong willed actor,is what matters here.

 Sripriya is one among the salient women performers of Tamil cinema,with a very decent body language and an exemplary grip over verbal thrust.She was always clear headed in deliverig her roles be it that of a young widow craving for a new family life,or a helpless woman fighting against menfolk in retaining her feminine grace and modesty.Her dynamic roles were in films like Aval Appadithaan,Ilamai Oonjalaadukiradhu,Savaal,Annai Oer Aalayam,Aattukkara Alamelu and Billa.

   In the more than one hundred films that Sripriya has acted,either as the main heroine or second heroine, she came under the inspiration and influence of eminent directors like K.Balachander, K.S.Gopala krishnan,P.Madhavan,C.V.Sridhar, C.V.Rajendran,A.C.Thirulokchandar,  Krishnan Panju,Mukta V.Srinivasan, K.Vijayan,Billa.R.Krishnamurthy, R.Thiaga rajan,Devaraj Mohan and a few others. Starting from Sivaji Ganesan she has acted with all her cotemporary heroes,boldly staking her due claim like P.Bhanumathi and Jeyalalitha.Her multiple entries were of course with Sivaji Ganesan, Kamala hasan and Rajinikanth.

  Sripriya has also done roles with a natural sense of comedy,in films like Simla Special and Odi Vilaiyaadu Thatha.One can categorically state that Sripriya remains as one of the truest and most prominent contributors to Tamil Cinema,with a keen perception of her character and deep involvement in role delivery.She has consistently remained as a very sterling and sensible actor.This post proudly acknowledges the merits of Sripriya as a powerfully performing actress.

                                 ==================0=================== 

Saturday, June 1, 2024

தமிழ்த் திரைக்கடலில் அன்பின் அலைகள்.

 

"அன்பு என்பதே தெய்வமானது

அன்பு என்பதே இன்பமானது"

   எனும் கண்ணதாசனின் வரிகளில் அமைந்த 'ஆசை அலைகள்'திரைப்படப் பாடல்,அன்பை இன்பமாக்கி இறைவனுடன் ஐக்கியப்படுத்தியது.சீர்காழி கோவிந்த ராஜன்,எல்.ஆர்.ஈஸ்வரி,மற்றும் ஜமுனா ராணியுடன் இணைந்து பாடிய இப்பாடல், கே.வி.மகாதேவன் இசையில் இதமாய் நெஞ்சில் ரீங்காரமிட்டது.

  அன்புடையார் நெஞ்சமே உயிர் தாங்கியது. அன்பற்றோர் நெஞ்சம் வெறும் எலும்புகள் சுமந்த உடலே எனும் கருத்தினை மைய்யப் படுத்தி அமைந்த வள்ளுவரின் குரளே,

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்பு போர்த்திய உடம்பு

   என்பதாகும்.மேலும் வள்ளுவனின் அன்பு அதிகாரத்தின்,

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு"

  எனும் குரளை,'பல்லாண்டு வாழ்க'திரைப் படத்தில் கே.ஜே.ஏசுதாஸ் பாடிய "ஒன்றே குலமென்று பாடுவோம்"எனும் பாடலின் அறிமுக வரிகளாகக் கேட்டு மகிழ்ந்தோம்.

 தமிழ்த்திரை,அன்பை தலைப்புகளால் உயர்த்திப்பிடித்த திரைப்படங்களே,அன்பு, அன்புக்கோர் அண்ணி,அன்புள்ள அப்பா, அன்பு சகோதரர்கள்,அன்பு எங்கே,அன்பே வா,அன்பைத்தேடி,அன்பே ஆருயிரே, அன்பே சிவம்,அன்புக்கு நான் அடிமை, அன்பே அன்பே,போன்றவையாகும்.

 "உள்ளம் என்றொரு கோவிலிலே

தெய்வம் வேண்டும் அன்பே வா"

  என்று அன்பால் காதலை மேன்மைப்படுத் தும் டி.எம்.சௌந்தராஜனின் 'அன்பே வா' திரைப்படப்பாடலும்,

"அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்

தங்கம்"

  என்று அன்பால் மனையாளைப் போற்றும் 'தெய்வப்பிறவி' படத்தின் சி.எஸ்.ஜெய ராமின் பாடலும்,

"அன்புள்ள அத்தான் வணக்கம் 

உங்கள் ஆயிழை கொண்டால் மயக்கம்"

  என்று கணவனை ஆலாபனை செய்யும் பி.சுசிலா பாடிய'கைராசி'திரைப்படப் பாடலும்,

"அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்

அன்புள்ள மன்னவரே ஆசையில் ஓர் கடிதம்"

  என்று கடிதம் மூலம் அன்பைப் பரிமாறும், கணவன் மனைவியின் பிரிவின் தாக்கத்தை வெளிப்படுத்தும் டி.எம்.எஸ்& பி.சுசிலா பாடிய,'குழந்தையும் தெய்வமும்' திரைக்கீதமும்,பல்வேறு கோணங்களில் அன்பின் குறியீடுகளை வரையறுத்துக் காட்டின.

"அன்பே அன்பே கொல்லாதே

கண்ணே கண்ணை கிள்ளாதே"

  என்று ஹரிஹரன்,அனுராதா குரல்களில் இனிமையாய் ஒலித்த,'ஜீன்ஸ்' படப்பாடல் காதலின் வேதனை உள்ளடக்கிய அன்பின் சுகத்தை வெளிப்படுத்திய பாடலும்,

 'மக்களைப் பெற்ற மகராசி'திரைப்படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ் & ஜமுனா ராணி குரல்களில் நாம் கேட்டு மகிழ்ந்த, 

"ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

உண்மை காதல் மாறிப்போகுமா"

  எனும் காதலாய்க் கசிந்து அன்பின் நிரந் தரத்தை உறுதி செய்த பாடலும்,அன் பெனும் ஊர்தியே,உறவுகளின் உல்லாசப் பயணத்தை உறுதிப்படுத்தும் என்று, சத்தமிட்டு சத்தமிட்டு கவிபாடின.

  'அன்பே சிவம்' என்கிறோம்.எல்லா மதங் களுக்கும் அன்பே கடவுளாகும்.இக்கருத் தினை இனிமையாய் நெஞ்சில் தவழச் செய்த பாடலே,

"அன்பென்ற மழையிலே 

அகிலங்கள் நனையவே 

அதிரூபன் தோன்றினானே"

  எனும் 'மின்சாரக்கனவு'திரைப்படத்தில், அனுராதாவின் அபூர்வக்குரலில்,அன்பால், கேட்போரை அற்புதமாய் அரவணைத்த வரிகள்.

  அன்பின் மகத்துவத்தை உணர்ந்தே பலரும் அன்புக்கு அடிமையாகின்றனர். அன்பு மனிதப் பண்பினை,மாண்புறச் செய்கிறது என்பதை உணர்த்தியது,'இன்று போல் என்றும் வாழ்க'திரைப்படத்தில், கே.ஜே.ஏசுதாஸ் அதிர்வலைகளை எழுப்பிப் பாடிய,

"அன்புக்கு நான் அடிமை

தமிழ் பண்புக்கு நான் அடிமை

நல்ல கொள்கைக்கு நான் அடிமை

எனும் அன்பால் பரவசமூட்டிய பாடல்".

  அன்பைப்பற்றி இன்னும் எத்தனையோ திரைப்படப் பாடல்கள் உண்டு.மேலே குறிப் பிட்ட பாடல்களில்'அன்பே வா'மற்றும் 'குழந்தையும் தெய்வமும்'திரைப்பட வாலி யின் வரிகளுக்கும்,'இன்றுபோல் என்றும் வாழ்க'வின் கவிஞர் முத்துலிங்கத்தின் பாடலுக்கும்,எம்.எஸ்.விஸ்வநாதன் இசை யமைக்க 'தெய்வப்பிறவி' உடுமலை நாயாயண கவியின் பாடலுக்கு ஆர்.சுதர் சனமும்,'மக்களைப்பெற்ற மகராசி'படத்தின் அ.மருதகாசி பாடலுக்கு கே.வி.மகாதேவ னும்,'கைராசி'படத்தின் கண்ணதாசன் வரிகளுக்கு கோவர்த்தனமும்,'ஜீன்ஸ்' மற்றும்'மின்சாரக்கனவு'திரைப்படங்களின் வைரமுத்து வரிகளுக்கு ஏ.ஆர் ரெஹ்மா னும்,தேன்சவை கலந்து இசையமைத்தி ருந்தனர்.

   இன்றைக்கு அன்பு கிடைக்கப்பெறாமல் தவிப்பதும்,உளமார செலுத்தும் அன்பு உதாசீனப்படுத்தப்படலும், அன்பின் ஆன்மா வை உலுக்கிக்கொண்டிருக்கிறது.அன்பை போற்றவேண்டிய மதம்,வெறுப்பை விதை நெல்லாக்கிக் கொண்டிருக்கிறது.ஆலயங்  கள் பழைய வரலாற்றுப் பக்கங்களை கிழித்து,புதிய வரலாற்றுச் சித்திரங்களை புனைந்து,அன்பற்ற மதப்பிரச்சாரப் புத்த கங்களை பதிப்பீடு செய்யும் களங்களாக, மாறிவருகின்றன.நடைமுறை வாழ்வில், நடை பிணமாகிக்கொண்டிருக்கும் அன்பை, எப்படி வெண்திரைவடிவாக்க இயலும்?

  ஒட்டாத அன்பு என்றும் ஒட்டுண்ணியே!. 'அன்பே சிவம்'என்பதை,தவமாக்குதலைக் காட்டிலும்,சுவாசிக்கும் காற்றாக,இதயத் தின் துடிப்புளாக,ரத்த நாளங்களை சுத்தீ கரிக்கும் சத்தான உணவாகக் கருதுவதே அனபுச்சாலை வழியாம்.

  அன்பு ஆண்டவனை தரிசிக்க ஆன்மாவை உள்ளொளியாய் ஆட்கொண்டு,புறநிலைக் கோலங்களை புத்துயிர் பெறச்செய்யும். புத்தன் கூறிய,"அன்புதான் உலக மகா ஊர்தி" என்பதே,அன்பை உலகமயமாக்கும்.

ப.சந்திரசேகரன்.