Wednesday, October 20, 2021

நகைச்சுவையின் இசைக்குரல்


    


   தமிழ்திரையிசையில் இசைக் குரல்கள் பலவண்ணத்தில் வலம் வந்துள்ளன.இன்றைய சூழலில் இளைஞர்கள் பலரின் இசைக்குரல்கள், குரல்வளையினை இசைக்கருவி போலவும் நாவினை நர்த்தன மேடை யாகவும் மாற்றி சாகசங்கள் புரிந்து வருவதை,விஜய் சூப்பர் சிங்கர் போன்ற இசை அரங்கங்களில் நம்மால் உணரமுடிகிறது. 

   ஆனால்,கடந்த நூற்றாண்டில் சி.எஸ் ஜெயராமனின் தனித்துவம் வாய்ந்த குலைத் தவிர மற்றவை அனைத் துமே.பரந்த சமவெளி போல வும்,உயர்ந்த கோபுரம் போலவும் விரிந்து விசாலமாகவோ உயர்ந்து கம்பீர மாகவோ,இசையின் விரிந்து உயர்ந்த பரிமாணங்களை மட்டுமே நமக்கு விருந்தாக்கின.இசையின் நெளிவு சுளிவுகள் பாடுவோர்க்கு தெரிந்திருந் தாலும் அவர்கள் தங்களின் குரலை நேரிடையாக மக்களுக்கு நெருக்க மாக்கி,சங்கீதத்தை அனைவருக்கும் சமமாக்கி விருந்து படைத்தனர். 

   அவர்களின் குரல்கள் ராகங்களை மீறியதில்லை;தாளங்களை கடந்த தில்லை.ஆனால் உணர்வுகளை,தங்களது திறந்த குரல் ஓசையால்  உயிரோட்டத்துடன்,கேட்போர் நெஞ்சங்களில் இசையின் எழுச்சியுடன் சங்கமிக்கச் செய்தனர். இந்த குரல்களுக்கிடையே சோகத்தை தள்ளி வைத்து, நகைச்சுவை உணர்வுகளை நளினமாய் தன்னுள் பிரசவித்து, ரசிகர்கள் மடியில் இளைப்பாறச் செய்த ஒரு இசைக்கலைஞர் உண்டு. அவர்தான் S.C.கிருஷ்ணன். 

  நகைச்சுவை நடிகர்களில் தமிழ்த் திரைப்படங்களில் அதிகமாக பாடல் காட்சிகளில் இடம்பெற்றவர்கள் நான்குபேர். இந்த நால்வரில் கலை வாணரும்,J.P சந்திரபாபுவும்,அவர்களின் சொந்தக்குரலால் பாடி ரசிகர் களை மகிழ்வித்தவர்கள்.ஆனால் பாடல் காட்சிகளில் அதிகமாக இடம் பெற்றவர் கே.ஏ.தங்கவேலு.அதற்குப் பிறகுதான் நாகேஷ்.

   இதற்கு தங்கவேலுவின் திரைப் பிரவேசம் நாகேஷுக்கு முன்னர் ஏற்பட்ட தும்,கடந்த நூற்றாண்டில் நகைச்சுவை நடிகர்களுக்கு பாடல் காட்சிகள் அதிகம் இருந்ததுமே காரணமாகும்.இந்த இருவரில், நாகேஷின் பாடல் களுக்கு குரல் பொருத்தத்துடன் பாடியவர் ஏ.எல்.ராகவன் ஆவார்.'சந்தி ரோதயம்'போன்ற ஒரு சில படங்களில் சீர்காழி கோவிந்தராஜனும் பாடியுள்ளார். ஆனால் தங்கவேலுவுக்கு சீர்காழியார் நிறைய பாடல் களுக்கு குரல் கொடுத்திருந்தாலும் அதற்கு இணையாக குரல் கொடுத்த இன்னொரு பாடகர் S.C.கிருஷ்ணன் என்பது குறிப்பிடத் தக்கதாகும். 

  சிவகங்கை மாவட்டத்தை தன் பெயரின் முதல் எழுத்தாகக் கொண்டுள்ள S.C.கிருஷ்னன் இளமைப்பருவத்திலிருந்தே இசையோடு நடிப்பையும் உளமார நேசித்தவர்.நடிப்பில் வற்றாத ஆர்வம் கொண்ட இவருக்கு,நடிப் பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமியின்  நாடகக்குழுவில்  நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  பின்னர் அறிஞர் அண்ணாவின் 'ஓர் இரவு''வேலைக்காரி'போன்ற திரைப் படங்கள்,முதலில் நாடகமாக அரங்கேறியபோது,அவற்றில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் முழுமையான நடிகராகவேண்டும் என்ற அவரது நீண்ட நாள் கனவு நிறைவேறவில்லை.மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும்,முடிவில் ஒரு பாடகராக மட்டுமே,அவரால் கலைத்துறையில் கணிசமான இடத்தை பெறமுடிந்தது.

  1952 முதல் 1984 வரை முப்பது ஆண்டுகளுக்கு மேல் பின்னணி பாடகராக இருந்த S.C.கிருஷ்ணன் கடந்த நூற்றாண்டில், இளையராஜாவைத் தவிர, மற்ற பெரும்பாலான முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில்  பாடியுள்ளார் என்பது  தனிச் சிறப்பாகும். அவர் கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்டிருந்தாலும்'அமுதவல்லி'  திரைப்படத்தில் டி.ஆர் மகாலிங்கத்துடன் இணைந்து பாடிய "இயல் இசை நாடகக் கலையிலே " எனும்  போட்டிப் பாடல் மட்டுமே நிலைத்தது.

   S.C.கிருஷ்ணன் எம் ஜி ஆருக்காக 'ராஜராஜன்'திரைப்படத்தில் பாடிய "ஆயி மகமாயி ஆங்கார தேவி"எனும் பாடலும்'ராஜா ராணி'திரைப்படத் தில் சிவாஜி கணேசனுக்காக பாடிய"லீலா ராணி லீலா போலி"என்று தொடங்கி "பூனை கண்ணை மூடிக்கொண்டாள் பூலோகமே இருண்டு போகுமா மியாவ் மியாவ்"எனும் கலைஞரின் வரிகளில் அமைந்த பாடலும் இரண்டு மிகப் பெரிய காதாநாயகர்களுக்காக  அவர் பாடிய பாடல்களா கும்.  

  முதன்முதலாக  S.C.கிருஷ்ணனுக்கு சிறப்பான அங்கீகாரம் பெற்றுத் தந்த பாடல்,மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வெளியான நடிகர் திலகத்தின் 'திரும்பிப்பார்.திரைப்படத்தில் காளி N.ரத்தினத்திற்காக அவர் பாடிய "கலப்படம் கலப்படம் எங்கும் எதிலும் கலப்படம்" எனும் பரவசமாய்க் கேட்கப்பட்ட பாடலாகும். அதற்குப் பின்னர் 'மக்களைப்பெற்ற மகராசி' திரைப்படத்தில் அவர் பாடிய, 

சீமைக்குப் போயி படிச்சவரு 

சின்ன எஜமான் நல்லவரு 

  எனும் குழுப்பாடலும் நல்ல வரவேற்பைப்பெற்றது.இதேபோன்று பல முறை நாம் கேட்ட இன்னுமொரு பாடலே,'தெய்வப்பிறவி' திரைப்படத்தில் இடம்பெற்ற,  

கட்டத்துக்கு மனப்பொருத்தம் அவசியம் 

காதலுக்கும் மனப்பொருத்தம் அவசியம் 

எனும் அர்த்தமுள்ள சொற்களை உள்ளடக்கிய பாடலாகும்.

   'தில்லானா மோகனாம்பாள்' திரைப்படத்தில் ''பாண்டியன் நானிருக்க ஏண்டி உனக்கு நேரம்" என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி தொடங்க,S.C கிருஷ்ணன் தனது குரலை உச்சத்தில் உயர்த்தி, "நானிருக்க"எனும் சொல்லை  பாடுகையில்,அவர் எப்படிப்பட்ட குரல்வளமிக்க பாட்டுக்காரர் என்பதை அனைவரும் அறிந்திருக்கக்கூடும். 

   இவை எல்லாவற்றையும் மிஞ்சி இன்றைக்கும் செவிகளில் தேனெனப் பாயும் பாடலே,மாடர்ன் தியேட்டர்ஸின் 'வண்ணக்கிளி'திரைப்படத்தில் இடம்பெற்ற,

 சித்தாட கட்டிக்கிட்டு சிங்காரம் பண்ணிக்கிட்டு 

மத்தாப்பு சுந்தரி ஒருத்தி மயிலாக வந்தாளாம்.

கோரஸ் பாடல்களில் அமரத்துவம் பெற்ற பாடலாகும்.

 S.C. கிருஷ்ணன் 'மல்லிகா' திரைப்படத்தில் பாடிய"பகட்டிலே உலகம் ஏமாறுது"'குலேபகாவலி'யில் நாகூர் ஹனீபாவுடன் பாடிய "நாயகமே.நபி நாயகமே"சமய சஞ்சீவி'யில் கேட்ட"வெளிய சொன்னா வெட்கம்", 'பாக்யலட்சுமி' திரைப்படத்தில் மனம் மகிழ்ந்துப் பாடிய "பார்த்தீரா ஐயா பார்த்தீரா" 'திலகம்'திரைப்படத்தில் இடம்பெற்ற 

B.O.Y boy, Boy இன்னா பைய்யன் 

G.I.R.L girl Girl இன்னா பொண்ணு 

இந்த பொண்ணை கண்டதும் 

போதை உண்டாகுதே 

மற்றும் 'எதிர் நீச்சல்' திரைப்படத்தில் என்றென்றும் நினைவில் நிற்கும் வண்ணம் பாடிய,

 சேதி கேட்டோ சேதி கேட்டோ 

சேட்டன் பற்றிய சேதி கேட்டோ 

போன்ற எல்லா பாடல்களுமே இசை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.  

  S.C.கிருஷ்ணன் பாடல்கள் பலவற்றில் எப்போதுமே,எதுகை மோனை சற்று தூக்கலாகவே அமைந்திருந்தது.அதற்கு கீழ்காணும் பாடல்களை எடுத்துக்காட்டாகக் கூறலாம். 

1}சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி  {'வண்ணக்கிளி'}

2}சின்னஞ்சிறு சிட்டே 

எந்தன் சீனா கற்கண்டே {அலிபாபாவும் நாற்பது திருடர்களும்} 

3}உன் அத்தானும் நான்தானே 

சட்ட பொத்தானும் நீதானே{சக்ரவர்த்தித் திருமகள் }   

4}அடி தாராபுரம் தாம்பரம் உன் தலையிலே கனகாம்பரம் 

அட ஏகாம்பரம் சிதம்பரம் உன் இடுப்புல பீதாம்பரம்  

{மக்களைப்பெற மகராசி}

5}ஐயப்பா இது மெய்யப்பா {ரத்த பாசம்}

6} தங்கமே உன்போல தங்கப்பதுமையை

எங்கெங்கும் தேடியும் காணலையே{மாயா பஜார் } 

7}மண்ண நம்பி மரமிருக்கு கண்ணே சஞ்சலா 

  ஒன்ன நம்பி நானிருக்கேன் சோக்கா கொஞ்சலாம் 

  ஒலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம் 

  இந்த ஒலக இன்ப வெள்ளத்திலே ஒண்ணா நீஞ்சலாம்{எங்க வீட்டு மகாலட்சுமி} 

8} மை டியர் மீனா 

    ஓ ஐடியா என்னா {மஞ்சள் மகிமை} 

9} வெத்தல பாக்கு சுண்ணாம்பு 

    பத்திரி ஏலங் கிராம்பு  {நீமலைத் திருடன்}

10}அச்சா பஹூத் அச்சா

      உனக்கு அழகை யாரு வச்சா  {திருடாதே}

11} சந்தேகம் எனும் ஒரு சரக்கு 

      அது பெண்கள் மனதிலேதான் இருக்கு {திலகம் }

இப்பாடல்கள் அனைத்துமே நாம் பலமுறை கேட்டு ரசித்த நகைச்சுவை பாடல்களாகும்.  

  குரலில் நாசியுடன் கலந்த இனம்புரியா இனிமையும்,அதிர்வும் நிரம்பப் பெற்ற ஒரு அற்புதமான பாடகரான S.C கிருஷ்ணன்,நகைச்சுவைப் பாடல்களில் நளினமான  குரலால்   இரண்டறக் கலந்ததோடு,டி.எம்.எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.எல்.ராகவன் மற்றும் பல ஆண் குரல்களுடன் இணைந்தும் பி.சுசீலா பி.லீலா,ரத்னமாலா,டி.வி ரத்னம், ஜமுனா ராணி எல்.ஆர்.ஈஸ்வரி,ஏ .பி.கோமளா மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி உட்பட அனைத்து பெண் குரல்களுடன் இணைந்தும்,தமிழ் திரையிசைப் பாடல் பயணத்தில் டூயட் பாடல்களுக்கும் கோரஸ் பாடல்களுக்கும்,தனிப் பெருமை கூட்டினார்.

  எண்ணற்ற பாடல்களை திரையிசை கீதங்களாய் தமிழ்த்திரைப்பட உலகத்திற்கு வழங்கிய S.C.கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்ட கலைமாமணி விருது அவரது திறமைக்குக் கிடைத்த மிகச் சிறிய அங்கீகாரமே!.முதன் மைப் பாடகர்களின் குரல்களுடன் கலந்து கரைந்து போகாமல்,தனது குரலின் தரம் போற்றிய தனித் திறமையால் நிலைத்து நின்றதே,அவரது மிகப்பெரிய ஆற்றலாகும்.அந்த ஆற்றலே இன்றும் நம்மில் பலரை,அவர் பற்றி நினைப்பதோடு நில்லாது,மனம் நிறைந்து பேசவைக்கிறது.இப் பதிவும் அவரின் இசைத் திறமைக்கு செலுத்தும் ஒரு சிறிய மரியாதையே  கும்.

ப.சந்திரசேகரன் 

                               *****************0********************     

Friday, October 15, 2021

A sibling story of substance

    


                                       {Thanks to Prime Videos}

  From the days of Pasamalar Tamil cinema has not been wanting in mind blowing sibling stories of brother sister relationship, with their deep notes of joys and sorrows. Besides the monumental Paasamalar,there are many in the list like Thangaikor Geetham,Kizhakku Cheemaiyile, Thiruppachi,Karuppan,Namma Veetu Pillai etc.But in this list,excepting Pasamalar, others did not create a heavy impact on the emotional side,because in all the other films one of the siblings scored more than the other. If Radhaika excelled Vijayakumar in Kizhakku Cheemaiyile  in the other films T.Rajendar,Vijay,Pasupathi and Siva Karthikeyan were found more on the giving side,thereby making the brothers more noticeable than the sisters.Now comes another film with the title Udanpirappe,co produced by Suriya and Jyothika and directed by Era.Saravanan.

  Udanpirappe is a  musical celebration of sibling bonding in the form of lyrics and tunes creating a fusion of agony and ecstay running through the veins of a brother sister attachment.D.Imman is a heart warming musical composer letting his tunes travel with the thought provoking lyrics of Yugabharathi,with music taking each word closer to our ears without even a little bit of jarring note.Starting from the title song 'Anne Yaaranne' in Shreya Goshal's scintillating voice, each song including debutante Pavithra Chari 's soothing song 'Dheivam Needhaane' moves us to the grandeur of thought and emotion of the unique sibling bond.'Otha Pana Kaatteri' in Sid Sriram's voice is a piercing musical stuff,though the song's scenic presentation appeared to be sudden and hence off the track.On the whole, D.Imman's music has certainly become an inseparable segment of the brother sister story line of Udanpirappe.

  The beauty of Udanpirappe is the element of goodness that permeates in the characterization of Jyothika,the younger sister,Sasikumar,the elder brother, Samuthrakani the younger sister's husband and Sila Rose the elder brother's wife. Though the two women characters reflect an exmplary spirit of mutually giving in for the sake of each other,it is Jyothika who outbeats her brother's wife by postponing her motherhood in order to see her brother being blessed with a child.She does not stop with this,but goes to the extent of losing her own son in the process of saving her brother's son.These are the two instances that make the Udanpirappe sister overtake the sister character of all other films.

  It is always a pleasure to watch Sasikumar and Samuthrakani together in a movie.Though Subramanyapuram and Nadodikal put them in their limelight, Sasikumar's Sundarapandiyan &Vetrivel and Samuthrakani's Saattai& Aan Dhevadhai are their specially memorable films. In Udanpirappe,as brothers-in-law with their ideologically diagonal viewpoints of justice and punishment they do their roles with poise and dignity.They imprint their images comfortably,with their spontaneous ease and ripeness in performance .

  Ultimately Udanpirappe is a Jyothika film,with her reputed grasp of the character assigned to her and her efficacy in portraying that character. However, it appears as though her character has been evolved with an inherent element of  pathos and grief, because throughout the film she delivers her role with subdued sobriety excepting in a couple of scenes.Perhaps there is an inner layer of a perpetually anguished mother,behind the adoring and adorable sister.Nevertheless,the twist in the climax shows her as'the Naachiyaar',ready to rise up to the occasion and render justice in her own way,against the arrogance of evil.

  Soory's comedy flair has almost been buried in his serious characterization.Only the scene showing him under police custody gives him a chance for his usual cheeky banter.I think it is  time for the audience to keep an eye on the acting style of Kalayarasan,taking new wings.The beauty of Udanpirappe is that,it does not fall into a melodramatic type of narration that a sibling story of this kind is normally prone to.The whole narration flows like a calm stream with sporadic ripples here and there.Moreover,excepting one element of evil it is the presence of goodness and nobility that occupies the central theme and the entire course of events. Udanpirappe is on the whole a soothing presentation of a painful storyline.

PS:- As an out of review remark,it looks odd to see Aadukalam Narein and Samuthrakani,without their masterly moustache.

Wednesday, October 13, 2021

The more deserving actor is no more.


 


   Not all actors in the cine field get their due recognition in terms of their talents and aspirations. This is applicable to actors in all language films.Tamil film industry is no exception to this.The actors undergoing the trauma of improper recognition would be many and they would belong to all categories of acting including that of a hero..It is not the objective of this article to analyse the reasons for such a predicament.It is just an attempt at throwing more light on the facts of what one is worthy of.
    In the above context,Tamil Cinema could be said to have less utilised the talent of  Srikanth,the hero turned villan- cum- comedian -cum character actor who is no more today.The most interesting fact about this wonderful actor is that he was the first hero of J.Jeyalalitha,the late Chief Minister of Tamil Nadu.Having been introduced to Tamil Cinema,by Sridhar, the ardent film maker of triangular love and breezy romance,Srikanth's potential as hero unfortunately failed to hit the desired destination.The other notable point is that Srikanth's first film Vennira Aadai had a completely heroine oriented story line.
   In Vennira Aadai,Srikanth performed the role of a psychiatrist/ doctor, as meekly as possible. After being deprived of hero opportunities,circumstances would have forced this man of graceful acting stuff,to transform into a boisterous villain in films like Aval,{a remake of the Hindi mega hit film Doraha}with his striking one liner dialogue punch"I am always Open."
This movie hit the screens with the innate histrionic ability of Srikanth,dynamically displayed. Srikanth also came out with a remarkable role of villainy in Dhandayudhabaani pictures' Komaadhaa En Kulamaadha and Vellikizhamai Vradham.
   Though Sridhar introduced Srikanth, K.Balachander used his talents for his films like Naanal, Navagraham,Ethir Neechal,Poovaa Thalayaa and Bhama Vijayam.Soon Srikanth's new born flair for villainy teamed up with Chevalier Sivaji Ganesan in several films. Srikanth's best roles in this regard were as the spoiler of Sivaji Ganesan's daughter {Saratha}in Gnana Oli  as the money minded son of Sivaji Ganesan in Vietnaam Veedu and later as the gansgter son of the mighty S.P Choudhry,played by Sivaji Ganesan in Thanga Padhakkam. Interestingly,in Gnana Oli and Thanga Padhakkam,Srikanth was shown as dying in the hands of the Chevalier,for his wrong doings.It should be mentioned here that all the three films cited,were successful stage plays before they were made into films.
    Srikanth had also played the role of a selfish younger brother of Sivaji Ganesan in the most popular film Rajapart Rangadurai. His other noted movies with Sivaji Ganesan were, Sivakamiyin Selvan,Rojavin Raja,Anbaithedi,Vasantha Maaligai and Avan Oru Sarithiram. While Srikanth was significantly included in most of the films of Sivaji Ganesan he did not seem to have found a space in the films of MGR, though the latter was very much active both in films and in politics between 1965,the entry year of Srikanth into Tamil Cinema and 1977 the exit year of MGR from Tamil Cinema,after he wore the mantle of Chief Ministership in Tamil Nadu. 
    Srikanth being a veteran performer of roles,variety in role play was a cake walk for him.In a dramatic switch over of portrayal of roles, Srikanth made his humour sense relevant and impressive in films like Kaasedhaan Kadavulada,Kasi Yathirai,Poova Thalaiya and Bhama Vijayam{ the last one with a negative tint},His comedy sense was as spontaneous as his grasp of villainy. Srikanth also did  impressive roles in Rajinikanth's films Bhairavi and Thambikku Endha Ooru..
   Beyond all these roles,two of his movies made Srikanth a long standing actor of merit and substance.These two films were  Sila Nerangalil Sila Manidhargal and Oru Nadigai Naadagam Paarkiraal. Both these films stand out to be unique in the sense,they were both based on the novels of the ilustrious Tamil novelist Jeyakanthan.Both these movies  were highly acclaimed for their story value and refined character portrayal.The character of the hero in both these films was beautifully carved and Srikanth fitted himself into the character with compactness and dignity. Last but not least,it is the highly skilled Lakshmi,who was the female pair of Srikanth in both these films. 
    Srikanth was a natural actor and his role performance was always a sample of a straight course in acting.He has done his best in all his films though movies like  Aval,Thanga Padhakkam, Rajapart Rengadurai,Komadha En Kulamadha, Avan Oru Sarithiram, Kaasedhaan Kadavulada and the two Jeyakanthan films will be the most remembered ones.I last saw Srikanth in a negative role as Chief Minister,in Vishal's Sivappadhi kaaram.
  Destiny had made a former employee of the American Consulate to adorn grease and travel a long way from a prestigeous job to a popular film career with a failure of heroship to be followed by memorable multi dimensional depiction of characters on the big screen.Srikanth had acted in many more films than what have been referred to in this article.This blog writer would always remember Srikanth as an actor of hero potential with enormous acting intricacies unfortunately less utilized by film makers.He deserved more and needed more than what he got. Clipping his image closer to our memories,could now be the best honour offered to this departed soul.Sure,his soul will rest in peace.
    PS. Also read 'Two Less Recognized great Actors of Tamil Cinema {Srikanth&Jai Ganesh} available in this blog.    

Monday, October 11, 2021

'The Doctor's Dilemma'

   



  "Kidnap with a sense of comedy' is not new to Tamil Cinema.But the success of 'Doctor' is its timing of jokes,when guys are in trouble.Jokes that are truly on the spot and do not appear to be pre scripted. If you miss a second,you miss a vital rib tickling joke.These are new generation dark comedy times.'Naduvula Konajm Pakkatha Kanom','Pizza' and a few other films created a new wave in the concept of humour.Sundar. C''Kalakalappu'starring Shiva & Vimal and Kalakalappu 2 with Shiva,Jeeva and Jai along with a gang of self ridiculing villains, created a ruckus from the beginning till the end.

 But the difference in 'Doctor' is that,a sober army medico treats everyone with his self styled grave doses of humour through his syringe of silence.Talk less and let everyone become a victim of the treatment,is the Siva Karthikeyan style.The hero has travelled a long way from his cheeky humour days of 'Manam Kothi Paravai',to be cherished by his fans,as a hero on the upper rungs of the popularity ladder.

 Forget Covid for a while and enjoy the gusto and flashes of humour from the stony face of Yogi Babu and the noisy oubursts of Ilavarasu& family and many more.With Vinay Rai,another suave villain is born.Failed heroes at times make invincible villains.The names of Jai Ganesh and Srikanth of Vennira Aadai, could be recalled in this regard.

 On the whole,'Doctor' is a 'boon show' of Siva Karthikeyan,to enforce comedy therapy for a speedy recovery from the Pandemic horrors.By the way 'Doctor' is branded as an action thriller too and the Climax proves it to the core. Nelson Dilipkumar has casually sewed the thriller component occupied in the faces of Siva Karthikeyan and Vinay Rai  with the humour bullets frequently shot by the spoken and silent drama of others in the cast.Anirudh's music breezily travels with the unique fusion of thriller and comedy.However,for the audience it might look like 'The Doctor's Dilemma' between humour and thriller { Doctor's Dilemma is the title of a famous play by George Bernard Shaw}

Saturday, October 9, 2021

பிறைசூடிய முழு நிலவு


 

   

   முழு நிலவை நோக்கியே வளர்பிறையின் பயணம் .1985-இல் 'சிறை' திரைப்படத்திற்கு கவிதை புனைய புறப்பட்ட அமரர் பிறைசூடனின் கவிதைப்பயணம்சிறையிலிருந்து விடுபட்ட பறவையாகி 2017 ரை,ஜெயிக்கிற குதிரை'யானது.

   திருக்குவளை ஈன்றெடுத்து தமிழாலும்குரலாலும்,திருக்குறளாலும்,இதயம் தொட்ட கலைஞர் பிறந்த,திருவாரூர் மாவட்டத்தில்நன்னிலத்தில் பிறந்த பிறைசூடன், கற்பனைக்களத்தில் கவிதையுடன் தமிழில் விளை யாடியதோடு நில்லாதுதொலைக்காட்சியின்'வானம்பாடி' நிகழ்ச்சியில் கவிதைகளை ஆய்வு செய்யும் திறன் கொண்டவராகவும்,நாவன்மை  மிக்க படைப்பாளியாகவும் விளங்கினார்.

  ஜெருசலேம் பல்கலைக்கழகத் தின் கௌரவ முனைவர் பட்டமும், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வ நாதன் அளித்த கவிஞானி எனும் புனைப்பெயரும் பிறைசூடனின் கற்பனை ஆழத்திற்கும் கருத்துச்செறி விற்கும் சொல்லாண்மைக்கும் கிடைத்த,அரிய அங்கீகாரங்களாகும். 

  பிறைசூடன் திரைப்படப் பாடலாசிரியர் எனும் நிலை கடந்து,'சத்ரிய தர்மம்' 'குரோதம்'ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி யிருக்கிறார் என்பதும்,'சதுரங்க வேட்டை' மற்றும் 'புகழ்'ஆகிய திரைப் படங்களில் நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அவரது கலைத்துறையின் சாதனைகளாகும்.'விழுதுகள்''மங்கை''ரேகாIPS' 'ஆனந்தம்''உள்ளிட்ட பத்து தொலைகாட்சி தொடர்களுக்கும் துவக்கப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது அவரைப்பற்றிய இன்னுமொரு செய்தி யாகும். 

   'என் ராசாவின் மனசிலே' 'தாயகம்''நீயும் நானும்'போன்ற திரைப்படங்க ளின்  அற்புத  கவிதை வரிகளுக்காக மூன்று முறை வழங்கப்பட்ட  தமிழக அரசின் விருதுகள் இவரது படைப்பாற்றலுக்கு பெருமை சேர்த்தன. தமிழ்த்திரையுலகில் ரஜினிகாந்த்,விஜயகாந்த்,பிரபு,சத்யராஜ்,கார்த்திக் முத்துராமன்,ராஜ்கிரண்,ராமராஜன், மற்றும் பல முன்னணி கதாநாயகர் களின் திரைப்படங்களில்,நூற்றுக்கணக்கில் பாடல் புனைந்த இவரின் கற்பனையில் சொட்டிய தேன்துளிகள் சிலவற்றை,குறிப்பிட்டு பட்டிய லிடலாம்.

1}மீனம்மா மீனம்மா

கண்கள் மீனம்மா தேனம்மா

தேனம்மா நாணம் ஏனம்மா { ராஜாதி ராஜா}

2}ஆட்டமா தேரோட்டமா

ஆட்டமா தேரோட்டமா

நோட்டமா சதிராட்டமா

வெகு நாளாக உன்னைத்தான்

எண்ணித்தான் கன்னி நான்

ஆடுறேன் வலை போடுறேன்

பாடுறேன் பதில் தேடுறேன்  {கேப்டன் பிரபாகரன்}

3}காதல் கவிதைகள்படித்திடும் நேரம்

இதழோரம்

இனி காமன் கலைகளில்பிறந்திடும் ராகம்

புது மோகம் {கோபுர வாசலிலே}  

4}சோழ பசுங்கிளியே
சொந்தமுள்ள பூங்கொடியே
ஈச்ச இளங்குறுத்தே என் தாயி
சோலையம்மாகோடி திரவியமே
வந்தது வந்தது ஏன் கொள்ள
போனது போனது ஏன் ஆவி
துடிக்க விட்டு சென்றது சென்றது
ஏன் விட்டு சென்றது சென்றது ஏன் {என் ராசாவின் மனசிலே}

5}தென்றல் தான்
திங்கள் தான் நாளும்
சிந்தும் உன்னில் தான்
என்னில் தான் காதல்
சந்தம்    {கேளடி கண்மணி]

6}இதயமே இதயமே
உன் மெளனம் என்னைக்
கொல்லுதே இதயமே
இதயமே என் விரகம்
என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம்
போலவே உயிரில்லாமல்
எனது காதல் ஆனதே {இதயம்}

7}தானந்தன கும்மி கொட்டி
கும்மி கொட்டி கும்மி கொட்டி
ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே {அதிசியப்பிறவி}

  எதுகை முனையிலும்,சந்தத்திலும் கருத்தாழத்திலும்,கற்பனைக் களஞ் சியமாக விளங்கினார் பிறைசூடன் என்பதற்கு,மேலே குறிப்பிட்ட சில வரிகளே போதுமானதாகும். இவையனைத்துமே கவிதைக்கடலில் கண்டெடுத்த ஒரு சில முத்துக்களே! முப்பது ஆண்டுகளுக்குமேல் தமிழ்த் திரையுகில் வளர் பிறையாக மட்டுமே ம் வந்துகிராமப்புறக்களிப்பும் நகர்ப்புற நளினமும் கலந்த கற்பனையூற்றினை,இயல்பாகக்கொண்டு பலநூறு கவிதைகள் வடித்த கவிஞர் பிறைசூடன்,அமரரானார்.

   சமூகத் தென்றலாய் வீசிய பட்டுக் கோட்டையார் போல,கவியரசு கண்ணதாசனைப்போல,விளைநிலக் கவிஞர் வாலியைப் போல,நறுக் கென நெஞ்சில் பதியும் சொல்லம்புக் கவிஞர் நா.முத்துக்குமார் போல,கவிதையில் பித்தான புலமைப்பித்தன் போல,ஒவ்வொரு முறையும்  நல்லதோர் கவிஞர்கள் நம்மை விட்டுச் செல்லும்போதெல்லாம் கவிதை கலங்குகிறது.இதோ இன்றும் அப்படித்தான்பிறைசூடன் மறைவால் கவிதை களையிழந்து நிற்கிறது. 

 ப.சந்திரசேகரன்

 

Friday, October 1, 2021

காதலில் விழுந்த தமிழ்த் திரை

 

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி 

ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கிலும் மெய்ப்பொரு ளாவது

நாதன் எந்தன் நமச்சி வாயவே" 

    என்று மனமுருகப் பாடினார்,நாயன்மார் அறுபத்துமூவரில்,ரி  நால்வரில் ஒருவரான,திருஞான சம்பந்தர். 'திருச்சிற்றம்பலம்'எனும் சொல்லில் தான் எத்தனை அழகு.!உமையவளின் தாய்ப்பால் பருகிய ஞானசம்பந்தர் எம்பெருமான் சிவன்மீது கொண்ட,உயிருடன் ஒன்றிப் போன ஈர்ப்பினை காதலாக்கி,'அன்பே சிவமென்று'அற்புதமாய் உலகிற்கு உணர்த்தினார்.தேவாரப் பாடல்கள்,வேதம் நான்கின் மெய்ப்பொருளை உள்ளடக்கி உருவாகிட,அவையனைத்தும் நான்மறைக்கு இணையான வையே!

   இவ்வரிகளை பாடலாக 'திருவருட்ச் செல்வர்'திரைப்படத்தில் திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகாராஜன் சிறுவனாய் இருக்கையில் பாடியதைக் கேட்டு,நாம் அனைவரும் மெய்சிலிர்த்திருப்போம். இப்பாட லுக்கு திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தெய்வீகமாய் இசையமைத் திருந்தார்.  

   பற்றற்று இறைவனை,'சிக்கெனைப் பற்றினேன் எங்கெழுந்தருள்வது இனியே'எனும் மெய்ப்பொருள் இணைவதே இறைநெறி.இதே போன்று சுயநலம் அகற்றி,முழுமையாய் அன்பும் பரிவும் கொண்டு,தன்னை, தன் மனதை மற்றவர்க்கு,தரமுடன் அர்ப்பணித்து,ஆண் பெண் உறவில் இருமனம் இரண்டற இணைவதே,உன்னதக் காதலாம்.காதலை தலைப்பு களாகவும் கவிதை வரிகளாகவும் கொண்டாதுவதே,வெள்ளித் திரையில் விரிந்த விழாவாகும்.இதில் தமிழ்த்திரை வேறு எந்த மொழிக்கும் எப்போதும் சளைத்தது இல்லை.

   காதலுக்கு ஆலாபனை செய்த தலைப்புகளில்'காதல்''என்றென்றும் காதல்','ரம்பையின் காதல்'காதலன் 'கண்ணன் என் காதலன்,'காதல் மன்னன்''காதல்பரிசு','காதல் கோட்டை', 'காதல் வாகனம்','காதல் பறவைகள்', 'காதலிக்க நேரமில்லை','அந்தமான் காதலி''காதலில் விழுந்தேன்'  'காதலில் சொதப்புவது எப்படி','காதலே நிம்மதி', 'காதலா காதலா'போல இன்னும் எத்தனையோ விதவிதமான தலைப்புகளை,தமிழ்த்திரையில் பார்த்திருக்கிறோம்.  

  'பாதாள பைரவி' திரைப்படத்தில் கண்டசாலா இசையமைத்து பி. லீலா வுடன் சேர்ந்து பாடிய,"காதலே தெய்வீக காதலே"எனும் புனிதமான,காதல் வரிகளாய்த் தொடங்கி,தமிழ்திரையிசையில் கவிதை வரிகள்,காதல்  களத்தில் பல் வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளன. 'சக்கரவர்த்தித் திருமகள்'திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில்,

"காதலெனும் சோலையிலே ராதே ராதே,

நான் கண்டெடுத்த பொன் மயிலே ராதே ராதே"

 எனும் சுவையான பாடலொன்று, ஜி.ராமநாதன் இசையில்,கு.மா.பால சுப்ரமணியத்தின் கவிதையாய்,காதலை சோலையாக்கி களிப்புற்றது.

  "விழியில் விழுந்து இதயம் நனைந்து உயிரில் கலக்கும்" காதலை மறைப்பதும் மறப்பதும் கடினமே என்பதை,மனதில் பதியவைக்கும் பாடலே,சிவாஜி பத்மினி நடித்து,கலைஞர் வசனத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி குரல்களில் இதமாய் செவி களில் நுழைந்து நெஞ்சில் நிலைபெற்ற, 

திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலை 

தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ 

  எனும் உண்மை உள்ளடக்கிய பாடல்.ஏ.மருதகாசியின் இந்த அழகான வரிகளுக்கு டி ஆர் பாப்பா இனிமையாய் இசையமைத்திருந்தார்.  

  காதலில் விழுந்த தமிழ்த் திரையின் பயணத்தில்'கல்யாண பரிசு' திரைப்படத்தில்"காதலிலே தோல்வியுற்றான் காளை யொருவன்"/தோல்வியுற்றாள் கன்னியொருத்தி"என்று  பட்டுக்கோட்டை யார் எழுதி, ஏ.எம்.ராஜா இசையமைக்க, ஏ.எம்.ராஜா, பி.சுசீலா குரல்களில், சோகத்தில் ஊறிய பாடல்களில்,மனதை பறிகொடுத்தோம்.

  பின்னர்'பாதகாணிக்கை'திரைப் படத்தில் P.B ஸ்ரீனிவாஸ் J.P சந்திரபாபு குழுவினர் குரல்களில்"காதல் என்பது துவரை கல்யாண காலம் வரும் வரை"என்று காதலுக்கு காலவரையறை கொடுத்தமெல்லிசை மன்னர்கள் சையில் அமைந்த,கண்ணதாசனின் பாடலைக் கேட்டு,சிரித்தோம். 

 'சொல்லத்தான் நினைக்கிறேன்'என்று காதலை,சொல்லத் துடித்து சொல்லாமல் தோற்றுப்போனவர் பற்றியும்,அவர்கள் மத்தியில் 'சொன் னால் தான் காதலா'என்று விதண்டாவாதம் செய்வோரையும், திரைக்கதை நிகழ்வுகளில் பார்த்து காதலிக்காமல் போனவர்கள் எத்தனைபேரோ! 

"ச்சீ ச்சீ"என்று எட்டமுடியா பழத்தினை புளித்ததாகக் கூறும்  நரியின் நகைப்புக் கதையினைப்போல்,கிட்டாக் காதலை, கைக்கு எட்டா காதலை, 

காதல் கசக்குதயா

மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்

லவ்வுன்னுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும்

பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா!


யாராரோ காதலிச்சு

உருப்படல ஒண்ணும் சரிப்படல

வாழ்கையிலே என்றும் சுகப்படல

காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க

தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

தேவதாஸ் அவன் பார்வதி

அம்பிகாபதி அமராவதி

கதைய கேளு முடிவ பாரு

கடைசியில் சேராம..........

 என்று கரிசனமின்றி,கிண்டலடிப்பவரும் உண்டு.வாலியின் நகைச்சுவை ததும்பும் வரிகளுக்கு,இசைஞானி இளையராஜா மெட்டமைத்து தானே பாடிய வித்தியாசமான இப்பாடலை,பாண்டியராஜனின் முதல் இயக்கத் தில் உருவான 'ஆண்பாவம்'திரைப்படத்தில் கண்டு கேட்டு, குலுங்கி குலுங்கி சிரித்தோம்! 

  இவற்றையெல்லாம் மிஞ்சிய தேன்சுவைப் பாடலே,'பாலும் பழமும்' திரைப்படத்தில், பி.சுசீலா அனுபவித்துப் பாடிய, 

"காதல் சிறகை காற்றினில் விரித்து 

வான வீதியில் பறக்கவா 

கண்ணில் நிறைந்த கணவர் முன்னாலே 

கண்ணீர் கடலில் மிதக்கவா" 

என்ற எண்ணற்ற இதயங்களை கொள்ளையடித்த பாடல். 

   கண்ணதாசனின் ப்பாடலுக்கு, மெல்லிசை மன்னர்கள் சையமைத் திருந்தனர்.இவையனைத்துமே என்றும் இனிக்கும் திரையிசை காங் களாம். 

  காலத்தை நதியாக்கி அதில் காதலை படகாக்கி,தண்ணீரில் தத்தளிக்கும் படகுபோல காதலில் தவிப்போரின் சோகத்தை,ஓரிரண்டு அழாகான வரிகளில் கவியரசு கண்ணதாசன் வடித்த பாடலே, 

காலம் என்னும் நதியினிலே 

காதல் என்னும் படகு விட்டேன் 

மாலை வரை ஓட்டி வந்தேன் 

மறுகரைக்கு கூட்டி வந்தேன் 

  எனும் பி.சுசீலாவின் அமுதக்குரலில் நாம் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடலாகும்.எம்.ஜி.ஆரும் சாவித்திரியும் இணைந்து நடித்து D.யோகா னந்தின் இயக்கத்தில் உருவான, 'பரிசு'திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு,திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் மனம் நிறைந்து இசையமைத்திருந்தார். 

  காதலை பொன் வீதியாக்கி,அதில் காதல் வாகனமேறி,இலக்கியப் புரித லோடு காதல் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் காதலரும் உண்டு. அப்படிப்பட்ட அழகியக் காதலை, 'பூக்காரி'எனும் திரைப்படத்தில் கீழ்க்  காணும் கவிதை வரிகளாய், டி.எம்.சௌந்தராஜன் எஸ்.ஜானகி குரல்களில் கேட்டு பரவசமுற்றோம். 

"காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

பண்ணோடு அருகில் வந்தேன் நான்

கண்ணோடு உறவு கொண்டேன்

காதலின் பொன் வீதியில்

நானொரு பண்பாடினேன்

பண்ணோடு ஒருத்தி வந்தாள் என்

கண்ணோடு ஒருத்தி வந்தாள்'

  பஞ்சு அருணாசலத்தின் ந்தஅழகான வரிகளுக்கு,மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரம்யமாய் இசைமெருகூட்டினார். 

  மெய்மறந்து காதல் வயப்பட்டோரிடம், காதல் என்னவெல்லாம் எதிர் பார்க்கக்கூடும் என்பதை ஆழமாய் சித்தரித்த பாடலே, 'டூயட்'திரைப் படத்தில் எஸ்.பி.பி குரலில் நம் இதயங்களில் இனம்புரியா வலியைத் தோற்றுவித்த, 

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
..............................................
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
.......................................................
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா.............................

   எனும் விரக்தியில் விளைந்த நரகவேதனையை,காதலின் வினைப் பயனாய் ஆழமான உணர்வுகளுடன் அழுத்தமாய் பிரதிபலித்த பாடல்.  இசைப்புயல் ரஹ்மானின் உள்ளம் கொள்ளையடிக்கும் ஆலமர இசை  நிழலில்,வைரமுத்துவின் வசந்த வரிகள் சோகத்தில் இளைப்பாறின. 

   காதலின் மையப்புள்ளியாய் என்றென்றும் விளங்குவது கண்களே யாகும்."கண்களின் வார்த்தைகள் புரியாதோ?"என்று கேட்பதும் 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிட மண்ணில் ஆடவர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்'என்று நினைப்பதும்,கண்களால் கைது செய்யச் சொல்வதும்,காதல் வலையின் மாய லீலைகளாம். இதுபோன்றே, விழிக ளின் வட்டத்திற்குள் சுற்றிவந்த பலதிரைப்பட பாடல்கள் உண்டு. இந்த வகையில் விஜைய்யும்,பூமிகாவும் நடித்து வெளிவந்த 'பத்ரீ'திரைப் படத்தில்,பழனி பாரதி எழுதி,ஸ்ரீனிவாசும்,சுனிதா உபத்ரஷ்தா பாடிய, 

"காதல் சொல்வது உதடுகள் அல்ல

கண்கள் தான் தலைவா" 

  எனும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடலும்,லிங்குசாமியின்'பையா' திரைப்படத்தில் அமரர் ந.முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா தானே இசையளந்து,உயிர்கலந்து பாடிய, 

"என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை

உண்மை மறைத்தாலும் மறையாதடி …......

காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ

கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

இந்த விளையாட்டை ரசித்தேனடி"

   எனும் அசத்தலான பாடலும், 'செல்லலமே'திரைப்படத்தில் கேகே, சின்மயீ,திம்மி,மஹத்தி இணைந்து,ஹாரிஸ் ஜெயராஜின் அதிவேக இசைக்கு ஆனந்தமாய் பாடிய, 

"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான்

உன்னை காணும் முன்னால்"

  எனும் வைரமுத்துவின் வாலிப வேட்கை உணர்த்தும் வரிகளும்,காதல் கோட்டையின் கவின்மிகு முகப்புகளாகும். 

  காதலில் விழுந்த தமிழ்திரையின் அழியாத கோலங்களில் ஒருசில அழ கான வரைவுகள் மட்டுமே,இப்பதிவில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கின் றன.தமிழ்திரையிசை வரிகளில்'மனித காதலை வென்ற புனித காதல் வரிகள்'இன்னும் எத்தனையோ உண்டு. இவையனைத்துமே வரிகளின் வலிமையால்,இசையின் துடிப்பால்,இதயம் வென்று தமிழ்த்திரையின் பலத்தை பறைசாற்றுகின்றன!. 

ப.சந்திரசேகரன்

                                        ==============0================