Monday, December 27, 2021

The King of folk music is no more.


   Manickavinayagam an outstanding folkmusic specialist and playback singer,held the proud position of being the son of dancer Vazhuvoor Ramaiah Pillai and the nephew of last century's singular voice mould singer,C.S.Jeyaraman,who was also his music mentor.He was both a singer and actor.

    With his gripping and churning voice fabric,Manicka Vinayagam has sung exceptional songs like'Kannukkulla Oruthi'{Dhil}'Koduva Meesa'{Dhool}' Subbamma Subbamma Suluru Subbamma'{Roja Koottam}'Kattu Kattu Keera Kattu'{Thiruppachi}'Naane Indhiran'{Singam} and a few more captivating numbers.He has also been a composed actor,with imprinting role play in a score of films,of which Thiruda Thirudi,Gambeeram, Perazhagan, Bose,Giri, Thimiru and Vettaikkaran need a significant mention.

  Manickavinayagam was an occasional assessor of the performance of buddding singers,at the Vijay Supersinger programme.His contribution to Tamil Cinema was full of sheen and striking vigour.In his death Tamil folk music has lost its crowning glory.Tamil cinema is deprived of a balanced actor and a singer with a stentorian voice.His composed profile and controlled delivery of dialogues and comments on the screen and on the Vijay Super singer sets respectively,were distinctive markers of his overall personality as a special performer with competence and grasp of context.The departed soul of this remarkable singer-cum actor will  stay blessed in the abode of God.

                                           ===============0===============    

Monday, December 20, 2021

ஒற்றுமையின் குரலில் தமிழ்த்திரை

 

  மனித வாழ்வின் வளமான முன்னேற்றத்திற்கும் வெற்றியின் இலக்கிற்கும், ஒற்றுமையே உலகாளும் ஒரே இயக்கக் கோட்பாடாகும். இதைத்தான்,

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 

நம்மில் ஒற்றுமை நீங்கிடின் 

அனைவர்க்கும் தாழ்வு 

  என்றார் மகாகவி பாரதி.இவ்விரண்டு வரிகளில் முதல் வரியினைத் தலைப்பாகக் கொண்டு டி .ஆர்.ராமண்ணாவின் இயக்கத்தில் 'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு'          {1960} எனும் திரைக்காவியமும்'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' எனும் அடிப்படை யில்'ஒன்றே குலம்'{1956எனும்} திரைப்படமும் தமிழில் வெளிவந்தன .

    தமிழ்த் திரை வரலாற்றில்-1959ஆம் ஆண்டு திரையரங்குகளை பெருமைப் படுத்திய நடிகர் திலகத்தின்'பாகப்பிரிவினை'திரைப்படம் குடும்ப ஒற்றுமையை மையப்படுத்தி,நாட்டின் ஒற்றுமையையும் வலி யுறுத்தியது.ஏ.பீம்சிங்கின் இயக்கத்தில் வெற்றி நடைபோட்ட இத்திரைப் படத்திற்கு1959 -ஆம் ஆண்டின்  சிறந்த படத்திற்கான வெள்ளிப் பதக்கத்தை வழங்கி கௌரவித்தது இந்திய அரசு. இந்த தனிச்சிறப்பு வாய்ந்த படத்தில்,சீர்காழி கோவிந்தராஜன் குழுவினருடன் பாடிய,

மந்தரையின் போதனையால் மனம்மாறி கைகேயீ 

மஞ்சள் குங்குமம் இழந்தாள்;

வஞ்சக சகுனியின் சேர்க்கையால் கௌரவர்கள் 

பஞ்ச பாண்டவரை பகைத்து அழிந்தார். 

நெஞ்சினில் இவையெல்லாம் சிறிதேனும் கொள்ளாமல், 

மந்த மதியால் அறிவு மயங்கி 

மனம் போனபடி நடக்கலாமோ..

     என்று இதிகாச பார்வையுடன் தொடங்கி பின்னர்,  

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே 

வேற்றுமையை வளர்ப்பதினாலே விளையும் தீமையே 

   என்று தொடரும் பாடல் கவிஞர் A. மருதகாசியின் கருத்துச் செறிவான வரிகளாலும், மெல்லிசை மன்னர்களின் மேலான இசையாலும், சீர்காழியாரின் கனமான குரலாலும் காலம் வென்ற பாடலாயிற்று. 

  சமூக ஏற்ற தாழ்வுகள் அகற்றி ஒன்றுபட்ட சமூதாம் உருவாக்க அரும் பாடு பட்ட சமூக நீதி போற்றிய பாதையில்,தமிழ்த் திரையின் ஒளிவிளக் காய் விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில், ஒற்றுமையின் தேவையும் தாக்கமும் பாடல் வரிகளாக பல திரைப்படங் களின் உயிர்நாடி யானது.இந்த வகையில் பி.எஸ் .வீரப்பாவின் தயாரிப் பில் வெளியான 'ஆனந்த ஜோதி' திரைப்படத்தில் டி.எம்.சௌந்தராஜனின் உரத்த குரலில் ஒலித்த, 

ஒரு தாய் மக்கள் நாமென்போம் 

ஒன்றே எங்கள் குமென்போம் 

   எனும் ஒப்பற்ற பாடலும் பின்னர் 'பணக்கார குடும்பம்'திரைப்படத்தில் அதே டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர்.ஈஸ்வரி குரல்களில் நாம் கேட்டு மகிழ்ந்த 

ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே 

உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே 

   பாடலும்,என்றும் இனிக்கும் தமிழ்த்திரை கானங்களாகும்.இவ்விரண்டு பாடல்களுக்கும் கவியரசு கண்ணதாசன் தமிழுயிர் கொடுக்க,மெல்லிசை மன்னர்கள் இசையூட்டி வாழவைத்தனர்.

   மக்கள் திலகத்தின்  சத்யா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த  இன் னொரு வெற்றிப்படமான 'இதயக்கனி'யில் சீர்காழி கோவிந்தராஜன் டி. எம்.சௌந்தராஜன் மற்றும் எஸ்.ஜானகி இணைந்து பாடிய நீங்க "நல்லா இருக்கணும் நாடு முன்னேற"எனும் பாடலுக்கிடையே தோன்றும் 

உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள் 

உலகம் நமது என்று சிந்து பாடுங்கள் 

   எனும் அருமையான வரிகள் ஒற்றுமையின் பலத்தினை,டி.எம்.எஸ் குரலில் ஓங்கி உரைத்தது.'இதயக்கனி'திரைப்படத்தின் இப்பாடலை, கவிஞர் புலமைப்பித்தன் எழுத,மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் மனமுயர்த்தும் விதமாக இசையமைத்திருந்தார்.ஒற்றுமையைப்பற்றி இன்னொரு இயல்பான பாடலை, நடிகர்திலகத்தின் 'அன்புக்கரங்கள்' திரைப்படத்தில் காணலாம். கே.சங்கரின் இயக்கத்தில் உருவான இந்த சோகமான திரைப்படத்தில்,டி எம்.எஸ்.குரலில் பேச்சுத் தமிழால் பெருமை யூட்டிய பாடல் இதோ! 

ஒண்ணா இருக்க கத்துக்கணும் 

இந்த உண்மைய சொன்னா ஒதுக்கணும் 

காக்கா கூட்டத்த பாருங்க 

அதுக்கு கத்துக்குடுத்து யாருங்க 

   இந்த வாழ்க்கை நெறியினைத்தான் வள்ளுவரின் 

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் 

அன்ன நீ ரார்க்கே உள

  எனும் அற்புதமான திருக்குறள் வரிகள் உணர்த்தின.'அன்புக்கரங்கள்' திரைப்படத்தின் எல்லா பாடல்களையும் வாலி எழுத,அவைகளுக்கு ஆர். சுதர்சனம் இசை வடிவம் தந்து,நீங்காமல் நிலைபெறச் செய்தார்.  

  குடும்ப ஒற்றுமையையும் கூட்டுக்குடும்பத்தில் பலத்தையும் ஆழமான கதையம்சத்தாலும்,அழுத்தமான காட்சிகளாலும்,திரையரங்குகளில் உணர்வு பூர்வமாக ஒற்றுமையை நிலைநிறுத்திய,பாகப்பிரிவினை,பழனி பாரத விலாஸ், அன்பு சகோதரர்கள்,ஆனந்தம்,இணைந்த கைகள், வானத்தைப்போல,பாண்டவர் பூமி,போன்ற திரைப்படங்களை அவ்வப் போது மனதில் அசைபோட்டுப் பார்ப்பதில் ஏற்படும் சுகத்தினை, அனை அனுபவிப்போரே அறிவர்.

   ஒற்றுமையை வெள்ளித்திரை நிகழ்வுகளாகவும்,பாடல் வரிகளாகவும் எடுத்துக்காட்டி  வாழ்வில் அறநெறி போற்றுவதற்கு ஒற்றுமையே ஆணி வேராக அமைகிறது என்பதை உணர்த்திய தமிழ்த்திரையினை, மனமுவந்து பாராட்டுவதே,தமிழ்த் திரைப்படத்துறைக்கு நாம் செலுத்தும் மரியாதையும் நன்றிக்கடனுமாகும்.

ப.சந்திரசேகரன் . 

                                            ==========================   

Saturday, December 11, 2021

ஒத்த செருப்பு,ஒர்க்கவிதை



        {தாமதப் பதிவிற்கு,முதலில் திரு.பார்த்திபன் மன்னிக்க             வேண்டுகிறேன்} 

சித்தப்பிரமை காட்டி 

சீறிவரும் சிந்தனையாய்,

ஒத்தையாய் இருந்து 

மொத்தத் திரையையும் 

அத்தனை சமர்த்தாய்

கொத்தித் தீர்த்தாய்!

காசிலா மணியாகி  

மாசிலா மணியாக, 

மானம் திண்பவரை 

மாஞ்சா கயிற்கொண்டு

மாய்ந்திடச் செய்தாய்! 

வாழைப்பூ வடைகூட 

வாய்நிறையக்  குறும்போடு,

வார்த்தைகளால் வறுத்தெடுத்தாய்! 

வாழப்பிறந்த மகன் 

வாழும்நாள் குறிக்கப்பட,

காயத்தில் மனம்கனக்க

சாயம்பல வெளுத்திட்டாய். 

பேசும் படங்களும்

பேசாத படங்களும் 

கூசிடும் திரைகுறுகி,

ஒத்தை செருப்பு 

ஓங்கி அறைந்திட.!     

ஒளியில் ஒன்றாகி, 

ஒலிகள் பலவாகி  

வலிகள் வார்த்திடவே, 

பலமான திறமைக்கு  

பாராட்டு நிறையாமை, 

பெருமாள் அறிவாரோ 

பார்த்தன் பெறும்வலியை?  .   

ப.சந்திரசேகரன் . 

Friday, December 10, 2021

Anandraj from Auto Shankar days.

 



    Villains are of different kinds.There are smiling villains,sadistic villains,stealthy villains and sub-human villains. Shakespeare says "one may smile and smile and still be a villain".Whatever be the reflective course of villainy,its impact is that of a downing syndrome on the audience,on account of its devious schemes and devilish deeds. 

     Among the four types of villainy mentioned above,it is sub human villainy that leaves its brutal  blood stains,on the minds of the viewers.Villains like P.S.Veerappa,M.N.Nambiyar,FEFSI Vijayan,Ananad Raj and Pasupathi would belong to this category.The first two are even posthumously adored.FEFSI Vijayan's roles on the bigscreen are not many,when compared to Anand Raj and Pasupathy.Between the two,Pasupathi has moved on to playing character roles from Villainy and Anand Raj has slowly shed his ruffian demeanour of villainy and satrted playing comedy-mixed villain roles.

  Though Anandaraj started his acting career with Oruvar Vaazhum Aalayam and did villain roles in fims like En Thangachi Padichava and Sendhoora Poove,his weight of villainy was first felt in the horrid and very crude villain role that he played as Dharma,an auto driver,in R.K.Selvamani's most remembered film Pulan Visaranai.The role of Dharma was a replica of Auto Shankar{Gowry Shankar}who made news in real life as a serial killer in Chennai,during the Nineteen Seventies and was hanged in Salem central prison after his charges of serial murders were proved.The role of Dharma paved the way for Anandraj,to continue his film journey as one of the deadliest villains of Tamil cinema.

   After this,some of the prominent villain roles that Anand Raj played were for great films like Manakara Kaaval,Vandicholai Siinarasu,Simmarasi.Baashaa, Makkalaatchi,Arasiyal,Arasaatchi, Giri,Paattaali,Janaa,Pokkiri,Villu and Sooriya Vamsam.Anandaraj also did some lead roles in films like Manivannan's Government Maappillai and Senthil Nadhan's Pokkiri Thambi.

    With Sathyaraj,besides Vandicholai Sinnarasu,his other notable films were for Velai Kedachiduchu,Ulakam Pirandhadhu Enakkaaga,Maman Mahal and Malabar Police.After Sendhoora Poove and Manakarak Kaaval,his effective innings with Vijayakanth were for, Bharadhan,Puthu Padakan,Periyanna,Moonrezhuthil En Moochirukkum,Rajadhurai, Kannupada Pokudhayyaa,Vaanathai Pola,Thirumoorthi and as an honest police officer{DCP Kesavan Nair}in Perarasu.

  The other notable entries of Anandraj are Jallikattu Kaalai,Kattumarakkaaran,Mr.Madras{all with Prabu}Nandavana Theru,Edhir Kaatru,Pooveli {with Karthik Muthuraman}Ezhumalai, Adimai Changili {with Arjun}Paattukku Naan Adimai,and Thangathin Thangam{with Ramarajan}.His most recent,comedy mixed roles were for films like Iravukku Aayiram Kangal, Maragadha Nanayam,Silkkuvarpatti Singam,Bigil and Jackpot.

   Fortune did not favour Anandraj with hero roles as it did in the case of Rajinikanth and Satyaraj who first came as villains and then rooted themselves strongly to the roles of heroes.But as a Villain it is an indisputable fact that Anandaraj created a niche for himself in his own original style,first as a villain's hefty henchman and then as a horrid villain of singular mode,with his characteristic punch in dialogue delivery and suitable physical fixations to each and every scene,with an adorable body language.

  An element of horror would ever stay in audience memory while recalling the climax scene in Manakara Kaaval when Anandaraj as the hired killer to carry out a minister's plan of killing the Prime Minister, would be shot dead by Vijayakanth,the dedicated police officer-cum guardian angel of the Prime Minister.The indelible mark of the scene was,that Anandraj who was repeatedly hit by the bullets of Vijayakanth,would struggle to get up again to complete his mercenary mission,but would soon sink his head down and die after clapping his hands.That was the grand style of villainy of Anandraj and it is where he keeps intact,his stunning stamp of villainy.

  From the Auto Shankar days,Anandraj has been making calculated  and determined moves, towards making his villainy as impressive as possible.The best part of his acting is his calculated dialogue delivery with a clean and clear pause,where it is necessary.He has a distinct style of promoting direct villainy through his bold eyes and forthright utterances.Anandaraj is always a face-to-face villain and back stabbing villainy is out of his mission. Perhaps that is why comedy mixed villainy comes easy to him like child's play as he has casually essayed in the most recent Santhanam film Dikkilona.What a transformation it is, to see him slide casually from the brutality of Pulan Visaranai to a rib-tickling and self-defeating,ridiculous position in Dikkilona!         

                                      +++++++++++++++++++++++++++++++++++++

Wednesday, December 1, 2021

வசனம் உள்ளடக்கிய தமிழ்த்திரை பாடல்கள்

   ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதாநாயகனின் செல்வாக்கு,ரசிகர் பலம் உட்பட பலகாரணங்கள் முன்னுரிமை பெறுகின்றன.கடந்த நூற்றாண்டில் வெளிவந்த திரைப்படங்களின் வெற்றிக்கு, கதையமைப்பு, இயக்கம்,இசை,நடிப்பு, பாடல்கள், என்று எல்லாவற்றையும் பட்டியலிட்டுச் சொல்லலாம்.இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் திரைப் படங்கள் வசனத்திற்காகவும், இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் திரைப்படங்கள் வசனங்கள் மட்டுமல்லாது இயக்க உத்திகளுக்காகவும் பெரும் வரவேற்பைப்பெற்றன.

   பெரும்பாலும் நல்ல வசனத்திரளே கதைக்களத்திற்கு மெருகூட்டுகிறது.  வசனங்கள் திரைக்கதை நகர்ச்சியின் எரிபொருளாக மட்டும் நின்று விடாது,சில சமயங்களில் பாடல்களின் துவக்கத்திலோ அல்லது இடையிலோ நுழைந்து, திரைப்பட வரலாற்றில் நீங்கா இடம் பெறுவதுண்டு. அப்படிப்பட்ட வசனங்கள் வளம்கூட்டிய பாடல்கள் சிலவற்றை இப்பதிவில் பார்ப்போம்.

   1955-இல் ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான செல்லப்பிள்ளை திரைப் படத்தில் "மதனா எழில் ராஜா நீ வாராயோ"எனும் ஜிக்கி பாடிய பாடலொன்று வரும். அப்பாடலுக்கு இடையே,"மின்னல் இடையழகும் பின்னல் ஜடையழகும் கண்டு" எனும் வரியைப் பாடிய ஜிக்கி திடீரென்று நிறுத்த,உடனே சாவித்ரியின் குரலில் "நீங்களா?"எனும் கேள்வியும் அதைத் தொடர்ந்து கே.ஆர்.ராமசாமியின் குரல் "ஏன் நிறுத்திவிட்டாய் பாடு" என்று தொடங்கி,கோபமான வசனம் ஓரிரண்டு வரிகளில் வேல் போலப்  பாயும்.பாடலும் வசனமும் இணைந்து 'செல்லப்பிள்ளை 'திரைப் படத்தின் மறக்கமுடியா காட்சியானது.எம்.வி.ராமன் இயக்கிய இத்திரைப்படத் திற்கு,R.சுதர்சனம் இசையமைத்திருந்தார். 

   இதைத்தொடர்ந்து 1958-இல் வி.எஸ்.ராகவனின் இயக்கத்தில் வெளியான 'சாரங்கதாரா'திரைப்படத்தில் பாடலுக்கு முன்பாகவே''இந்த புறா ஆட வேண்டு மானால்  இளவரசர் பாடவேண்டும்'' என்று நடிகை ராஜசுலோச்சனா கூற,உடனே நடிகர் திலகம்''ஓ பாடவேண்டுமா''என்று கூறி அமர்க் களமாய் அவர் வாயசைக்க,டி எம்.எஸ்.பாடிய ஒப்பற்ற பாடல்களில் ஒன்றே"வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே" காலம் வென்ற இப்பாடலுக்கு ஜி.ராமநாதன் இசையமைத்திருந்தார்.

  அதே ஆண்டு ஜெமினி ஸ்டுடியோஸ் எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கிய, 'வஞ்சிக்கோட்டை வாலிபன்'திரைப்படம் திரையரங்குகளை நிறைத்தது. அப்படத்தில் வைஜயந்திமாலா&பத்மினி எனும் இருவரின் ஆர்ப்பாட்டமான நடனப்போட்டிக்காகப் பி.சுசீலாவும் பி.லீலாவும் இணைந்து பாடிய"கண்ணும் கண்ணும் கலந்து சொந்தம் கொண்டாடுதே'' எனும் மிகச் சிறந்த பாடலுக்கிடையே ஒலிக்கும் பி.எஸ்.வீரப்பாவின் 'சபாஷ் சரியான போட்டி' எனும் ஒற்றை வரி வசனம் வில்லத்தனத்தில் வஞ்சகத்தோடு,'வஞ்சிக் கோட்டை வாலிபனை' நிலை நிறுத்தியது. இப்பாடலுக்கு சி.ராமச்சந்திராவும் ஆர்.வைத்யநாதனும் இணைந்து இசையமைத்திருந்தனர். 

  1959-இல் ஜுபிடர் பிக்செர்ஸ் தயாரித்து ஏ.எஸ்.ஏ சாமியின் இயக்கத்தில் வெளிவந்த'தங்கப்பதுமை'திரைப்படத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடிய "மனிதன் ஆரம்பமாவது  பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே" எனும் மனதை உலுக்கும் பாடலுக்கு நடுவே, கொடுங் கோல் இளவரசி எம்.என்.ராஜத்தின் அரக்கத்தனத்தால் சிவாஜிகணேசனின்,கண்கள் இரண்டும் பறிக்கப்பட்டதைக் கண்டு,பத்மினி அலறிக் கொண்டே பேசிய ஆவேசமான வசனமும், அதைத் தொடர்ந்து ஜெயராமனின்"கண்ணை கொடுத்தவனே  பறித்துக்கொண்டாண்டி''எனும் பாடல் வரியும் இப்போதும் நெஞ்சில் நின்று கனக்கிறது. இப்படத்தின் பாடல்கள் பலவும், விஸ்வநாதன் ராமமூர்த்தியின்  இசையில், இசை ரசிகர்களுக்கு விருந்தாயின.   

  பின்னர் 1960-இல் கே.சோமுவின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த 'பாவை விளக்கு'திரைப்படத்தில், 

பெண்ணொருத்தி என் அருகில் வந்தாள்

தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாள் 

வண்ணத்தமிழ் பெண் ணொருத்தி என்னருகில் வந்தாள் 

   என்று வரி வரியாய் சிவாஜி கணேசன் வசனமாய் எடுத்துக்கொடுக்க,        சி.எஸ்.ஜெயராமனின் வித்தியாசமான குரலில் தமிழமுதமாகியது ஒரு பாடல். இலக்கிய நயம்கொண்ட இப்பாடலுக்கு, திரைஇசைத்திலகம் கே.வி மகாதேவன் இசைத்தேன் கலந்தார்.  

   1961-இல் ராஜாமணி பிக்செர்ஸ் தயாரிப்பில் ஏ.பீம்சிங் இயக்கி அமரத்துவம் பெற்ற,'பாசமலர்'திரைப்படத்தில்"ஆனந்தா நான் என் கண்ணை யே ஒங்கிட்ட ஒப்படைக்கிறேன்;அதுல ஆனந்த கண்ணீரத்தான் நான் எப்பவும் பாக்கணும்" என்று சிவாஜி கணேசன் உணர்வு பொங்க கூறிட, அதற்கு உடனே ஜெமினி கணேசன்"அது என் கடமை ராஜு நீ கவலைப் படாதே"என்று பதில் சொல்ல,உடனே சிவாஜி "நன்றி ஆனந்தா மிக்க நன்றி"என்று கூறிவிட்டு தனது சகோதரி சாவித்திரி யைப் பார்த்து,"மஞ்சள் குங்குமத்தோட நீ நீடூடி வாழனும்"என்று வாழ்த்தியபின் எல்.ஆர் ஈஸ்வரி குழுவினருடன் பாடிய என்றும் இனிக்கும் பாடலே"வாராயென் தோழி வாராயோ;மணப்பந்தல் காண வாராயோ''.விஸ்வநாதன் ராம மூர்த்தி இசையில்,இன்றும் தமிழ் திரையிசைகாங்களில் தனியிடம் பெற்ற ஒரு திருமண விழாப் பாடலாகும்.

  பின்னர் 1962-இல் ஏ வி எம் தயாரிப்பில் ஏ பீம்சிங் இயக்கத்தில் உருவான வெற்றிப் படமான 'பார்த்தால் பசிதீரும்' திரைப்படத்தில் தமிழ் தெரியா தன் காதலியான சாவித்திரிக்கு ஜெமினி கணேசன் தமிழ் கற்றுத்தருவதாக 'ஆனா ஆவன்னா' சாவித்திரி  ன்று அகர வரிசையில்  தொடங்க அதைத்தொடர்ந்து ஒவ்வொரு எழுத்தினையும்  சாவித்திரி எடுத்துரைக்க ஏ.எல்.ராகவன் பி.சுசீலா குரல்களில் அமுதமென ஒலித்த பாடலே "அன்று ஊமை பெண்ணல்லோ இன்று பேசும் பெண் ணெல்லோ".கண்ணதாசனின் ஆழமான வரிகளுக்கு விஸ்வநாதன்  இனிமையாய்  ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்  

  எம்.வி ராமன் இயக்கி  தே  ஜெமினி கணேசனும் சாவித்திரியும் இணைந்து நடித்து 1962 -இல் திரைக்கு வந்த 'கொஞ்சும் சலங்கை'படத்தில். எஸ் ஜானகி அருமையாய் குரலுயர்த்திப்பாடிய "சிங்கார வேலனே தேவா" எனும் பாடலின் துவக்கத்தில் நாயகனைக் கண்ட நாயகி"நீங்களா"என்று கூற அதற்கு  ஜெமினி  கணேசன்  தனக்கே உரிய குழைவுக்குரலில்'சாந்தா உட்கார் ஏன் பாட்டை நிறுத்தி விட்டாய்? ன் இசையென்ற இன்ப வெள்ளத் திலே நீந்துவதற்கு ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா'என்றதும்,அதற்கு சாவித்திரி'ன் இசை உங்கள் நாதஸ்வரத் திற்கு முன்னால்' என்று சொல்லி முடிப்பதற்கு முன்னரே,மீண்டும் ஜெமினி "தேனோடு கலந்த தெள்ளமுது;கோல நிலவோடு சேர்ந்த குளிர்த்தென்றல் இந்த சிங்கார வேலன் சன்னதியில் நமது சங்கீத அருவிகள் ஒன்றுகலக்கட்டும்;  பாடு  சாந்தா பாடு''என்று தமிழின் சுவையினை தாரைவார்த்துக் கொடுத்தவுடன், மீண்டும் ஜானகியின் இசைமுழக்கம் தொடரும். 

  எஸ்.எம் சுப்பையா நாயுடுவின் இசைத்துடிப்பில் காரைக்குறிச்சி அருணாச்லத் தின் நாதஸ்வரமும், எஸ்.ஜானகியின் பாடலும் ஒருங்கிணைந்து'கொஞ்சும் சலங்கை'யினை கோபுரத்தில் ஏற்றிவைத்தது. இவையனைத்தும் தமிழ்த்திரைப்பட வரலாற்றின் பொற்காலமாகும்.  

  இதே ஜெமினி கணேசன் குரல் கொடுத்து துவக்கி வைத்த பாடலொன்று ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில் C.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் 1965-இல்  திரைக்கு வந்த 'வாழ்க்கைப்படகு' திரைப்படத்தில் கேட்க நேர்ந்தது."சிரிடா கண்ணா சிரி ஆண்டவன் புண்ணியத்துல நீயாவது எப்போதும் இந்த புன்னகையோடவே இருக்கணும்" என்று ஜெமினிகணேசன் கூற, அதைத்தொடர்ந்து P.B.ஸ்ரீனிவாசின் காந்தக் குரலில் இதமாய் இதயம் தழுவியது,"சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ" எனும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் உதித்த பாடல்.

  அதே ஆண்டு அதே இரட்டையர்கள் இசையமைத்து ஏ.வி.எம் ஸ்டுடியோ வில் சரவணா பிக்செர்ஸ் தயாரித்து கே.ஷங்கர் இயக்கத்தில் உருவான மறக்கமுடியா இன்னுமொரு அருமையான தமிழ்திரைப்படமே 'பஞ்ச வர்ணக்கிளி'.ஆர்.முத்து ராமன் ஜெய்ஷங்கர் கே.ஆர்.விஜயா நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் ''கண்ணன் வருவான் கதை சொல்லுவான்'' எனும் பி சுசீலா பாடிய அமுதான பாடல் இருமுறை வரும்.

  இரண்டாவது முறை சோகமாக தொனிக்கும் அப்பாடலின் இடையே முத்துராமன்  பேசும் வசனமே"அண்ணி ஏன் நிறுத்திட்டீங்க நான் காதலிச்ச அந்த குரலை மீண்டும் கேட்கணும்போல இருக்கு''எனச் சொல்ல,அதற்கு கே.ஆர் விஜயா ''உங்களுக்கில்லாத பாட்டா''என்று கூறுவார்.முத்துராமன் வானொலியில் கேட்டுக் காதலித்த குரலுக்குச் சொந்தக்காரியான கே.ஆர் விஜயா முத்துராமனின்  அண்ணியென  தவறாக புரியப்பட்டதன் பின்னணியில் வந்த பாடலே அது. இப்பாடலுக்கு இடையே வரும் வசனத்தில் இன்னும் சில வரிகள் கூட இருக்கும்.

  1968-இல் ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான நடிகர் திலகத்தின் நூற்று ஐம்பதாவது திரைப்படமான உயர்ந்த மனிதன் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் டிஎம் எஸ் மற்றும் மேஜர் சுந்தராஜன் ஆகிய மூவரும் போட்டி போட்டு வசனத்தால் வெற்றிக் கொடி நாட்டிய"அந்த நாள் நெஞ்சிலே வந்ததே நண்பனே"பாடல் என்றென்றும் நினைவை விட்டகலா ஒன்றாகும். 

   வியட்நாம் வீடு சுந்தரத்தின் இயக்கத்தில் 1973-ஆம் ஆண்டு வெளியான 'கெளரவம்'திரைப்படத்தில்'பாலூட்டி வளர்த்தகிளி பழங்கொடுத்து பார்த்த கிளி நான் வளர்த்த பச்சைக்கிளி நாளை வரும் கச்சேரிக்கு'எனும் அழுத்தமான பாடல் டி எம் சௌந்தராஜன் குரலில் கம்பீரமாய் ஒலித்து திரையரங்கில் வானொலியிலும் வெகுவாக நம்மை ஆட்கொண்டது.

  அப்பாடலின் தனிச்சிறப்பே பாடல் தொடங்குவதற்கு முன்னர் இளையவர் சிவாஜி கணேசன் அவரின் பெரியப்பா மூத்த சிவாஜியின் கடும் கோபத் திற்கு உள்ளாகி வீட்டைவிட்டு வெளியேற,பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேட மணிந்த மூத்த சிவாஜி,தன் மனைவி பண்டரிபாயைப் பார்த்து "செல்லம்மா எங்கடி அந்த பய,ஆத்தவிட்டு போய்ட்டானா? அது வேற ஒண்ணுமில்லடி.கிளிக்கு ரக்க மொளச்சிடுச்சு ஆத்தவிட்டே பறந்து போயிடுச்சு" என்று அவருக்கே உரிய பாணியில் கண்ணீருடன் கர்ஜனை செய்து,பாடலைத் தொடங்குவார். சிம்மக்குரலோனின் வசனத்துடன் தொடங்கி  மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் பாலூட்டிய பாடல், தமிழ்த்திரை பாடல்கள் வரிசையில் தனி முத்திரை பதித்தது.

  1974- ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அவரின் குடும்பத் தயாரிப்பு நிறுவனமான சிவாஜி Productions தயாரித்து பி.மாதவன் இயக்கத்தில் நடித்து,திரை அரங்குகளை கூட்டத்தால் திணறடித்த,'தங்கப் பதக்கம்' திரைப்படத்தில், டி.எம்.சௌந்தராஜனின் பாடலுக்காக,பிழையறியா  சிவாஜியின் உதட்டசைப்பில்,ஆழ்ந்த சோகத்தை உட்புகுத்திய பாடலே,

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி 

வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி .

  இப்பாடலுக்கு நடுவே,சிவாஜியின் மருமகளாக நடித்த பிரமீளாவின் "மாமா காஞ்சுபோன பூமியெல்லாம் வற்றாத நதியைப்பாத்து ஆறுதல் அடையும்;அந்த நதியே வறண்டு போனா! துன்பப்படறவங்களெல்லாம் தங்களோட துன்பத்த தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க.தெய்வமே கலங்கி நின்னா அந்த தெய்வத் துக்கு யாரால ஆறுதல் சொல்லமுடியும்?" என்று வினவ,சோகத்தில் ஊறிய சோதனை பாடல் தொடரும்.'தங்கப் பதக்கம்'திரைப்படத்தின் அபார வெற்றிக்கு M.S  விஸ்வநாதன் இசையில்   இப்பாடல் காட்சியும் ஒரு வகையில் பங்களித்தது எனலாம். 

  இறுதியாக,1991 -ஆம் ஆண்டு கமலகாசன் நடித்து சந்தானபாரதியின் இயக்கத்தில் வெளியான'குணா'திரைப்படத்தில்"கண்மணி என்னோட காதலி"எனும் பாடலின் குறுக்கே கமல் வசனமாக ஒவ்வொரு வரிகளையும் சொல்ல அவரது காதலியாக வந்த அபிராமி அதனை தொடர்வதாக காட்சி அமைந்திருந்த அப்பாடல் வித்தியாச மாக இருந்து,நல்ல வரவேற்பைப்பெற்றது. வசனத்துடன் கச்சிதமாய்ப் பொருந்தி தமிழ் திரையிசைக்கு மாறுபட்ட பரிமாணம் படைத்த பெரும்பாலான பாடல்களை இப்பதிவின் கண்டோம். விட்டுப்போனவை நினைவில் ஒட்டாமல் போனவையாகக் கொள்ளலாம். 

ப.சந்திரசேகரன்  

                                     ==============0================