Monday, December 25, 2023

The Vijaya Vauhini Studios

  

   In the line of Gemini Studios and AVM film production house, the Vijaya Vauhini Studios has remained as a prominent motion picture movie studios in Chennai.This illustrious film making house is a combination of Vijaya Studios run by Bommireddy Nagi Reddy and Chakrabani and the Vauhini Studios let on lease by Moola Narayana Swamy,their longtime partner. 

  Started in 1948 some of the unforgettable films made by the Vijaya Vauhini Studios are Padhala Bhairavi,Kalyanam Panni Paar,Chandraharam, Missiamma,Guna Sundari,Maya Bazar,Kadan Vaangi Kalyanam, Manidhan Maaravillai,the block buster MGR film Enga Veetu Pillai that ran in theatres for more than a year,Enga Veettu Penn, Nam Naadu,the other superhit MGR film, Sivaji Ganesan's Vani Rani, Rajini's Uzhaippali, Kamal's Nammavar,Visu's Meendum Savithri, Vishal's Thamirabharani,the two Danush films Vengai and Padikkaadhavan,Ajith's Veeram, Vijay's Bhairava and Vijay Sethupathi's Sanga Thamizhan.

  Besides these Tamil entries there were many Telugu films made by Vijaya Vauhini Studios and a few Hindi films of which Ram Aur Shyam {the Hindi remake of Enga Veetu Pillai}and Julie which was a remake of the most popular Malayalam film Chattakari were major Bollywood hits.L.V.Prasad, K.V.Reddy and Tapi Chanakya were the main directors of films produced under the banner of Vijaya Vauhini Studios.The other directors inducted were C.P.Jambulingam,[Nam Nadu} P.Vasu,{Uzhaippali},Manobala,{Karuppu Vallai}Suraj {Padikkadhavan},Siva,{Veeram}K.S.Sethu madhavan,{Nammavar}Bharadhan {Bhairava} and Hari.{Thamirabharani & Venghai}.Among the last century top most heroes Gemini Ganesan acted in five of their movies,MGR in two and the Chevalier just in one. 

  Majority of the films from Vijaya Vauhini Studios were decent and delighting films meant for the family audience.Breezy humour was the prominent element of these films.Films like Kalyanam Panni Paar,Missiamma &Manidhan Maaravillai were specially filled with high quality humour spread throughout the narration with delicate aesthetic touches.While Padhala Bhairavi and Maya Bazar had mythical element of sustaining quality,all the other films were action oriented. Family values,social awareness,wellness of mind, courage and conviction and spirit of brotherhood were the chief human traits reflected by the narration mode of these films.It was this varied cinematic sense that caused a lot of positive vibes and fulfilment of expectation in terms of exalting entertainment.

  The makers of films under Vijaya Vauhini would have been different.But all of them were suitably motivated towards augmenting the richness in audiovisual display of power packed emotions transmitting through human minds. Vijaya Vauhini Studios delivered what the audience always looked for and thereby facilitated the unfailing double goals of commercial viability and consumer satisfaction. Appropriate gauging of the mood of the viewers remained as one of the clinching points of Vijaya Vauhini Studios in taking the quality of Tamil cinema to its desired heights.This could be the secret of their continued success story.

       ==============0==============

Tuesday, December 19, 2023

பார்வைகள் பலவிதம்

"ஒராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நானறிவேன்" 

('வல்லவனுக்கு வல்லவன்'திரைப் படம்; பாடல் டி.எம்.எஸ் குரலில்)

 என்ற இதமான பாடல்,பல ஆயிரம் பார்வை களில் ஒற்றைப் பார்வையை,காதலின் பலத்திற்கு உறுதி மொழியாக்கியது. மாறாக,

"பார்வை ஒன்றே போதுமே

பல்லாயிரம் சொல் வேண்டுமே"

(படம் 'யார்நீ' பாடலைப் பாடியது டி.எம்.எஸ்& எல்.ஆர்.ஈஸ்வரி) 

  எனும் டூயட் பாடல் வரிகள்,காதலின் ஒற்றைப் பார்வைக்கு விடைகாண,ஓரா யிரம் சொற்கள் தேடியது.இந்தபாடல்கள் இரண்டிற்குமே வரிகள் கண்ணதாசன் எழுத,வேதா இசையில் வேகம் கூட்டினார். மாற்றுச் சிந்தனைகள் பார்வையின் பன்முகத்தன்மையை விரிந்து,பரந்து, பறக்கச் செய்தது.

"இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது 

இந்த பார்வைக்குத்தானா பெண்ணாவது"

('வல்லவன் ஒருவன்'திரைப்படத்தில் P.சுசிலாவும் டி.எம் எஸஸும் பாடியது) 

  என்று காதலின் கடோத்கஜ பார்வையை கேலி செய்த டூயட் பாடல்,மீண்டும் கண்ண தாசன் வரிகளைத்தாங்கி,வேதாவின் இசை யில் வேடிக்கைக் காட்டியது.

"மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாட வேண்டும் 

"நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்" 

('கொடிமலர்'படத்தில் P.B.ஸ்ரீநிவாஸ் மெய் மறந்து பாடியது)

 எனும் கண்ணதாசன்வரிகள்,விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் மௌனத்திற்கு பார்வை பலம் கொடுத்து பாடலாக்கியது.

 இதே P.B.ஸ்ரீநிவாஸ் 'வாழ்க்கைப்படகு' திரைப்படத்தில் பாடிய "நேற்றுவரை நீ யாரோ நான் யாரோ"பாடலுக்கிடையே தோன்றும்,

"உன்னை நான் பார்க்கும்போது 

மண்ணை நீ பார்க்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும்போது 

என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தாலென்ன

நிலவென்ன தேய்ந்தா போகும்"

  எனும் வரிகள் மூலம் காதல் களியாட்டத் தில் பெண்மையின் கண்ணாமூச்சிப் பார்வை,கனிவான அத்தியாயங்கள் எழுத வல்லது எனும் சுவையான கற்பனை மந்திரத்தை,சொற்களால் சொல்லியடித் தார் கவியரசு.இப்பாடலுக்கும்,இரட்டையரே இசைக்கூட்டினர்.

"பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்

நீ பாடும் மொழி கேட்கையிலே வார்த்தை இழந்தேன்"

  என்று 'மணப்பந்தல்'திரைப்படத்தில் P.B.ஸ்ரீநிவாசும் P.சுசிலாவும் பாடிய பாடல் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில், கண்ணதாசன் வரிகளால் காத்திருந்ததை பார்த்திருந்ததாக்கி,கேட்டிருந்ததை மௌன மொழியாக்கியது.ஆனால்'நீ வருவாய் என' திரைப் படத்தில் கே.எஸ்.சித்ரா ஒரு முறை யும் ,S.P பாலசுப்பிரமணியம் ஒரு முறையும் பாடும் பா.விஜய்யின் வரிகளாய் எஸ்.ஏ.ராஜ் குமாரின் இன்னிசையில் கேட்ட,

"பார்த்து பார்த்து கண்கள் பூத்திருந்தேன் 

நீ வருவாய் என

பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன்

நீ வருவாய் என"

   எனும் பாடல்,காத்துப் பார்த்திருப்பதை, பூக்களாய் பூக்கச்செய்து,புன்னகை பெருக்கியது.

  "என்ன பார்வை உந்தன் பார்வை

  இடை மெலிந்தாள் இந்த பாவை"

எனும் P.சுசிலாவின் பெண்குரலிலும்

"என்ன பார்வை உந்தன் பார்வை 

என்னை மறந்தேன் இந்த வேளை" 

எனும் கே.ஜே.ஏசுதாசின் ஆண்குரலிலும் எழுந்த'காதலிக்க நேரமில்லை'திரை கானமும்,

"முன்தினம் பார்த்தேனே

பார்த்ததும் தோற்றேனே"

  எனும் நரேஷ் அய்யர்&பிரஷாந்தினி பாடிய 'வாரணம் ஆயிரம்' படப்பாடலும்,பார்வை யை மன்மதன் ரதியின் கனைகளாக்கி, காதல் களத்தில் பார்வையின் பாதிப்பை பரவசமாய் மனதில் பதியச்செய்தன. முன்னதை விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்கு கண்ணதாசன் வரியமைக்க, 'வாரணம் ஆயிரத்திற்கு',தாமரை கவிதை புனைய, ஹாரிஸ் ஜெயராஜ் உளம் நனைய இசை ஊற்றினார்.பார்வையின் பலத்தை பக்குவமாய்,ஏ.எல் ராகவனின் குரலில் மனதில் பதியம் போட்ட பாடலொன்று,1959 இல் வெளி வந்த'பாஞ்சாலி'எனும் படத்தில் இடம் பெற்றது.

"ஒருமுறை பார்த்தாலே போதும்

உன் உருவம்

மனதை விட்டு நீங்காது எப்போதும்"

  எனும் எளிமையான அ.மருதகாசியின் வரிகளுக்கு கே.வி.மகாதவன் பாந்தமாய் இசையமைத்திருந்தார்.

 பார்வையை பகிரும் வண்ணம் 'மரகதம்' திரைப்படத்தில் எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு வின் மேலான இசையில் டி.எம்.சௌந்தரா ஜனும் ராதா ஜெயலட்சுமியும் பாடிய,

"கண்ணுக்குள்ளே உன்னைப்பாரு

அது காவியம் ஆயிரம் கூறும்"

எனும் ரா.பாலுவின் வரிகளும்,

  'தங்கப்பதுமை'திரைப்படத்தில் விஸ்வ நாதன் ராமமூர்த்தியின் தேன்சுவை இசையில் டி.எம்.எஸ்ஸும் P லீலாவும் பாடிய,

"முகத்தில் முகம் பார்க்கலாம்

விரல் நகத்தில்

பவழத்தின் நிறம் பார்க்கலாம்"

  எனும் பட்டுக்கோட்டையார் பாடலும், இலக்கிய நயத்தை வெண்திரையில் விதைத்து பார்வைக்கு பலம் கூட்டின.

  மேலும் பார்வையை கிண்டலாக விமர்சித்து

"பார்த்தாலும் பார்த்தேன்

 நான் உன்னப்போல பார்க்கல" 

(படம்:-'ஆயிரம் ரூபாய்'கண்ணதாசன் வரிகளை P.B.ஸ்ரீநிவாசும் P.சுசிலாவும் கே.வி.மகாதேவன் இசையில் பாடியது)

 என்று குறை கூறலும்,

''பார் மகளே பார் பார் மகளே பார்

நீயில்லாத மாளிகையை

பார் மகளே பார்

உன் நிழலில்லாமல் வாடுவதை 

பார் மகளே பார்

தாய் படுத்த படுக்கையினை

பார் மகளே பார்

அவள் தங்க முகம் கருகுவதை

பார் மகளே பார்"

( படம்:-பார் மகளே பார்.விஸ்வநாதன் இசையில் டி.எம்.எஸ் பாடிய கண்ணதாசன் பாடல்)

  என்று மகளைப் பிரிந்த வேதனையை பார்க்கச் சொல்லி விளிப்பதும்,

  "உன்னைப்பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது"

('அடிமைப்பெண்'திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய வாலியின் வரிகள்)

  என்று பார்வையின் ஏளனத்தை பறைசாற் றுவதும், 

"ஏன் சிரித்தாய் என்னைப்பார்த்து

உன் எழில்தனைப் பாடவா தமிழைச் சேர்த்து:

( பொன்னித்திருநாள் எனும் திரைப்படத் தில் கே.வி.மகாதேவன் இசையில் P.B.ஸ்ரீநிவாஸ் பாடிய கவிஞர்.பி.கே.முத்து சாமியின் கவிதை) என்று பார்வையின் காரணத்தைக் நளினமாகக் கோருவதும், 

   பார்வை நாடகத்தின் பல சுவையான மேடைக் காட்சிகளே!

"பார்த்த நியாபகம் இல்லையோ

பருவ நாடகம் தொல்லையோ"

எனும்'புதிய பறவை'யின் P.சுசலாவின் நேரடிக் கேள்விக்கு,

"பார்த்தால் பசி தீரும் பருவத்தின் மெருகேறும் 

தொட்டாலும் கை மணக்கும்

தொட்ட இடம் பூ மணக்கும்"

   எனும் P.சுசிலாவின் 'பார்த்தால் பசி தீரும்' திரைப்படப்பாடல் பார்வையின் பதிலடி ஆகியிருக்குமோ?விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைக்கென,இவ்வரிகள்  எழுதிய கண்ண தாசனின் கற்பனையே;இதன் எதிர்வினைக் காரணம் அறியும்.

"என்னைப் பாரு என் அழகைப்பாரு   கண்ணாலே 

ரெண்டு கண்ணாலே

பார்த்தால் இன்பலோகம் இங்கே தெரியும் தன்னாலே"

   என்று விழிகளால் பந்தாடி பார்க்கச் சொல் லும் பாடலொன்றும்,'மனோகரா'திரைப் படத்தில் T.V.ரெத்தினம் குரலில் இடம்பெற் றது.உடுமலை நாராயணகவியின் இப்பாட லுக்கு எஸ்.வி.வெங்கட்ராமனும் டி.ஆர்.ராம நாதனும் இணைந்த இசையமைத்தனர்.

இதற்கு,

"நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

நல்ல அழகி என்றேன் நல்ல அழகி என்பேன்"

    என்று'அன்பேவா'வின் வாலி எழுதிய.  டி.எம்.எஸ்ஸி&P.சுசிலாவின் மறைமுக பதில்,மற்றொரு பார்வையாகும்.வாலி எழுதிய இப்பாடலுக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி  இசையமைத்திருந்தர்.

  இப்படியாகவும் இதற்கு மேலும் பல்வேறு பார்வைகளின் பதிவுகளுக்குள் பதிவான தமிழ்திரை,'என்னைப் பார்','பார் மகளே பார்','என்னைப்பார் என் அழகைப்பார்', 'பார்த்தால் பசி தீரும்','பார்த்தேன் ரசித் தேன்''பார்த்தாலே பரவசம்','பார்வையின் மறு பக்கம்',என்று பல பார்வை போற்றும் தலைப்புகளை தருவித்தது.மொத்தத்தில் தமிழ்த்திரை கண்டது, பன்முகப் பார்வை கள் மட்டுமன்று;அவற்றின் பல முனை தாக்கங்களும் தான்.

       ==============0================



Sunday, December 10, 2023

A sequel that outshines its prequel.

 



                                                  {Courtesy NETFLIX}

    Tamil cinema has seen many sequels failing in the box office to let their prequels stay perpetually fixed in audience memory. Singam 2 &3, Sandakozhi 2 and Samy 2 are standing examples in this regard. But to turn the tables in favor of sequels,here comes Jigardhana Double X, a sequel to the film Jigardhanda released in 2014.
  Though both the films are the products of Karthik Subbaraj Jigardhanda Double X certainly doubles up the speed of its creative drive to outshine his first film Jiggardhanda.The main reason for its doubled-up drive could be the poignant theme factor hitting the imagination and thought process of the audience,with a totally different verve when compared to its predecessor.
  No doubt the first version of Jigardhsnda was a bold dark comedy kickstart of Subburaj that took Bobby Simha to fame in the line of romantic poet George Gordon Byron, who is said to have woken up one morning and found himself famous. The film also gave due weightage to the role of Sidharth. However, unlike the former film which safely travelled on the new track of comedy this sequel which has a lukewarm start, takes its lead and surpasses its prequel in the totality of its narration by transiting from the comedy lane to an absolutely gripping tale of the exploited forest tribes and the elephants undone, for the sake of their tusks.
    Ragava Lawrence as Alliyan Caesar ,S.J.Suryah as Kirubai Arokiyaraj,Nimisha Sajayan as Alliyan's wife and Naveen Chandra as DSP Rathnakumar have all contributed their best in role delivery to make this sequel not a mere succession of Jigardhanda,but a substantial success story with an outshining thrust in its dynamism and appeal to the audience. A special mention has to be made about the roaring and monstrous roleplay of Vidhu as Shettani especially about the way he pounces on the elephants and later on Lawrence.Jigardhanda Double X would remain as a special film for Ragava Lawrence.
  The music of Santhosh Narayanan comfortably and comprehensively travels along with the narration of the film both in background score and composition of songs. The cameras take a gory round in presenting each scene with visual force that simultaneously hits the eyes and minds of the audience. The entire team of Jigardhanda Double X deserves audience appreciation for its unique mode of presentation.This piece of Karthik Subbaraj establishes the power of cinema to unfold the varied parameters of evil and thereby project itself as the torch bearer for the afflicted sections of mankind.Special courtesy to Netflix for taking this worth watching film to each one's home links.

Friday, December 1, 2023

தமிழும் தமிழரும் தமிழ்த்திரையும்

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே"

  எனும் மகாகவி பாரதியின் கூற்று பாட லாக 'உத்தமபுத்திரன்' (1940)திரைப்படத் தில்,ஜி.ராமநாதன் இசையில், P.U.சின்னப்பா பாடிய தாகவும் பிறகு எல்.வைத்திய நாதன் இசையில்'ஏழாவது மனிதன்' (1982) திரைப்படத்தில் பி.சுசிலா பாடிய பாடலாகவும் இடம் பெற்றதோடு, இன்னும் சில திரைப்படங்களிலும் இடம்பெற்றிருக்கக் கூடும்.பாரதியின் மற்றொரு உயரிய 

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்

வாழிய பாரத மணித்திருநாடு

  என்று தமிழையும் தமிழரையும் ஒருசேர வாழ்த்தும் வரிகளை ஏ.வி.எம்மின் 'நாமிருவர்'திரைப்படத்தில் தேவநாராய ணனும் டி.எஸ். பகவதியும்,ஆர் சுதர்சனத் தின் சிறந்த இசையில் பாடிடக் கேட்டு,கடந்த நூற்றாண்டைச்சேர்ந்த பலரும் மெய்சிலிர்த் திருப்பர்.

"செந்தமிழே உயிரே நறுந்தேனே

செயலினை வாக்கினை உனக்களித்தேனே

நைந்தாய் எனில் நைந்து போகும் என்வாழ்வும்

நன்னிலை உனக்கெனில் எனக்கும்தானே"

  எனும் பாவேந்தரின் பாட்டு திரைப்படங் களில் இடம் பெறவில்லை என்றாலும் இப் பாடலை அறியாத தமிழறிஞர்கள் இருந்திட வாய்ப்பில்லை. தமிழை சுவாசித்த தமிழ்த் திரை,தமிழையும் தமிழரையும் சொல்லா லும் இசையாலும் தூக்கிக் கொண்டாடியது. 

  செந்தமிழையும்,தமிழனையும் ஒருங்கி ணைந்து போற்றும் பாணியில் 'மதுரை வீரன்' திரைப்படத்தில் எம்.எல்.வசந்தகுமாரி தன் கனத்த குரலில் பாடிய,

"செந்தமிழா எழுந்து வாராயோ

உன்சிங்கார தாய்மொழியை பாராயோ"

 எனும் எழுச்சிமிகு கண்ணதாசன் வரிகளை ஜி.ராமநாதன் இசையில் கேட்கையில் வீறு கொண்டு எழத்தோன்றும்.மாறாக,

"செந்தமிழ் நாட்டு தமிழச்சியே

சேல உடுத்த தயங்குறியே"

  எனும் தமிழ் மகளிரின் உடைக்கலாச்சாரம் பேணும் வைரமுத்துவின் வரிகளை ஏ.ஆர்.ரெஹமான் இசையில் பாடிய சாகுல் ஹமீதின் 'வண்டிச் சோலை சின்னராசு'படப் பாடலைக் கேட்கையில்,தமிழ் மண்ணின் மாண்பு மெச்சப்படுவதை உணரமுடியும்.

"கன்னித்தமிழ் மனம் வீசுதடி

காவியத் தென்றலுடன் பேசுதடி"

  எனும் 'அடுத்த வீட்டுப்பெண்'திரைப் படத்தில் P.சுசிலா பாடிய தஞ்சை N.ரமைய்யாதாசின் அமுத கானமும்,

"தமிழுக்கும் அமுதென்று பேர்

அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்,உயிருக்கு நேர்"
என்று தொடங்கி வரிவரியாய் சொல் லெடுத்து தமிழுக்கு சிரம் தாழ்த்தி ஆலாபனை செயுயும் 'பஞ்சவர்ணக் கிளி' திரைப் படத்தில் அதே P.சுசலா பாடிய பாவேந்தரின் பாடலும், தமிழ் மொழியின் பெருமையினை பல் வேறு உருவகங்களாய் உர மேற்றி பறைசாற் றின.பின்னர்,அதே 'பஞ்சவர்ணக்கிளி' திரைப்படத்தில் தமிழை பெண்ணுடன் மைய்யப்படுத்தி,
"அவளுக்கும் தமிழென்று பேர்
என் உள்ளத்தில் அவளென்றும்
அசைகின்ற தேர்"

   எனும் கனிவான பாடலும்,வாலியின் வரிகளில் டி.எம்.எஸ்ஸின் கம்பீரக்குரலால், தமிழை தேனில் திளைக்கச் செய்தது. 'அடுத்த வீட்டுப்பெண்' திரைப்படத் திற்கு ஆதி நாராயணராவும்'பஞ்சவர்ணக்கிளி' படத்திற்கு விஸ்வ நாதன் ராமமூர்த்தியும் இசையால் இனிமை படைத்தனர்.
   பெண்ணை தமிழாக்கிய மற்றுமொரு பாடலே'பாவை விளக்கு'திரைப்படத்தில் சிதம்பரம் ஜெயராமன் தனது தனித்துவ குரலால்,சிம்மக்குரலோன் வரி வரியாய் வாசிக்க, அதனைப் பின் தொடர்ந்து பாடிய,

"வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி    என்னருகில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி 
கற்பனைகள் தந்தாள்" 

எனும் எதுகை மோனையை ஏற்றி வைத்த பாடல்.
   A.மருதகாசியின் ஈடு இணையற்ற இவ்வரி கள், கே.வி.மகா தவன்  இசையில் மேலும் மேன்மையுற்றன.  
  பெண்ணை தமிழ் கொண்டு வருணிப் பதில் ஒருபடி மேலே போய்,'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தில் டி.ஆர்.மகாலிங் கம் பாடிய, இன்றும் இசைமேடைகளில் பலரும் பாடத் துடிக்கும்,கண்ணதாசன் வரிகளால் தமிழுக்கு தளிர் கொடுத்த, 

"செந்தமிழ் தேன்மொழியாள் 
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்"

எனும் வரிகள்,விஸ்வநாதன் ராமமூர்த்தி யின் இசையில் வசந்தம் பரப்பி,அதனை விலை மதிப்பில்லா பாடலாக்கின.
   பெண்மையையும் ஆண்மையையும் தமிழோடு தவழச்செய்த,
"பழகும் தமிழே பார்த்திபன் மகனே
அழகிய மேனி சுகமா?"
என்று  கேள்விக்கனை தொடுத்த P.சுசிலாவின் குரலும்,
"பாவலன் கவியே
பல்லவன் மகளே
அழகிய மேனி சுகமே"
  என்று அதற்கு  மிதமாக பதிலளித்த ஏ.எம். ராஜாவின் குரலும் 'பார்த்திபன் கனவு' திரைப்படப் பாடலை, தமிழ்ச் சுவையின் இன்னொரு இளவேனில் ரகமாக்கியது. இப்பாட லையும் கண்ணதாசன் எழுத,அதற்கு வேதா ஏகாந்தமாய் இசை அமைத்திருந்தார்.
  தமிழின் சிறப்போடு எம்.ஜி.ஆர்.படப் பாடல்களின் சிறப்பை உறுதிப்படுத்திய
"அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்"
எனும் 'ரிக்ஷாக்காரன்'திரைப்படத்தில் இடம்பெற்ற வாலி யின் வரிகள்,டி.எம்.எஸ் P.சுசிலா குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாத னின் இசையோடு சேர்ந்து,தமிழையும் எம்.ஜி.ஆரையும் மேலும் சிறப்பித்தது.
    வருணனைத் தமிழால் வாழ்த்துரை வழங்குவதில் பெண்கள் ஒருபோதும் சளைத்தவர்கள அல்ல என்பதை நிரூபித்த பாடலே,வாலி கவி புனைந்து எம்.எஸ் விஸ்வநாதனின் இசைக் கூடலில் p.சுசிலா வும் டி.எம்.எஸ்ஸும் பாடிய,
"மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ
நீ மூவேந்தர் வழிவந்த மன்னவனோ" 
  எனும் 'பிள்ளையோ பிள்ளை'திரைப்படப் பாடல்.
    தமிழ் மொழியையும் தமிழ் இனத்தையும் ஒருசேரப் பாராட்டி, 
"தமிழன் என்றோர் இனமூண்டு
தனியே அவர்க்கோர் இடமுண்டு
அமிழ்தம் அவனுடை மொழியாகும்
அன்பே அவனுடை வழியாகும்"
என்று நமக்கல் கவிஞர் புனைந்த ஒப்பற்ற கவிதை வரிகள் 'மலைக்கள்ளன்' திரைப்படத்தின் அறிமுகப் பாடலானது. எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவின் இசையில் பிரசவித்த இப்பாடல்,என்று கேட்டாலும் இனிக்கும். 
   செண்பகப்பாண்டியனின் அரசவைக் கவிஞர் நக்கீரரின் புலமையுடன் தமிழில் விளையாடிய ஈசனைப்பற்றி "நான் பெற்ற செல்வம்' 'திருவிளையாடல்'ஆகிய இரு திரைப்படங் களில் கண்டு களித்தோம்.
   "தமிழ் மாலை தனைச்சூடுவார்"என்று முருகனை வாழ்த்தி டி.எம்.எஸ் குரலில் பாடிய அம்பிகாபதியாகத் தோன்றிய சிவாஜி கணேசனின் வாய்வழிப் பாடலும், "வாடா மலரே தமிழ்த்தேனே" என்று அதே'அம்பிகாபதி'திரைப்படத்தில் சிவாஜி பானுமதிக்காக டி.எம் எஸ் & பானுமதி குரல்களில் ஒலித்த காதலைப் போற்றி.தமிழுக்கு தனிப்பெருமை கூட்டும்  பாடலும்.
   தமிழின் வழி நின்று மகளைப்போற்றிய
"தெம்மாங்கு பூந்தமிழே 
தென்னாடன் குலமகளே"
எனும் பார்மகளே பார் திரைப்படத்தில் டி.எம்.எஸ் பி.சுசிலா பாடிய "நீரோடும் வைகையிலே" எனும்  அமுத கீதமும்,
நல்ல மனதை தமிழால் வாழ்த்திய 
"நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க
தேன்தமிழ் போல் வான்மழைபோல்
சிறந்து என்றும் வாழ்க"
எனும் 'ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகி றது' திரைப்படத்தில்  கே.ஜே ஏசுதாஸ் பாடல் வரிகளும்,நன்மையுடன் தமிழை நலம்பெறச் செய்தன.இதே போன்று தமிழால் வாழ்த்துக் கூறிய பாடலொன்று பாலுமகேந்திராவின்  'மறுபடியும்'  திரைப் படத்தில் இடம் பெற்றது.
"நலம் வாழ என்னாளும் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தை கள்"
  எனும் வாஞ்சை உள்ளடக்கிய வாலியின் வரிகளுக்கு இசைஞானியின் இசையில் இதமாய் தன் குரலால் சுகம் கூட்டினார் எஸ்.பி.பி.
மேலும்;
"மதுரையில் பறந்த புலிக்கொடியை உன் கண்களில் கண்டேனே;
புதுமைகள் புரிந்த சேரன் வில்லை உன் புருவத்தில் கண்டேனே;
தஞ்சையில் பறந்த  புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே.
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை,
தமிழகம் என்றேனே!"
  என்று 'பூவா தலையா'திரைப்படத்தில் பெண்மையை  பாக்களாக்கி,தமிழகத் திற்கே மகுடம் சூட்டிய டி.எம்.எஸ் பாடிய வாலியின் பாடல்,எம்.எஸ் விஸ்நாதன் இசையில் 'பூவா தலையா'திரைப்டத்தை நினைத்துப் பார்க்கும் காரணங்களில் ஒன்றானது.
   தமிழையும்,தமிழரையும்,தமிழகத்தையும் மறந்து, தமிழ்த் திரை வண்ணங்கள் படைக்க இயலுமோ? பாவலர்களோடு ஒருங்கிணைந்து தமிழ்த்திரை தமிழால் தமிழுக்கு ஆராதனை செய்திட,'தமிழ்','தமிழ் படம்','செந்தமிழ்ப்பாட்டு' 'வண்ணத்தமிழ் பாட்டு','அழகிய தமிழ் மகன்'தமிழன்',சங்கத் தமிழன்'' தமிழ்க்குடிமகன்'போன்ற திரைப் படத் தலைப் புகளும் தமிழை ஆரத்தழுவி அமர்க்களப் படுத்தின. மொத்தத்தில் தமிழால் தமிழ் திரைத்துறை தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் வாகை சூடியது.
             =============0=============