Jamuna Rani could also bring out the essence of deep sorrow through her voice magic, as it could be felt in the songs 'Kaavirithaaye Kaavirithaaye' from 'Mannaadhi Mannan', and ‘Chithirathil Pen Ezhudhi,Seerpaduthum Maanilame’ from 'Rani Samyuktha'. Jamuna Rani frequently joined A.L.Raghavan,S.C.Krishnan, J.B.Chandrababu and Sirkazhi Govindarajan for quite a few fascinating duet songs. However,it was her solo numbers that carried a special charming appeal. Among the songs for which she shared her voice with other female singers, the most remarkable and remembered song is 'Punnagai Mannan Poovizhikannan' that she sang with P.Suseela in 'Iru Kodugal'.
My movie minutes
Saturday, August 1, 2026
Homage to a singer with an intoxicating voice
Jamuna Rani could also bring out the essence of deep sorrow through her voice magic, as it could be felt in the songs 'Kaavirithaaye Kaavirithaaye' from 'Mannaadhi Mannan', and ‘Chithirathil Pen Ezhudhi,Seerpaduthum Maanilame’ from 'Rani Samyuktha'. Jamuna Rani frequently joined A.L.Raghavan,S.C.Krishnan, J.B.Chandrababu and Sirkazhi Govindarajan for quite a few fascinating duet songs. However,it was her solo numbers that carried a special charming appeal. Among the songs for which she shared her voice with other female singers, the most remarkable and remembered song is 'Punnagai Mannan Poovizhikannan' that she sang with P.Suseela in 'Iru Kodugal'.
Wednesday, July 22, 2026
காக்கைச்சிறகனிலே
"பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்"
எனும் கவியரசின் பாடல் வேறு ஒரு கோணத்தில் எழுதப்பட்டிருந்தாலும் 'இருவர் உள்ளம்' திரைப்படத்தில் கே.வி.மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய இப்பாடல், பல்வேறு விதமான பறவைகள் இயற்கைக்கு அழகு சேர்த்து உயிரினங்களின் உயரத்தை சுட்டிக் காட்டுவதாக உணரலாம். தமிழ்திரைப் பாடல்கள் பல்வேறுவிதமான பறவை களை பல்வேறு கருத்துக்களால் பெருமைப்படுத்தியிருக்கின்றன.உயிரி னங்களில் பறவைகள் விரிந்து பறந்து உலகளக்கின்றன.ஆனால் பறவைகளில் காக்கைகள் பெருமளவு வாழ்வியல் பாடங்கள் புகட்டுகின்றன.
. உதாரணத்திற்கு 'பராசக்தி' திரைப்படத் தில் சி எஸ் ஜெயராமன் பாடிய,
"கா கா கா கா கா கா
ஆகாரம் உன்ன எல்லோரும் ஒன்றாக
அன்போடு ஓடிவங்க
அந்த அனுபவப்பொருள் விளங்க
காக்கை அண்ணாவே நீங்க அழகான வாயால்
பண்ணாகப் பாடுறீங்க
காக்காவென ஒண்ணாக்க கூடுறீங்க"
. இந்த உடுமலை நாராயணக்கவியின் வரிகளை கேட்கையில் ஒற்றுமையின் பலத்தை பிரதிபலிக்கும் காக்கைகளின் குரலையும் நம்மால் ரசிக்கமுடியும் என்று உணர்த்தியது.ஆர்.சுதர்சனம் எளிமை யாய் இசையமைத்த இப்பாடல்,என்றும் நெஞ்சில் நிலைத்திருக்கும் காக்கைகள் ஒற்றுமை சிறப்பை வலியுறுத்திய,
"ஒண்ணா இருக்க கத்துக்கணும்
இந்த உண்மையைச்ச்சொன்னா ஒதுக்கணும்
காக்கா கூட்டத்தை பாருங்க
அதுக்கு கத்துக்குடுத்தது யாருங்க"
எனும் டி.எம்.எஸ் பாடிய 'அன்புக்கரங்கள்' படப்பாடல்,
'ஆசைமுகம்' திரைப்படத்தில் அதே டி.எம்.எஸ் பாடிய,
"எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு"
பாடலுக்கிடையே தோன்றும்,
"காக்கையை பாரு கூடி பிழைக்கும்
நம்மையும் பாரு நாடே சிரிக்கும்"
. எனும் பாடலும்,ஈமச்சடங்குகளுக்கு மூலமாக இருக்கும் காக்கைகள், ஒற்றுமைக்கு பாலமாக இருப்பதை உணர்த்தும்.இப்பாடலில்,
"கோழியைப்பாரு காலையில் விழிக்கும்
குருவியைப்பாரு சோம்பலை பழிக்கும்"
. எனும் பறவைகளிடமிருந்து மனிதன் கற்கவேண்டிய வேறு சில நல்ல பழக்க வழக்கங்களும் அடங்கியிருப்பதை அறியலாம்.'அன்புக்கரங்கள்''ஆசை முகம்' பாடல்கள் இரண்டையும் வாலி எழுத,முதலாவது திரைப்படத்திற்கு ஆர்.சுதர்சனமும், இரண்டாவது பாடலுக்கு எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடுவும் இசைய மைத்தனர்.
முப்பால் எழுதிய வள்ளுவர் குறள்களில் ஒன்றின் மூலம் காக்கைகளின் ஒற்றுமை இயல்பினை,
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள.
. எனும் அற்புதமான குறள் மூலம் விளக்கி யிருந்தார்.
. காக்கையுடன் வேறிரண்டு பறவைக ளையும் துணைக்கழைத்து விருப்பம் நிறைவேற்றக்கூறிய பாடலே 'மகாதேவி' திரைப்படத்தில் எம் எஸ் ராஜேஸ்வரி குழந்தைக்குரலில் பாடிய,
"காக்கா காக்கா மை கொண்டா
காடை குருவி மலர்க்கொண்டா
பசுவே பசுவே பால்கொண்டா
பச்சை கிளியே பழம் கொண்டா"
. என்று ஆசையை பூர்த்தி செய்ய பறவைக்கொரு பணியைக்கொடுத்த பாடல்.உடுமலை நாராயண கவியின் இப்பிடலுக்கு விஸ்வனாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.
வீடுகளில் அண்டங்காக்கைகளின் வருகை பித்ருக்களின் வருகையாகவே கருதப்படுகிறது. அதுவும் குறிப்பாக அம்மாவாசை மற்றும் திதி கொடுக்கும் தினங்களில், அவற்றின் வருகை மிகச் சிறப்பாக வரவேற்கப்படுகிறது.ஆனால் அண்டங்காக்கையின் கனத்த தலை யினை பெண்டிரின் கொண்டைக்கு ஒப்பிட்டு 'அந்நியன்' படத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் உற்சாக இசையில் அமைந்த வைரமுத்துவின் பாடல்,அதன் மாறுபட்ட சொல்லாண்மையின் காரணத் தால் ஒரு தனி ரகமாக கேட்டு ரசிக்கப்பட் டது.
"அண்டங்காக்கா கொண்டைக்காரி
அச்சுவெல்ல தொன்டைக்காரி"
எனும் அவ்விருவரிகள் நேசிக்கும் பெண்ணின் தோற்றத்தையும், அவளின் தேன்சுவை கலந்தகுரலின் செவியாளு மையையும், ஒருசேர கலந்து கற்பனை யின் கலவரத்தை வெளிப்படுத்தியது.
காக்கையின் பெருமை,அதன் சிறகினி ல்கூட குணம் கூட்டும் என்பதை மகாகவி பாரதி எழுதிய,
"காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா"
என்று மாயோன் கண்ணனின் {நீல} கரிய நிறத்தினை,காக்கையின் சிறகினிலேயும் காண முடியும் என்று உணர்த்தியது. இந்த வரிகளை 'துள்ளாத மனமும் துள்ளும்' திரைப்படத்தில் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் சுஜாதா பாடக்கேட்கையில், பரிசுத்தமான உணர்வுப்பரவசத்தை உள்வாங்க முடிந்தது.
'காக்கை சிறகினிலே' எனும் தலைப் பைத் தாங்கி பார்த்திபன் நடித்த ஒரு திரைப்படமும் வெளியானது. கடுகு சிரித்தாலும் காரம் போகாது என்பது போல பறவையின் நிறம் கருத்தாலும், பலவகைப் பறவைகளில் காக்கையின் பெருமை காலமெல்லாம் நிலைத்து நிற்கும்.
===============0=================
Thursday, July 9, 2026
The transition of a comedian into a hero
Comedians were cast as heroes ever since the inception of Tamil Cinema. Kalaivaanar N.S.K was cast as hero in the film Nalla Thambi.But he continued as a comedian during the rest of his film career. K.A.Thangavelu did hero roles in Rambaiyin Kaadhal and Naan Kanda Sorgam.But he excelled as a comedian and character actor and did a few villain roles also,through out his film career. Actor singer J.P.Chandrababu did a hero role in Kavalai Illaadha Manidhan, Kumararaja and Thattungal Thirakkapadum. Nagesh who became popular after his hero role in Server Sundaram, became K.Balachan der's pet actor, doing main roles in films like Neerkumizhi, Ethir Neechal, Navagraham and Anubhavi Raja Anubhavi.
Born as Ramalakshmanan Muthuchamy, Soori became a popular comedian from the film Vennila Kabadi Kuzhu, after doing uncredited roles in several films. As Parotta Soori, he impressed the audience in Vennila Kabadi Kuzhu. This role made him become a successful comedian in association with Siva Karthikeyan,{Varuthapaadha Vaalibar Sangam.Maan Karaate Seema Raja Namma Veettu Pillai} Vimal, {Kalavani,Vaagai Soodavaa,Pulival} Kaarthi,{Naan Mahaan Alla&Viruman} Suriya,{Anjaan, Singam 3 &Etharkum Thunindhavan} Vishal,{Pandi Nadu} Kamalahasan, {Thoonga Nagaram } Rajinikanth, {Annathe} Vijay, {Velayudham} and Vikram (Saamy 2).For about twenty years, Soori could easily fill the bill, as a successful comedian, especially with a rural touch in his role play.
It was ace film maker Vetrimaran who first thought of fixing him in a pivotal role in his films Viduthalai Part I and Part II. Soori excelled in the role of a cop with a complete perception of the significance of the character and executing that role, with absolute compactness and poise. These two films exhibited the hero stuff in a comedian, who unlike Sandhanam reflected a flair for sobriety and subdued display of roles. This comparison is inevitable here, because Sandhanam has always been seen as an emphatic comedian, with his one liner creating spot laughter. Even when he does hero roles, it is the comedy element that supersedes the hero in Santhanam. Whereas In Soori, the comedian dissipates into the underplay of character and this has been effectively witnessed consecutively, in Viduthalai Parts I &II, Garudan and in the latest Maman.
Maaman has proved to be a sweet dish in a family plate, with enormous sentimental ingredients, that were normally witnessed in the films of last century film makers K.S.Gopalakrishnan, A.Bhimsingh, A.C Thirulokchandar and this century's predominant family-oriented film maker Pandiraj. Maaman's film maker Prashanth Pandiaraj, seems to have followed the footsteps of Pandiraj, whose Kadai Kutti Singam and Namma Veettu Pillai were profusely filled with joint family sentiments and sibling bonding. Soori has neatly got into the role of an affectionate younger brother and maternal uncle of a young boy, who cannot spend even a single night without the warming company of his maternal uncle.
Maman could be called a banquet of family emotions, filling the hearts of the viewers with soul sustaining interpersonal links, within the family network. Soori has done the role with total equanimity and composure, and extensively evolved into a decent hero, surpassing all his previous routine type of comedy roles. With Maman the transition of Soori, the former comedian into a newborn hero is complete. The audience can happily welcome him into the hub of heroes.
=============0================
Sunday, June 21, 2026
மடி தேடும் மனசு
வள்ளுவனின் குறள்களில்,'மடி'எனும் சொல் பெரும்பாலும் சோம்பலையே குறிக்கும். ஆனால், உடல் தளர்ந்து, மனம் தளர்ந்து, இளைப்பாற மடிதேடுவதே, மானுட இயல்பு. அதுவும் குறிப்பாக, தாய் மடி தேடுதலில் தனிச்சுகம் உண்டு. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், அன்னையின் மடியில் இளைப்பாறுதல்,மண்ணில் மாபெரும் சுகமாகும்.
"உலகம் பிறந்தது எனக்காக;
ஓடும் நதிகளும் எனக்காக;
மலர்கள் மலர்வது எனக்காக;
அன்னை மடியை விரித்தாள் எனக்காக."
என்று எம்.ஜி.ஆருக்காக டி.எம். சௌந்த ராஜன் 'பாசம்' திரைப்படத்தில் பாடிய கண்ணதாசன் வரிகள் மூலம், தன்னிறைவு காணத்துடிக்கும் நெஞ்சம், தாய் மடியே தனக்காகக் காத்திருப்பதாக தன்பெருமை போற்றும்.ஆனால், தாயின் மடியில் கிடக்கும் சுகத்தை,
"தாயின் மடியில் தலைவைத்திருந்தால்
துயரம் தெரிவதில்லை;
தாயின் வடிவில் தெய்வத்தை கண்டால்
வேறொரு தெய்வமில்லை"
என்று தாய்மடி என்பது, தவமிருந்து பெறத்தக்க,துன்பம் போக்கும் தத்துவத் தலையணையாகும் என்பதை, 'தாயின் மடியில்' எனும் திரைப்படத்தில்,அதே எம்.ஜி.ஆருக்காக கண்ணதாசன் எழுதி, கே.வி மகாதேவன் இசையில் உருவான, தன்னிகரில்லா பாடல், வலியுறுத்தியது.
அதேபோன்று கிடைக்காத தாய்மடிக் காக தவிக்கும் ஆன்மாவின் ஆற்றா மையை, அற்புதமாய் வெளிப்படுத்தியது, 'முதல் மரியாதை' திரைப்படத்தில் மலேஷியா வாசுதேவனும் எஸ்.ஜானகி யும் இணைந்து பாடிய,
"பூங்காற்று திரும்புமா?
ஏம் பாட்ட விரும்புமா?
பாராட்ட, மடியில் வச்சு தாலாட்ட,
எனக்கொரு தாய்மடி கெடைக்குமா?"
எனும் அற்பதமான பாடல்.
வைரமுத்துவின் வலியுணர்ந்த வரி களும், இளையராஜாவின் இதயத்தில் கோலோச்சும் இசையும், இப்பாடல்மூலம் இமயம் எட்டிய இயக்குனர் அமரர் பாரதிராஜாவின் ஆன்ம வேதனையை, அனைவரின் நெஞ்சங்களிலும் ஆழப்பதித்தது. தாய்மடிக்காக எங்கும் இதுபோன்றொரு இணையில்லா பாடல், இனிவருமா என்பது, தாய்மடிக்காகத் துடிக்கும் நெஞ்சங்களின் தீராத் தாகமாகும்.
தாய்மடி மட்டுமே சுகம்தரும் என்பது கட்டாயமில்லை.அன்பால் அரவணைக் கும் எவர்மடியும் இன்னுயிர்காக்கும் என்பதை உறுதிப்படக்கூறிய பாடலே , 'கற்பகம்' திரைப்படத்தில் வாலி வரிகள் தொடுத்து, விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர் இசையில் P.சுசீலா பாடிய,
"அத்தை மடி மெத்தையடி;
ஆடிவிளையாடம்மா.
ஆடும்வரை ஆடிவிட்டு,
அல்லிவிழி மூடம்மா"
என்ற நெஞ்சில் நீங்காமல் நிறைந்த பாடல்.
இப்பாடலில் தொடர்ந்து வரும்,
"மூன்றாம் பிறையில் தொட்டில்கட்டி
முல்லை மல்லிகை மெத்தையிட்டு,
தேன்குயில் கூட்டம் பண்பாடும்;
மான்குட்டி கேட்டு கண்மூடும்.
இந்த மான்குட்டி கேட்டு கண்மூடும்."
எனும் வரிகள், கவிதைக்களத்தில் இலக்கியதூவல்களை காலமெல்லாம் களிப்புற விட்டுச்சென்றன. இதுபோன்ற வரிகளால் கண்ணதாசனைப் போன்று வாலியும், தமிழ்த்திரையில், மண்ணுக் கும் விண்ணுக்குமிடையே வெற்றிமுரசு கொட்டினார்.
கருணை மழை பொழிவதுபோல்,கன மான நெஞ்சங்களை இளைப்பாற்ற தாய்மடிக்கு இணையாக யார் மடியும் அமையக்கூடும். அன்பும் அரவணைப்பும் அகல் விளக்கென காயமுற்ற மனங்க ளுக்கு காலமெல்லாம் ஒளியூட்டும்!.
"மடிமீது தலைவைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறுநாள் எழுந்து பார்ப்போம்"
என்று காதல் வயப்பட்டோரோ, அல்லது இல்லறம் பற்றியோரோ, ஒருவர் மடியில் மற்றவர் இளைப்பாறும் உத்தி காணலாம். 'அன்னை இல்லம்' திரைப்படத்தில், கே.வி.மகாதேவன் மெல்லிசையில் டி.எம்.எஸ்ஸும் P. சுசீலாவும் மெய்மறந்து பாடிய இப்பாடல், நம்மில் பலரையும் மடித்தேடத் தூண்டியிருக்கும்.
இல்லத்தரசியின் இதயம் நாற்திசையில் துடித்திட,கட்டிய கணவனை நோக்கி,
"மாலையிட்ட நேரந்தொட்டு
மனைவியாகினேன்
உன்னை மடியில் வைத்து கொஞ்சும் போது
அன்னையாகினேன்
சேவை செய்யும் வேளையிலே
தாதியாகி னேன்.
என்றும் தனிமையிலே இரவினிலே
துணைவியாகினேன்"
. எனும் வரிகளை சுசிலாவின் தேன் சுவைக்குரலில் கேட்கையில், 'பால்குடம்' திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலியின் வளமான"முழு நில வின் திருமுகத்தில் களங்கமில்லையோ' எனும் இப்பாடல்,ஆடவர் நெஞ்சங்களில் அளவற்ற ஆவல்களைத் தூண்டியிருக் கக்கூடும்.இன்றைய கருத்தோட்டத்தில் இப்பாடல் பிற்போக்கு சிந்தனையாகத் தோன்றினாலும், மடி தேடும் மனசுக்குள் மத்தாப்புகளை மிளிர வைக்கும் ஒரு ஒய்யார உணர்வாகவே, இவ்வரிகள் என்றென்றும் உலாவரும்.
சோகம் சுருக்குக்கயிறாகும்போது,மனம் நொந்து மடிப்பிச்சை கேட்பதுண்டு.அதே மடிதனில், பாசமாய் படுத்துறங்கிய பிள் ளைகள்,பாவச்சுமையாகும் தருவாயில், சோதனைகளின் உச்சம் கண்ட மனம்,
"அடிதாங்கும் உள்ளமிது இடி தாங்குமா
இடிபோல பிள்ளை வந்தால் மடி
தாங்குமா"
. என்று பீறிட்டு கதறுவதுண்டு.தாலாட்டிய மடி,தாளாத கனம் கண்ட இப்பாடல் வரி கள்,'தங்கப்பதக்கம்'திரைப்படத்தில் எம். எஸ்.விஸ்வனாதன் இசையில், கண்ண தாசன் வரிகள்சுமந்த,"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"பாடலின் இடையே தோன்றி,டி.எம்.எஸ் குரலில்,மடி யின் சுமதைனை நம் நெஞ்சங்களில் இறக்கி வைத்தது.
. முடிவாக, அழுதுமுடிக்கா நேரங்களில், பொழுதே மடியாகி,நம் மனதில் நாமே ஆறுதல் காணச்செய்யும். தான் உண்ட உணவை மீண்டும் தானே அசை போட்டு ரசிக்கும் ஆடு மாடுகளைப் போல, நம் துன்பங்களை நாமே அசைபோட்டு ஆறுதல் பெறுவதற்கு, உலகமே உறங்கும் இரவுப்பொழுது, மடியாகி நம்மை இளைப் பாற்றும்.'சரசா B.A 'எனும் திரைப்படத் தின் எஸ்.வேதாச்சலம் இசையில் P.B. ஸ்ரீனிவாஸ் பாடிய கண்ணதாசன் வரி களிலமைந்த,
"இரவின் மடியில் உலகம் உறங்கும்
நிலவின் அழகில் மலரும் மயங்கும்
என் மன வேதனை யார் அறிவார்
உண்மையைச்சொன்னால் யார் உணர்வார்"
என்று ஆதங்கத்தின் முழுமையை இர வுக்கு அர்ப்பணித்தது.இரவின் மடியில் இளைப்பாறத்துடிக்கும் இப்பாடல் மூலம், ஒரு மனிதனின் ஆதங்கத்தை நாம் உணர்கிறோம்.
இது ஓர் மடிக்கணினிக் காலம்.இங்கே கணினிக்கென மடிகள் ஏங்காதிருக்க லாம்.ஆனால், மடிகளுக்கென ஏங்கும் மனசு கனத்தால் மயங்கிக்கிடக்கிறது. தாயோ தாரமோ,தமக்கையோ தமைய னோ, மாமனோ அத்தையோ,நண்பனோ தோழியோ, ஆறுதல் தேடும் மனதிற்கு, அரவணைக்கும் மடி யாருடையதாயினும், அது காலமோ இறைவனோ,நமக்கு சுமையிறக்க நல்கும், சுத்தமான இருப்பிட மான மடியாகும். இவற்றில் தாய்மடிக்கு இணையான மடியேதும் இப்புவியில், இதுவரை மானுடம் கண்டதில்லை. மடிதேடும் மனசு, மடிகளால் இறக்குமே கனம்.
===================0==================
Wednesday, June 10, 2026
Bharathiraja the Paragon of Tamil Cinema
The glory of Tamil cinema rests with its fantastic film makers of fascinating creativity and felicitous narration. From the days of A.Bhimsingh,Tamil cinema has been gifted with film makers of prolific creative stuff in presenting themes, and events related to the themes, with enormous credibility, acceptability, and inimitable grandeur. Besides.A.Bhimsingh directors like P.Madha van,the duo Krishnan Panju, K.Balachander K..S.Gopalakrishnan, A,P.Nagarajan, A.C. Thirulokchandar, Balu Mahendra, J.Mahen dran and several others made Tamil Cinema stand up uniquely and occupy a proud place in the Indian celluloid panorama.
Monday, June 1, 2026
Movies, memories friends and colleagues
Mymovieminutes.blogspot.com is a blog born of my extraordinary love for films cherished from my childhood. Besides watching movies with family members and family friends, my memories of watching films with my close friends and colleagues, belong to a distinct category of my film watching experience.
As an undergraduate of B.A. English Literature, I had a very close friend who was studying B.A.Economics with whom I watched Sri Vinayaka Pictures' films like Naan {1967}and Moonrezhuthu {1968} {both films directed by T.R.Ramanna} at the Roxy Theatre Tiruchirappalli. He was a hosteller, and he used to come home during weekends for lunch and take me for film shows.
During my undergraduate times, I remember to have bunked the afternoon classes a couple of times, with another close friend, doing Bachelor of Economics course, to watch matinee shows. We both watched A, C, Tirulogchander's Irumalarkal at the Prabhath theatre and Sridhar's Oottivarai Uravu at the Raja theatre. Both theatres were located at Tiruchirappalli. Both were Sivaji Ganesan films released in 1967.
Those were times when the students of the final year programme used to have a Social Break up event at the end of the final year, and this celebration would mostly end up with a film visit to a theatre, mostly for a night show. In 1968, our final year batch, watched the MGR mega hit film Kudiyirundha Koil {1968} at the Jupiter Theatre,Tiruchirappalli. This blockbuster, was a Saravana Pictures film, produced by G.N. Velumani and directed by K. Shankar.
This group experience was repeated in 1970 when we completed our post-graduation course and had a Social Break up celebration that culminated with a night show film watch, and the film watched was, Vietnam Veedu, directed by P. Madhavan with the story line of Vietnaam Veedu Sundaram. This film had already become a popular stage drama. This movie starring Sivaji Ganesan and Padmini is still green in memory. As I went to watch the film without informing my parents, they were in jitters and the next morning when I reached home, I received a thorough scolding from my father.
After taking up the teaching Profession my passion for films was invigorated by one of my close friends and colleagues from the Dept. of Commerce. It was he who drew my interest towards Hindi films. Though my elder brother had already taken me to theatres to watch Hindi films like Mere Mehaboob, Love in Tokyo, and An Evening in Paris, this friend introduced some Hindi heroes, villains and character actors with an aesthetic touch and fineness. His focus was on the magnificently stylish heroes like Sanjeev Kumar, Dev Anand and Sashi Kapoor. He would also talk highly about Pran, Premnath and Prem Chopra who used to play negative roles. He had a special admiration for the character actor Iftekher, and the female star Moushmi Chatterjee.
This friend took me to watch films like Hare Rama Hare Krishnaa[1972] of Dev Anand, Shor {1972} of Manoj Kumar and Ah Gale Lag Jaa[1974] of Sashi Kapoor. With him I watched many Hindi films like Be Iman [ 1972] Zanjeer, [1973] Jugnu [1973],,Bobby [1973] Yadon ki Bharat (1973) Roti Kapada aur Makaan [1974] Sholay (1975)and Chhoti Si Baat[1976]. Most of these films were watched at the Gaiety Theatre Tiruchirappalli , and a couple of them at the Aruna Theatre near Woraiyur, Tiruchirappalli.
Some of the Tamil films we watched together were Sivaji Ganesan's Gauravam {1973} directed by Vietnaam Veedu Sundaram on the day of its release {(.first show at 9.00 AM at Raja Theatre and Anbai Thedi {1974}, the 7.00 PM show at Palace Theatre and Sridhar's Ilamai Ooonjal Aadukiradhu,{1978}at Roxy Theatre. Even after my marriage this close friend also joined me and my wife to watch K.Balachander's film Ninaithaale Inikkum {1979} at Kalaiyarangam and a few other films, until he got married. A pleasant and unforgettable memory of our film experience was that he used to take me on the carrier seat of his cycle, pedaling all the way to those theatres. Besides the pleasure of watching films, what a great friendship it was, and still is, to treasure in my memory.
. At this juncture, I recall watching the MGR film Kumarikottam( Jan 1971) at the Central Theatre, Tiruchi with my departmental colleague who worked with me for one year and later took up government collegiate service. Kumarikottam was directed by P.Neelakandan who had made more than 25films of MGR. It was a morning show we watched. We both watched the other Sivaji Ganesan film Engirondho Vandhaal (1970) at Karaikudi, when we went there to attend the marriage of the then Head of the Dept. Of Economics. This film came under the direction of A.C. Tirulogchander.
. A week before my marriage I had the pleasure of attending the marriage of a very close friend of mine at Thanjavur. {1979}. I went to Thanjavur with half a dozen close colleagues -cum-friends, a day before that marriage. All of us watched the night show of the film Neeya {1979} the film narrated the story of romance between two snakes, with the female snake being bent upon avenging the death of the male cobra, in the hands of a group of friends }. This successful film was made by the ace film maker Durai.
In this connection, I should share the information that the bridegroom of that marriage, who hailed from Keerapalayam near Chidambaram always stays emotionally close to me. Once I visited his home at Keerapalayam and spent a couple of days there. That time we both watched the film Vani Rani {1974} at Lena Theatre, Chidambaram. Vani Rani starring Sivaji Ganesan,Vanishree {in dual roles} and R.Muthuraman was a remake of the most popular Hindi film Sita aur Geeta. This film was made by the duo Tapi Chankya and C.V. Rajendran.
A couple of similar marriage-bound film watching experiences, trigger my emotional reminiscences here. In 1980,my wife and I, with my colleagues and their wives, went to Namakkal to attend the marriage of our close colleague,working in the Department of Chemistry.There we watched the evening show of the film Oru Vellaadu Vengaiyaakiradhu, starring Sivakumar and directed by the director duo Devaraj Mohan. Later in 2002, my close friend from the Dept. Of Mathematics and I, went to Athur to attend the marriage of the youngest son of my departmental colleague. As the marriage was held at Ethapur my friend and I had to stay one night at Athur. There both of us watched the night show of Vijayakanth's block buster film Ramana, directed by A.R. Murugadoss.
I should also record here, watching the Ramarajan film Thangathin Thangam{1990} made by Siraj, with my senior colleague and close friend from the Dept of Mathematics, at the Kalaiyarangam Theatre, Tiruchirappalli. We watched the film after attending a function. Two of my earliest film visits with my friends at the starting spell of my career were, MGR's very old film Chakravarthi Thirumagal at the Prasanna Theatre Thuraiyur, with my close friend and colleague, from the Dept. Of Mathematics and the oldest Sivaji Ganesan film Manohara, at the Touring talkies, located in between two villages, called Vellakalpatti and Valaiyur. I remember having cycled to the talkies with half a dozen colleagues-cum friends, led by one of my junior colleagues from the Chemistry Dept.
During my outstation trips for central valuation of university examination answer scripts, twice I went to Mayiladudurai. In 1984 when I went there, my senior colleague ( who is now in his early Nineties) from the Tamil Dept, who was redeployed there in a govt. aided college, took me to watch the night show of the film Sirai, which was based on a short story written by Ms. Anuradha Ramanan, and directed by R.C.Shakthi. We saw the film at the Gomathi theatre. On my second visit to Mayiladudurai in 1995, for another spell of central valuation, I took my junior colleague employed in the Dept. Of Physics to watch the evening show of the film Chinna Vaadhiyaar at the Vijaya theatre.Chinna Vaadhiyaar was a film starring Prabhu (in dual roles) and Kushbu, and this film was directed by Kamalahasnan's close associate, Singeetam Srinivasa Rao.
This article is a brief interaction with my blog viewers/readers, about by inborn love for films as a creative and entertaining medium, that meaningfully connects human realities, imagination, emotions, and intelligence with the audience, as an inspiring and integrating tool for binding experiences with humanity. While reading books is a self-bound experience to be shared with others, either necessarily or relevantly or even casually, film watching, quite often enhances the creative process into a collective timeline, causing interpretation of desirable perceptions of life, absorbed while watching films.
Above all, watching films with friends and colleagues, enriches the scope for exuberant socializing and togetherness, through spending time for a precious and pleasurable realization of what life is, and how we should move on. This article could be seen as my autobiographical journey on the memory lanes of my movie watch, with a different note of the aesthetics of celluloid phantasy.
Note:-Most of the theatres mentioned here might be extinct now. The names of some theatres are missing due to lapse of memory. However, the names of my colleagues -cum friends and student time friends mentioned in this article age-wise, are given below.
Professors. Dr.A.Ramarathinam, Mr L.W..Abdul Wadhooth, Mr.S. Shanmugam, Mr. T. A. Julius, Mr.M.Natarajan,Mr.S.Manavalan,. Mr. R.Jenardhanam,Mr.S.Karuppiah, Dr.S. RajaGopalan,Mr.M.Pannirselvam, Mr.K. Nagarajan and my close college batchmates & friends Mr. N. Arumugam and Mr. R. Azhagiya Nambi
================0================
Sunday, May 17, 2026
கடிதக் காலங்கள்
சமூக ஊடக்காலத்தில் வாழும் நம்மில் பலரும்,குறிப்பாக கடந்த நூற்றாண்டின் இடைப்பகுதியில் பிறந்து இன்றும் வாழ்ந்துகொண்டிருப்போர் பலரும் ஏங்குவது, கடிதக்காலமே!இப்போது ஒரே அறையில் இருந்து கொண்டு 'வாட்ஸ் அப்ப்' செய்திகளை பரிமாறிக் கொள்ளும் உறவுகளும் உண்டு.இதற்கு காதலரும் கணவன் மனைவியும்கூட விதிவிலக்கல்ல.
ஆனால் கடிதங்கள் மட்டுமே நெஞ்சப் பரிமாற்றங்களின் கருவியாய் இருந்த காலத்தில்,ஒரு அஞ்சல் அட்டையும்,அதில் ஒரு நூலிழை இடம் கூட விடப்படாத செய்திகளும், மனதில் மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒருசேர பரப்பியதுண்டு. தமிழ்திரைப்படங்களும் கடிதங்களை குறியிட்டு, பாடல் வரிகளால் நம் உணர்வு களை உசுப்பிக்கொண்டிருந்தன. இன்றைக்கு என்னதான் மின்னஞ்சல் இருந்தாலும்,அன்றைய காலணா, பின்னர் ஐந்து பைசா,பத்துபைசா,இருபத் தைந்து பைசா,என்று சுவரேறிக் கொண் டிருந்த அஞ்சலட்டைகள்,உச்சிமுதல் பாதம் வரை உள்ளன்பால் மெய்சிலிற்க வைத்தன.
ஒரு கடிதத்தை அனுப்பும் நிலையில் அது கடிதமல்ல என்றும்,பின்னர் அது என்ன என்றும்,விளக்கும் 'பேசும் தெய்வம்'திரைப்படத்தில் கே.வி. மகாதேவன் இசையில் டி.எம்.எஸ் பாடிய,
"நான் அனுப்புவது கடிதம் அல்ல
உள்ளம்;
அதில் உள்ளதெல்லாம் எழுத்துமல்ல,
எண்ணம்;
உன் உள்ளமதை கொள்ளை கொள்ள!"
என்று தொடங்கி,
"நிலவுக்கு வான் எழுதும் கடிதம்
நீருக்கு மீன் எழுதும் கடிதம்
மலருக்கு தேன் எழுதும் கடிதம்
மங்கைக்கு நான் எழுதும் கடிதம் "
. என்று பல்வேறு உருவகங்களை குறிப் பிட்டு வாலி எழுதிய கடித வரிகளை,நம் வாழ்நாள் உள்ளளவும் மறக்க இயலாது.
இதேபோன்று 'குழந்தையும் தெய்வமும்' திரைப்படத்தில் எம்'எஸ்'விஸ்வநாதன் இசையில் மீண்டும் வாலி வரிகளமைத்து, டி.எம்.எஸ்ஸும் P. சுசீலாவும் பாடிய,
"அன்புள்ள மான்விழியே
ஆசையில் ஓர் கடிதம்;
நான் எழுதுவதென்னவென்றால்,
உயிர்க்காதலில் ஓர் கவிதை."
என்று ஆணும்,
"அன்புள்ள மன்னவரே
ஆசையில் ஓர் கடிதம்;
அதை கைகளில் எழுதவில்லை;
இரு கண்களில் எழுதிவந்தேன்"
என்று பெண்ணும் பாட, கடிதத்திலேயே காதலும்,இல்வாழ்வின் இணக்கமும் களைகட்டியது.
'தேவா' திரைப்படத்தில் தேவாவின் இசையில் எஸ்.பி.பி.யும்,நடிகர் விஜய்யும் இணைந்து பாடிய, அதே வாலியின் வரிகளில் அமைந்த,
"ஒரு கடிதம் எழுதினேன்
அதில் என் உயிரை அனுப்பினேன்;
அந்த எழுத்து வடிவிலே,
நான் என்னை அனுப்பினேன்.
காதலி,என்னை காதலி"
என்ற பாடல் சொற்களால் உயிரை கடிதத்தில் மைய்யென கசியச் செய்தது. காதல் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி விட்டு, அது கிடைத்ததா என்று மறு முனையில் உள்ள காதலியிடம் உறுதி செய்யும் காதலரும் உண்டு. அப்படி உறுதி செய்யப்பட்ட பாடலே,'சேரன் பாண்டியன்' திரைப்படத்தில் புலமைப் பித்தனின் வரிகளிலும் சௌந்தர்யன் இசையிலும், லோப்ஸன் ராஜ்குமார் மற்றும் ஸ்வர்ண லதா சேர்ந்து இதயத்துடிப்பில் இணக்கம் சேர்த்த,
"காதல் கடிதம்
வரைந்தேன் உனக்கு;
வந்தததா? வந்ததா?
வசந்தம் வந்ததா?"
என்று காதலன் வினவ,
"காதல் கடிதம்
வரைந்தாய் எனக்கு;
வந்ததே,வந்ததே,
வசந்தம் வந்ததே"
என்று முறுமுனையில் காதலி ஏற்பளிக்க,காதல் பயணம் கடிதம் மூலம், கனிவாய் கரை கண்டது.
கவிபுனைகையில் கற்பனை கரை புரண்டோடிட,உவமைகளும் உருவக. உருவாக்கங்களும்,உல்லாசமாய் ஒருங் கிணைந்து, புதியதோர் அஞ்சல் துறை யையும், அஞ்சல் பரிமாற்றத்தையும், ஏற்படுத்தக் கூடும்.அப்படிதான் புதுப் பொலிவுடன் கடிதமொன்று, களிப்புறும் கடிதப்போக்குவரத்தை,செவிகளை தபால் பெட்டிகளாக்கி,மனமெனும் முகவரியை முத்த மிட்டது.'ஜோடி' திரைப் படத்தில் ஏ.ஆர்.ரெஹ்மான் இசையோட்டத்தில், கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள், கடிதக் கருவிகளையும் கடிதப் போக்கு வரத்தையும்,கட்டுக்கடங்கா கருத் துக்களஞ்சியமாக்கின. எஸ்.ஜானகியும் உன்னி கிருஷ்ணனும் குரலொத்துப் பாடிய,
"காதல் கடிதம் தீட்டவே,
மேகம் எல்லாம் காகிதம்.
வானின் நீலம் கொண்டுவா!
பேனா மையையோ தீர்ந்திடும்.
சந்திரனும் சூரியனும் அஞ்சல்காரர்கள்;
இரவு பகல் எப்பொழுதும்,
அஞ்சல் உன்னை சேர்ந்திடும்"
எனும் வரிகளால் கடிதக்காலத்தையே மாற்றியமைத்தது.
. மொழி அறியாததாலோ,அல்லது தன்னால் எழுதமுடியாததாலோ,வரிகளை எடுத்துக்கொடுத்து மற்றவர்களை எழுதச் சொல்லும் காதல் கடிதங்களும் உண்டு. அப்படி எழுதப்பட்ட கடிதமே, கமல் குரல் கொடுத்து,அவருக்காக அவர் காதலி அபிராமிக்கு எழுதப்பட்ட,
"கண்மணி அன்போடு காதலன் நான்
எழுதும் கடிதமே"
என்று குணா திரை ப்படத்தில் கேட்கப் பட்ட கற்பனைக் கடிதப்பாடல்
வாலியின், எளிமையாகத் தொடங்கி ஏற்றம் பெரும் இவ்வரிகளுக்கு, இசை ஞானியின் இசை, சாகா வரமளித்தது.
''ஆசையில் ஓர் கடிதம்" என்று கடிதம் எனும் சொல்லை தலைப்பில் ஏற்று வந்த திரைப்படத்தில், தேவாவின் இசையில் ஸ்ரீனிவாஸ் பாடிய, வைரமுத்துவின் வரிகளிலாலான,
"ஆசையில் ஓர் கடிதம்
வரைந்ததே ஓர் இதயம்
எழுத்தினால் தலை எழுத்தை
மாற்றியே விதி எழுதும்"
என்ற மென்மையான பாடலினினூடே, சோகமும் இழைந்தோட அதை கேட்கும் பலர் மனதில்,கடிதத்தின் கனத்தை உணர முடிந்தது.
பொதுவாக ஒவ்வொரு கடிதமும் அதனை அஞ்சல் அட்டையில் எழுதி னாலும், அல்லது மூடி மறைத்து அனுப் பினாலும், அதனுள்ளே குடியிருக்கும் எழுத்துக்கள் எழுந்து நின்று, உணர்வு களை ஊஞ்சலாடச் செய்யவோ, ஊடல் கொள்ளத்தூண்டவோ, ஊக்கம் பெறச் செய்யவோ, அல்லது ஊனமுறச் செய்ய வோ,முடியும். காதலர்கள் கடிதங்கள் மட்டுமே, பெரும்பாலும் திரைப்படங்க ளில் இடம்பெற்றுள்ளன.
அனால்,அன்றாட வாழ்வில், கடந்த நூற்றாண்டில் குடும்பத்து உறவு களால் எழுதப்பட்டு பெறப்பட்ட கடிதங்கள், சுறுக்குக்கயிறுகளாகவும், சொர்க்கச் சாயல்களாகவும்,இருந்திருக்கக்கூடும். இவை அனைத்தும் பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தின் உறவு நடை முறைகளின் வெளிப்பாடே! 'படித்தால் மட்டும் போதுமா' திரைப்படத்தில் சுயநலத்தால் ஒரு சகோதரன் எழுதிய இரு கடிதங்கள்,குடும்பத்தின் பலரது வாழ்வினை புரட்டிப்போட்டதை,
"தெரிந்தே கெடுப்பது பகையாகும்
தெரியாமல் கெடுப்பது உறவாகும்"
எனும் கண்ணதாசனின் துல்லியமான சொற்களெடுத்து தெள்ளத் தெளிவாக வெளிப்படுத்தின.
இன்றைக்கு கடிதங்கள் கால் நீட்டி படுத்துவிட்டன. கனிவான கருத்துக்க ளையும் கனமான சிந்தனையையும் எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ள, எழுத்துக்களே தடைக்கற்களாகிவிட்டன. சமூக ஊடகங்களில் சண்டையிடவே நேரம் போதவில்லை.அத்தலங்களிலும் பெருவாரியாக, சிந்தனை சீர்கேட்டையும், மொழியின் மூச்சு முட்டலையுமே,காண முடிகிறது.
தபால் துறையில் கடிதம் சேரவேண்டிய விலாசம் சரியாக குறிப்பிடப் படாதபோது அக்கடிதங்கள் அனுப்புனருக்கே திருப்பி அனுப்பப்படும். அனுப்புனரின் விலாசமும் இல்லையெனில், அது போன்ற கடிதங் கள் Dead Letter Office எனும். அலுவலகத் தில் புதைக்கப்படும். ஆனால்,இன்று,கடிதக் கலையே குளிர் சாதனப்பெட்டி யைத்தேடி, இறுதிக் காலத்தின் ஈமச் சடங்குகளுக்காக காத்திருப்பதாகவே தோன்றுகிறது.


