Friday, August 25, 2023

அன்றும் நேற்றும்,இன்றும் நாளையும்

 

  வாழ்க்கைப்பொழுதுகளின் நினைவலை கள்,நிகழ்ச்சி நிரல்களை  உள்ளடக்கிய  காலக் கணக்குப் புத்தகங்களின் பக்கங்களே!.'அன்று' என்பது கடந்துவந்த பாதையின் தொலைதூரப்பக்கம்; 'நேற்று' என்பது நடந்து முடிந்த நெருங்கிய பயணம். இன்றைய நிஜங்கள் நாளைய நிழல்கள். இந்த காலப் புத்தகங்களை தமிழ்த் திரைப் படங்களும்  கட்டுக்கோப்பாக, திரைப்படத் தலைப்புகளாகவும் பாடல்களாகவும் நளினமாக கோர்த்திருக்கன்றன! 

  'அன்று கண்ட முகம்' என்றும் 'நேற்று இன்று நாளை'என்றும்'இன்றுபோய் நாளை வா'&'இன்றுபோல் என்றும் வாழ்க'என்றும், 'நாளை நமதே' 'நாளைய செய்தி''நாளை உனது நாள்'என்றும், காலத்தை முறைப் படுத்தும் வகையில்  திரைத் தலைப்புகளாய் அள்ளித்தந்திருக் கிறது தமிழ்த்திரை. 

  பாடல்களில்,அன்றும் இன்றும் என்று பாலமமைக்கும் வண்ணம், 

"அன்று வந்ததும் இதே நிலா 

இன்று வந்ததும் அதே நிலா 

என்றும் உள்ளது அதே நிலா

இருவர் கண்டதும் ஒரே நிலா" 

என்று 'பெரிய இடதுப்பெண்'படத்தில் டி.எம்.சௌந்தராஜனும் பி.சுசீலாவும் பாடிய பாடலாகவும், 

"அன்று ஊமை பெண்ணல்லோ 

இன்று பேசும் பெண்ணல்லோ

என்றும் உனக்காக தமிழ் பேசும்"

பெண்ணல்லவோ"

  என்று 'பார்த்தால் பசிதீரும்' திரைப்படத் தில் ஏ.எல் ராகவனும் பி.சுசீலாவும் மகிழ்ச்சி பொங்கப் பாடிய பாடலும்,'நாடோடி' திரைப் படத்தில் டி.எம். எஸ்ஸும் பி.சுசிலாவும் கடந்த கால நினை வலைகளை புரட்டிப் பார்த்த,

"அன்றொருநாள் இதே நிலவில்

அவரிருந்தார் என் அருகே

நான் அடைக்கலம் தந்தன் என் அழகை

நீ அறிவாயோ வெண்ணிலவே"

  எனும் இதய கானமும்,அன்றைய பொழுதுகளை,இன்று வென்று நிலை நாட்டின.இந்த மூன்று பாடல்களையும் கவியரசு எழுத,முதல் இரண்டிற்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்தும் மூன்றாவது பாடலுக்கு எம்.எஸ்.வி. தனித்தும் என்றென்றும் இனிக்கும் வண்ணம் இசைச்செறிவூட்டினர்.

  நேற்றோடு இன்றையபொழுதை இரண்டறக் கலந்து,காதல் சங்கமத்தில் இரண்டு இதயங்கள் ஒன்றாகும் உணர்வப் பரவசத்தை வெளிப்படுத்திய பாடலே, 'வாழ்க்கைப்படகு'திரைப்படத்தில் P.B.ஸ்ரீ நிவாஸ் குரல் குழைந்து பாடிய,

"நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

 இன்று முதல் நீ வேறோ நான் வேறோ"

 எனும் இதமான பாடல்.இப்பாடலையும் கண்ணதாசன் எழுத,விஸ்வநாதன் ராம மூர்த்தி அழகுற இசையமைத்திருந்தனர். இதே கண்ணதாசன் வரிகள் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்த நேற்றைப்  பற்றிய பாடல் ஒன்று டி.எம்.சௌந்தராஜ னின் கனத்த குரலில்,நடிகை சாவித்திரி தயாரித்து இயக்கிய'பிராப்தம்'திரைப் படத்தில் இடம் பெற்றது.

''நேத்து பறிச்ச ரோஜா

நான் பாத்து பறிச்ச ரோஜா

முள்ளில் இருந்தாலும்

முகத்தில் அழகுண்டு

நேரம் போனால் வாசம் போகும்.

வாசம் போனாலும் பாசம் போகாது''

என்ற அப்பாடல் வரிகள்,ரோஜா மலரோடு நேற்றைய நினைவுகளை மக்கிப் போகாது, காலப்பெட்டகத்தில் பத்திரப்படுத்தியது.

  நேற்றைய பொழுதை நெஞ்சில் நிலை நிறுத்தி,இன்றைய மாற்றத்தை சொல்லால் சொல்லாது,மனதிற்குள் மூடி மறைத்த காதலாக,

"நேற்று இல்லாத மாற்றம் என்னது

காற்று என் காதில் ஏதோ சொன்னது

இதுதான் காதலென்பதா

இளமை பொங்கிவிட்டதா"

  என்று,பொழுது புலரச்செய்தது'புதிய முகம்'திரைப்படத்தில் சுஜாதா மோகன் பாடிய சுகமான பாடல் வரிகள். வைரமுத்து வின் புதுமை சிந்தும் வரிகளுக்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரெஹ்மான் தேனாய் இசையூட்டி யிருந்தார்.

  இன்றைய பொழுதின் சுகமும் ஆனந்தமும் அவரவர் அனுபவங்களின் திரட்சி என்றா லும், போரில் தோல்வி முனையில் நிற்கும் ஒருவனுக்கு அவனின் எதிரி ஒருநாள் காலக்கெடு வழங்கிட,அவ்வாறு தோல்வி யின் பிடியில் சிக்குபவனின் ஆதங்கமும் மன உளைச்சலும் சொல்லி லடங்கா. அப்படிப்பட்டதோர் சூழலை'சம்பூரண ராமாயணம்' திரைப்படத்தில் இராவண னாக நடித்த டி.ஸ்.பகவதிக்காக,சி.எஸ் ஜெயராமன் மனமுருகப்பாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது 

'இன்று போய் நாளை வாராய்

என எனையொரு மனிதனும் புகலுவதோ'

  எனும் அற்புதப் பாடல். ஒவ்வொரு சொல் லுக்கும் தேவையான அழுத்தம் கொடுத்துப் பாடிய இப்பாடல், இன்று கேட்டாலும் நெஞ்சை உலுக்கி நிலை குலையச்        செய்யும்.அ.மருதகாசியின் இந்த உணர்வு பூர்வமான வரிகள் கே.வி.மகாதேவனின் உன்னத இசையோடு ஜெயராமனின் தனித்த குரலமைப்பால் கேட்போருக்கு தவிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

  இன்றைய மகிழ்ச்சியை ஒய்யாரமாய் வெளிப்படுத்தியது 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தில் பி.சுசிலா குரல் மகிழ்ச்சி யில் துள்ளிப் பாடிய,

"இன்று வந்த இந்த மயக்கம்

என்னை எங்கெங்கோ கொண்டு செல்லுதம்மா"

  வாலியின் வரிகளை முழமையாய் உள் வாங்கி வசந்தமழை பொழிந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.இதேபோன்றொரு பரவசம் ஏற்படுத்திய பாடலே 'வைதேகி காத்திருந் தாள்' திரைப்படத்தில் நம்மை முழுமையாய் வசப்படுத்திய, 

"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே

இன்பத்தில் ஆடுது என்மனமே

கனவுகளின் சுயமவரமோ

கண்திறந்தால் சுகம் தருமோ?"

   என்ற ஜெயச்சந்திரனின் அதிர்வுகளை ஆனந்தமாக்கி,அகத்தில் சொர்க்கம் காணச்செய்த பாடல்.கங்கை அமரின் கனவில் மகிழ்சிக்கொடி கட்டிய இப்பாடல், அவர் தமையனாரின் இசை மழையில் இன்பமுற குளித்தது.

  நாளைய பொழுதை நம்பிக்கையடன் எதிர் கொண்ட 'நாளை நமதே' திரைப்படத்தில் எஸ்.பி.பியின் குரலில் கம்பீரமாய் நம்பிக்கை கோபுரமமைத்த,

"அன்பு மலர்களே நம்பி இருங்களே

நாளை நமதே இந்த நாளும் நமதே

தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே

நாளை நமதே எந்த நாளும் நமதே"

  என்று நம்பிக்கையில்,விரக்தியை விரட்டியடித்து வீரத்தை விளைநில மாக்கியது. வாலியின் வரிகளும் எம்.எஸ்.வியின் இசையும் இப்பாடலுக்கு 'எக்ஸ்பிரஸ்வே' அமைத்துக்கொடுத்தது. 

  முடிவாக,'நாளை'என்ற நாளைக் குறிப்பிட்டு அதற்கு ஒரு வேளையையும் கணக்கிட்டு,நிலாவை அந்த நேரத்திற்கு வா எனச் சொல்லி வேண்டுகோள் விடுத்து பி.சுசிலா தன் இணையற்ற இனிய குரலாலும்,தரமான பால் வரிகளாலும் தேசிய விருதுபெற்ற 'உயர்ந்த மனிதன்' திரைப்படப் பாடலான,

"நாளை இந்த வேளைபார்த்து ஒடிவா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா"

 எனும், 

 அன்று அறுபதுகளில் ஒலிக்கத் தொடங்கி, நேற்றும்,இன்றும் என்றும்,தமிழாலும், இசையாலும்,இதயங்களை வென்ற குரலாண்ட பாடல்.வாலியின் இந்த வசந்த வரிகளுக்கு சாகா வரம் தந்தார் எம்.எஸ். விஸ்வநாதன்.

  அன்றும்,இன்றும்,என்றும் மனித இனத்தை புனித உணர்வுகளாலும்,புரிந்த, புரியாத சொற்களாலும்,ஆழந்த நெளிவு சுளிவு களாலும்,திரண்ட பல குரல்களாலும், திவ்ய மாய் உள்ளக்கிளர்ச்சியினை ஏற்படுத்தும்  சக்தி,இசைக்கு மட்டுமே உண்டு்என்பதில், யாருக்கும் அய்யமிருக்கப் போவதில்லை.

                        ==/====≈==========0=====≈==========/==.



 


 

Saturday, August 12, 2023

Jailer,Nelson's best among his four

 



   Young film maker Nelson has been comfortably travelling on the roadways of dark humour with absolute dedication and delight from his first film Kolamavu Kokila.However, Jailer has turned out to be the most interesting and entertaining part of this journey,thanks to the highly refreshing participation of the Superstar.The film is cozily drawn between gruesome violence and graceful humour,hidden in dialogues hardly to be missed. Vigorous sprinkles of sudden and silently hitting dialogues spiced in comedy ingredients and brutal splashes of blood caused by the hammer and guns take Jailer closer to the audience,as an unusual Rajinikanth film.

   Rajinikanth is bound to his role by the chains of Nelson with occasional freedom to get back to his Superstar style.{The brief time flashback showing Rajinikath as a crudely chastising Jailer,is the liberty of Rajini,at the mercy of his jailer, Nelson}The initial scenes showing the routine of the submissive grandpa Rajini and his cheeky grandson Rithvik are moments of great relaxation to be revelled by the audience. This indirectly connects 'Jailer' with Kamal's 'Vikram' where the grandpa Kamal had his disquieting moments with his sickly grandson.

  Jailer is an unusual Rajini film when compared to the other releases of the mass hero in the recent years, because here one could see a calm and composed Rajini silently battling with his pangs of emotions while at the same time cutting his fellow characters with knives of humour, to which Yogi Babu becomes the chief victim. The Bharathiyar episode of Yogi Babu will stay long in audience memory. Perhaps it is this cutting blow of Rajini that has put the mischievous and the noisy tongues of V.T.V Ganesh{the psychiatrist}and Redin Kingsley under check.

  'Jailer' dynamically brings together Mohanlal,Shiva Rajkumar,Jackie Shroff, from  Malayalam, Kannada and Hindi cinema,as great companions of Jailer Muthuvel Pandian,besides inducting Sunil {as Blast Mohan}and Sunil Reddy {as director Bagunnara Balu} from the Telugu belt. All these actors add to the cinematic segment of the film. Apart from Rajinikanth,the other two winning edges of Jailer are Nelson's timely dialogues dipped in black humour that would enjoyably get filled in the memory wallets of the youth and the excellent roleplay of villain, by Vinayakan. From a villain's henchman in Thimiru,Vinayakan has has grown into a diabolic killer.

  Ramya Krishnan and Mirnaa Menon are the beautiful and meek womenfolk of the jailer's family. Vasanth Ravi as the Jailer's son and ACP, has done a neat role with his inability to satisfactorily answer his dad's repeated question,"Do you have anything to tell your dad, son?" The twist in the climax between the father and son, cannot go unnoticed.

   One cannot fail to record Tamannah's dance number which does not pass on as a mere glamour show but compactly adds to the all-pervading humour core of the film. Anirudh's Kaavaala and Hukum and his background score are really invigorating. But one could feel Annathe songs still ringing in their ears. On the whole,Jailer would remain as the most wanted films of the superstar, to be preserved in the archives, as his latest hit.

                                     ============0===============

Wednesday, August 9, 2023

Homage to Siddique,the famous Malayalam film maker.

   



    Siddique,one of the most popular directors of Malayalam and Tamil films is no more today.This blog already carries an article'Tamil films of Malayalam directors' posted on 17th August 2019, in which he finds a prominent place.With his passing away, Malayalam cinema has lost a really entertaining film maker whose films carried robust comedy scenes and family-oriented action sequences meant for all ages of the audience.

  From Ramji Rao speaking to Big Brother, Siddique's energy levels of narration remained unstinted. His most noted films were Vietnam Colony, Godfather. Kabooliwalah,Hitler,Friends,Chronic Bachelor,Body Guard,Baskar the Rascal and Big Brother. One could notice the prominence of English flavour in the titles of all the films made by Siddique.

   Some of his films made into Tamil were, Vietnam colony{with Prabu replacing Mohanlal} Friends,Chronic Bachelor as Enga Anna, Body Guard as Kavalan and Baskar the Rascal as Baskar Oru Rascal. Siddique has also made the Tamil film Sadhu Miranda.Like their Malayalam counterparts, Tamil audience also enjoyed the hilarious comedy scenes with Vadivelu &his team of comedians creating a ruckus in Friends and Enga Anna besides Vadivelu sitting on the head of Vijay in Kavalan. These comedy scenes neatly fell in line, with those of Innocent & team in Siddique's Malayalam films.

  What was special about Siddique's film making process was the innate gusto in narration involving every character of the story line. If Fazil's film relied on delicate touches of aesthetics and humour, Siddique focused on an invigorating journey, enthusing the audience at every stage and every frame of the course of cinematic events presented with physical comedy accompanied by emotional sparks. It is another fact that both Fazil and Siddique made films purely for the family audience. But Siddique took the action segment in narration a little more strongly,than Fazil.

    With the loss of Siddique,who started his creative career as a modest screen play writer for the film Pappan Priyapetta Pappan, Malayalam cinema is let down by the crude onslaught of time. Siddique was just nearing his seventieth year of age. His demise would have saddened not only the film fraternity and his family, but also a major chunk of the Tamil film audience because his affinity towards the Tamil audience was as much close as that of his emotional bonding with his native folks. This blog writer deeply mourns the fact that Siddique is not here to give us more of his enjoyable film treats. Long live Siddique in the memory of his lovers and his film fans.

                             ===========0===========

Saturday, August 5, 2023

இரவின் மடியில் இனிதாய் இளைப்பாறிய தமிழ்த்திரை.

 "இரவின் மடியில் உலகம் உறங்கும்

நிலவின் அழகில் மலரும் மயங்கும்

என் மன வேதனை யார் அறிவார்

உண்மையைச் சொன்னால் யார் உணர்வார்"

  என்று,இரவின் மடியில் உறங்கும் உலகிற்கிடையே மனதை உலுக்கும் வேதனையை,மற்றவர் அறிவரோ எனும் ஆழ்மனக்குமுறலை வெளிப் படுத்தி, P.B.சீனிவாஸின் மென்மைக் குரலில் சோகத்துடன் வசீகரித்த பாடலை,எத்தனை பேர் கேட்டிருப்பரோ தெரியாது.

  கண்ணதாசன் எழுதி வேதாவின் இசை யில் வெளிவந்த இந்த வித்தியாச மான பாடல்,சரசா B.A எனும் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தது.இரவுப் பொழுதை பல் வேறு கோணங்களில் திரைப்படத்தலைப்பு களாகவும், பாடல்களாகவும்,தனிப் பெருமை யுடன் கொண்டாடியது தமிழ்த்திரை.

   அண்ணாவின்'ஓர் இரவு'தொடங்கி 'பகலில் ஓர் இரவு','முதல் இரவு' நடு இரவில்' 'இரவின் நிழல்''இரவுப் பாடகன்''இரவுக்கு ஆயிரம் கண்கள்', போன்ற தமிழ்த்திரை தலைப்புகள் இரவின் அசாதாரணத் தன்மையையும் இரவுப் பொழுதோடு தொடர்புடைய அந்தரங்க நிகழ்வுகளையும், சொல்லாண்மையுடன் வெளிப்படுத்தின.

  இரவை இதிகாசமாக்கிய திரைப்பாடல் களில் 'குலேபகாவலி' திரைப் படத்தில் இடம்பெற்ற,ஏ.எம்.ராஜா ஜிக்கி பாடிய,

மயக்கும் மாலை பொழுதே நீபோபோ

இனிக்கும் இன்ப இரவே நீ வாவா

இன்னலைத் தீர்க்கவா"

எனும் பாடல்,இதயத்தை இதமாய் வருடிக் கொண்டே இருக்கும்.

இரவைக்கொண்டாடி களேபரம் கண்ட,

"இரவினில் ஆட்டம்

பகலினில் தூக்கம்

இதுதான் எங்கள் உலகம்

எங்கள் உலகம்"

   எனும் டி.எம்.எஸ் பாடிய 'நவராத்திரி' படப்பாடல்,இரவின் இறுமாப்பை என்றென்றும் பறைசாற்றும்.

 'கர்ணன்'திரைப்படத்தில் டி.எம்.எஸ். P.சுசிலா இசையால் இசைந்து பாடிய,

"இரவும் நிலவும் வளரட்டுமே

நம் இனிமை நினைவுகள் தொடரட்டுமே

தரவும் பெறவும் உதவட்டுமே

நம் தனிமை சுகங்கள் பெருகட்டுமே"

  எனும் சுகமான பாடல்,இரவை சொர்க்கமாக்கி கற்பனையில் களிப்பூட்டியது.

  ஜெய்சங்கரின் அறிமுகப் படமான'இரவும் பகலும்'திரைப்படத்தில், டி.எம்.எஸ் குரலில் தத்துவ சிந்தனைகளால் உலகத்தையும் இதயத்தையும் ஒன்றாக்கிய,

"இரவும் வரும் பகலும் வரும்

உலகம் ஒன்றுதான்

உறவும் வரும் பகையும் வரும்

இதயம் ஒன்றுதான்"

  என்று,உணர்வுகளை ஒருநிலைப்படுத்தி உள்ளத்தை உறங்கச்செய்த பாடல்,இரவின் அமைதியை நெஞ்சில் நிலைநிறுத்தியது.

  P.சுசிலாவின் இனிமைக்குரலில்'குலமகள் ராதை'திரைப்படத்தில் நாம் கேட்டு மெய் மறந்த,

"இரவுக்கு ஆயிரம் கண்கள்

பகலுக்கு ஒன்றே ஒன்று

அறிவுக்கு ஆயிரம்

உறவுக்கு ஓன்றே ஒன்று"

பாடலும்,

  'கற்பகம்'திரைப்படத்தில்,கே.ஆர்.விஜயா வின் திருமணத்தோழியாகத் தோன்றி, அவரை முதலிரவுக்குள் முறைப்படுத்தும் வண்ணம் சாவித்திரி பாடுவதாக P.சுசிலாவின் குரலில் அமைந்த,

"ஆயிரம் இரவுகள் வருவதுண்டு.

ஆனால் இதுதான் முதலிரவு

ஆயிரம் உறவுகள் வருவதுண்டு

ஆனால் இதுதான் முதல் உறவு"

 என்று காமமின்றி தாம்பத்யத்தின் தரமுயற்றிய பாடலும்,

  முகம் காணாத் தாயினை கனவினில் கண்டு,நிஜவாழ்வில் தாயைக்கண்டு நலம் காணத்துடிக்கும் அன்பு மகளின் ஏக்கத்தை வெளிப்படுத்தும் வண்ணம்,'காவியத் தலைவி' திரைப்படத்தில் இடம்பெற்ற P.சுசிலாவின் கனத்த குரலில் நம் நெஞ்சத்தில் சோகத்தை எடை குறையாமல் இறக்கி வைத்த 

"ஒரு நாள் இரவு பகல்போல் நிலவு

கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா கிருஷ்னா சுகமா

கன்மணி சுகமா சொல் என்றாள்"

   எனும் இரவில் பாசத்தை பொழியச்செய்த பாடலும்,ஒன்றாகச்சேர்ந்து இரவோடு நம் நினைவுகளை இறுக்கமாய்க் கட்டிப் போடும்.

  இரவுப்பொழுதின் இன்ப ஊற்றினை, எல்.ஆர் ஈஸ்வரி 'குழந்தையும் தெய்வமும்'படத்தில் பாடிய

"ஆஹா இது நள்ளிரவு

இரவுக்கும் வரவுக்கும்

இருவரின் உறவுக்கும்

பொன்னான பொழுதல்லவா

இதை சொல்லாமல் நான் சொல்லவா" 

  எனும் மனம் மயக்கும் பாடலும். எஸ்.பி.பால சுப்பிரமணியம்,எஸ்.ஜானகி குரல்களில் இதமாய் நம் ஸ்பரிசங்களை வருடிய,

"பனிவிழும் இரவு நனைந்தது நிலவு

இளங்குயில் இரண்டு இசைக்கின்ற பொழுது

பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது"

எனும் பாடல் வரிகளும்,இரவுப்பொழுதுக்கு புதிய பரிமாணம் படைத்தன.

  இரவின் மடியில் நம்மில் பலரையும் இளைப்பாறச்செய்யும் இன்னும் எத்தனை யோ பாடல்கள் தமிழ்த்திரையிசையில் உண்டு.ஆனாலும், இசையின் இனம்புரியா ஏற்ற இறக்கங்களை கவிதை வரிகளில் உள்ளடக்கிய பிரதானப் பாடல்கள்,இப்பதி வில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  மேலே குறிப்பிட்ட பாடல்களில் ,குலேபகாவலி, பாடலை தஞ்சை. N.ராமைய்யாதாஸ் எழுதியிருந்தார். 'நவராத்திரி' மற்றும்'இரவும் பகலும்' பாடல்களுக்கு ஆலங்குடி சோமு வரி வடிமைக்க, 'கற்பகம்'',குழந்தையும் தெய்வமும்'' மௌனராகம்' திரைப்படங் களுக்கு வாலியும்,இதர ஐந்து பாடல்களை கண்ணதாசனும் கற்பனை களஞ்சியத் திலிருந்து களமிறக்கினர்.

   இசையமைப்பாளர்கள் விஸ்வநான் ராமமூர்த்தி(குலேபகாவலி, கர்ணன்) டி.ஆர். பாப்பா(இரவும் பகலும்) கே.வி.மகாதேவன் (கற்பகம்,குலமகள் ராதை&நவராத்திரி) எம்.எஸ் விஸ்வநாதன் (குழந்தையும் தெய்வமும்& காவியத் தலைவி)மற்றும் இளையராஜா(மௌன ராகம்) எல்லோரும் இணைந்து இரவுக்கும் இசைக்கும் ஒரு சேர அமரத்துவம் அளித்தனர்.

  இப்பதிவில் இச்சைக்குமட்டுமே இசை வாகி/இசையாகி,இரையூட்டும் 'ராத்திரி'ப் பாடல்கள் தவிர்க்கப்பட்டுள் ளன.மாறாக, இரவுப்பொழதை பல்வேறு உணர்வுத் தேடல்களுக்கென களமமைத்த பாடல்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப் பட்டுள்ளன.

  இரவின் மடியில் உலகமே உறங்கும் உண்மைச்சூழலில்,இரவோடு உறவாடும் உள்ளக்கிடக்கையில்,உயிரோட்டம் அதிர்ந்து தலைப்பு களாய்,கவிதை வரிகளாய்,தமிழ்த் திரைக்கு வண்ணம் பூசி,காலம் காலமாய் இரவைக் கொண்டாடிக்கொண்டிருக்கின் றன,என்பது படைப்புக்கும் படைப்பாளிக ளுக்கும் பெருமை சேர்க்கும் நிலைப்பாடா கும்.

             =======/0======0=========