Wednesday, August 11, 2021

அழகை ஆராதிக்கும் தமிழ்த்திரை

 

    அழகைப்பற்றி பேசவோ எழுதவோ தொடங்கினாலே,ஆங்கில இலக்கியம் படித்தவர்க்கு,ஜான் கீட்ஸ்{John Keats} எழுதிய,

"A thing of beauty is a joy for ever" மற்றும்  

"Beauty is truth,truth beauty 

That is all ye know and need to know" 

   எனும் பொன்னான கவிதை வரிகள் நினைவுக்கு வராமலிருக்காது.தமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார்  அவர்கள் 'முருகன் அல்லது அழகு'எனும்  தலைப்பு கொண்ட,காலப்பெட்டகமான இலக்கிய நூல் ஒன்றை,அழகுடன் தமிழுக்களித்தார்.

  இப்புத்தகத் தலைப்பினையும்,கீட்ஸ்சின் கவிதை வரிகளையும் ஒப்பிட்டுப்பார்க் கையில்,அழகு உண்மையெனில்,அதுவே ஆன்மசுகம் அளிப்பதாகும். இதேபோன் றொரு கருத்தினைத்தான் அருணகிரிநாதர் வடித்த திருப்புகழ் எனும். இறைவழிப்பாட லும் உணர்த்துகிறது .இந்த உண்மையை 'பஞ்சவர்ணக்கிளி ' திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசன் அழகாய் வரிகளாக்கிய, 

"சத்தியம் சிவம் சுந்தரம் 

சரவணனன் திருப்புகழ் மந்திரம்" 

என்று தொடங்கி 

"அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன் 

அவன் ஆலயத்தில் அன்புமலர் பூசை வைத்தேன்" 

  எனும் ஏகாந்த பாடலொன்று பி.சுசீலா வின் தேன் குரலில்,கேட்க கேட்க நம்மை மெய்மறக்கச் செய்து.இப்பாடலுக்கு   விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்தி ருந்தனர்.தமிழ்த்திரை கு,படத் தலைப் புகளாலும், பாடல்களாலும், அழகுக்கு ஆராதனை செய்யத் தவறியதில்லை. 

  'அழகு'{1984 film},'அழகன்','ஆணழகன்', 'பேரழகன்','அழகி','பாக்தாத் பேரழகி, அழகே'உன்னை ஆராதிக்கிறேன்',என்று சிறப்பான தலைப்புகள் அழகைச் சுற்றி வலம்வந்திருக்கின்றன.பாடல்களில்"அழகான பொண்ணு நான் அதுக் கேற்ற கண்ணுதான் {பி.பானுமதி'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'} என்று பெண்ணாக, தன்னழகை பறைசாற்றி,"உன்னழகை கன்னியர்கள் கண்ட தினாலே உள்ள மெலாம் உன் வசமாய் ஆனதினாலே"{பி.சுசீலா;'உத்தம புத்திரன்'}என்று ஆணின் பேரழகைப் பாராட்டி"அழகே வா அருகே வா"{பி.சுசீலா'ஆண்டவன் கட்டளை'}என்று அழகிற்கு வரவேற்பு தோரணம் கட்டி, அழகை அனுபவித்து,ஆர்ப்பரித்த தமிழ்த் திரை பாடல்கள்தான்,எத்தனை எத்தனையோ! 

"அழகுக்கு அழகு நிலவுக்கு நிலவு 

அசைந்திடும்  பூச்செண்டு 

கனவுக்கு கனவு நினைவுக்கு நினைவு 

கரைந்திடும் கற்கண்டு" { பி சுசீலா; 'வீரத்திருமகன்'} 

என்று இயற்கையாய் அழகுடன் பயணித்தும்,

"அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை 

நெஞ்சில் ஆசைக்கும் உறவுக்கும் பேதமில்லை"

{P.B. ஸ்ரீனிவாஸ் எஸ் ஜானகி; 'நெஞ்சம் மறப்பதில்லை'} என்று அழகின் ஆத்மாவை,அகன்று விரிந்த பரம்பொருளாய்,காதலின் வடிவில் தரிசிக் கும் மனப்போக்கும்,பாடல்களாய் மனதில் பதிகையில்,திரையிசை தனித்தடம் பதிக்கிறது.

   மேலே குறிப்பிட்ட பாடல்களில் பானுமதியின் பாடலை ஏ.மருகாசி புனைய எஸ்.தக்ஷிணாமூர்த்தி இசை யமைத்திருந்தார்.'உத்தமபுத்திரன் படப் பாடலுக்கான கே.எஸ்.கோபால கிருஷ்ணன் வரிகளுக்கு,இசைமேதை ஜி.ராமநாதன்  இசையமுதூட்டினார் .இதர மூன்று பாடல்களும் கவியரசின் கைவண் ணத்தில் உருவாக,மெல்லிசை மன்னர்[கள்] இசைவிருந்து  படைத்தனர் 

  சோகத்தை அழகாக்கி,அழகை சோகத் துடன் வெளிப்படுத்தி,'வைதேகி காத்திருந்தாள்'திரைப்படத்தில் எஸ்.ஜானகியின் மனதை உலுக்கும் குரலில்  இதயத்தில் ஈட்டியெனப் பாய்ந்த பாடலே,

"அழகு மலர் ஆட அபிநயங்கள் கூட 

சிலம்பொலியும் புலம்புவதுமேன்" 

  எனும் வாலியின் வலிசுமந்த வரிகள். இசைஞானியின் இசையில்,காலம் சென்ற ராகவேந்திராவின் நட்டுவனார் பங்கேற் பும்,ரேவதியின் அசுரவேக நடனமும்  உள்ளடக்கி,இப்பாடல் அழகின் ஆழம் கண்டது  எனலாம்.

  அழகை வார்த்தைகளால் வடித்தெடுத்து, கவிதைக்கு மட்டுமல்லாது, தமிழ்த் திரைக் கும் பெருமை சேர்த்த மூன்று பாடல்களை அள்ளித்தந்தார், கவிப்பேரரசு வைரமுத்து. அதில் முதலாவதாக வந்ததே,'புதிய முகம்' என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற, 

"கண்ணுக்கு மை அழகு

கவிதைக்கு பொய் அழகு

கன்னத்தில் குழி அழகு 

கார் கூந்தல்பெண் அழகு

இளமைக்குநடை அழகு 

முதுமைக்கு நரை அழகு 

கள்வர்க்கு இரவழகு 

காதலர்க்குநிலவழகு

நிலவுக்கு கரை அழகு 

பறவைக்கு சிறகழகு 

அவ்வைக்கு கூன் அழகு 

அன்னைக்கு சேய் அழகு

விடிகாலை விண்ணழகு 

விடியும்வ ரை பெண் அழகு

நெல்லுக்கு நாற்றழகு

தென்னைக்கு கீற்றழகு

ஊருக்கு ஆறழகு 

ஊர்வலத்தில் தேர் அழகு

தமிழுக்கு ழா அழகு 

தலைவிக்கு நான்அழகு" 

    எனும்,தீந்தமிழ் வரிகளால், திரையிசை யில் இலக்கியம் படைத்த பாடல்இசைப் புயல் ஏ.ஆர்.ரெஹ்மானின் இசையுடன் கலந்து,உன்னி மேனனின் காந்தக் குரலில்  என்னமாய் இதயத்தை வருடியது ப்  பாடல்!    

  அடுத்தது சூப்பர்ஸ்டாரின் 'பாஷா' திரைப்படத்தில் தேனிசைத் தென்றல் தேவாவின் இசையில்,கே.எஸ் சித்ராவும் எஸ்.பி.பி யும் ஆனந்தப்பரவசத் தில் பாடிய, 

K.S.Chithra:-

"அழகு அழகு

நீ நடந்தால் நடை அழகு

நீ சிரித்தால் சிரிப்பழகு

நீ பேசும் தமிழ் அழகு

நீ ஒருவன் தான் அழகு

அழகு அழகு அழகு”

ஓஓ நெற்றியிலே சரிந்து விழும்

நீள முடி அழகு

அந்த முடி கோதுகின்ற 

அஞ்சு விரல் அழகு

அழகு அழகு...................

SPB:-

அழகு அழகு

நீ நடந்தால் நடை அழகு

நெருங்கி வரும் இடை அழகு

வேல் எரியும் விழி அழகு

பால் வடியும் முகம் அழகு

ஓஓ தங்க முலாம் பூசி வைத்த

ஆங்கம் ஒரு அழகு

தள்ளி நின்று எனை அழைக்கும்

தாமரையும் அழகு

அழகு அழகு அழகு அழகு".

   எனும் இனிய டூயட் பாடல். சுரேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில்,புதுமை யான காட்சியமைப்புகளுடன் தேவாவின் இதமான இசையோட்டத்தில், இரு இசைச் செல்வங்கள் குரல்களில் என்றென்றும் இனிக்கும் பாடலாகும் இது. மூன்றாவதாக 'லவ் டுடே'{Love Today} திரைப்படத்தில் இளைய தளபதிக்காக,ஷிவாவின் இசையில்,பாடுநிலா எஸ. பி.பி பாடிய, 

"என்ன அழகு எத்தனை அழகு 

கோடி மலர் கொட்டிய அழகு

இன்று எந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திரை அழகு 

சிறு நெஞ்சை கொத்திய அழகு 

இன்று எந்தன்தோள் சாய்ந்ததே" 

  எனும் இந்த  அருமையான வரிகள்,  ஒய்யாரமாய் அழகை தனது  டமை யாக்கிய பெருமையில்,காதல் வயப்பட்ட இளைஞனின் பெருமிதத்தை நம்முடன் பங்குவைத்தன.அழகை சிந்தையில் போற்றி கொண்டாடிய இந்த மூன்று பாடல்களும்,தமிழ்திரையின் இசை வரலாற்றுப் பக்கங்களை  செழுமையுடன் கூட்டின என்றுதான் கூறவேண்டும்.   

  இதேபோன்று நம் சுவாசத்துடன் அழகைச் சேர்த்த பாடலே 'சைவம்' திரைப்படத்தில் அமரர் நா.முத்துக்குமாரின் அழகடர்ந்த சொல்வளத்தால் சொர்க்கம் படைத்த, 

"அழகே அழகே எதுவும் அழகே 

அன்பின் விழியில் எல்லாம் அழகே

மழை மட்டுமா அழகு 

சுடும் வெயில் கூட ஒரு அழகு

மலர் மட்டுமா அழகு 

விழும் இலை கூட ஒரு அழகு

.............................................

புன்னகை வீசிடும் பார்வைகள் அழகு 

வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு

நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு

உண்மை அதுதான் மெய்யாய் அழகு

...................................................

இயற்கையோடு இணைந்தால்

உலகம் முழுதும் அழகு 

கவலை யாவும் மறந்தால் 

இந்த வாழ்க்கை முழுதும் அழகு

...................................................

பூக்கும் பூவில் வீசும் 

வாசம் என்ன அழகு

அதையும் தாண்டி வீசும் 

நம் நேசம் ரொம்ப அழகு

  இந்த ஏற்றமிகு வரிகளை மழலை மொழி யில்,பாடகர் உன்னி கிருஷ் ணனின் மக்கள் உத்தரா கிருஷ்ணன் பாட,அதற்கு ஜி.வி பிரகாஷ் நீரலையில் மிதக்கும் மலர்கள் போல,இசையமைத்திருந்தார். அழகு ஒரு அழியா ஆனந்த பரவசம்  என்பதை, எவ்வளவு இதிகாசத்தன்மை யுடன் இது போன்ற பாடல்கள் வெளிப் படுத்துகின் றன. 

   அழகை  தமிழாக்கி,தமிழை அமுதாக்கி, கற்பனையால் கவிதை கோபுரங்கள் உருவாக்கிய,திரையிசைக் கவிஞர்களும், அவர்களால் பெருமையுற்ற தமிழ்திரை யும்,அழகைப் பற்றிய பாடல்களை ஆலய  மணிகளாய் என்றென்றும்  ஒலிக்கச் செய்து,மனதிற்குள் மங்களம் சேர்க்கின் றன. 


                                         ****************0********************

 



Sunday, August 1, 2021

Pre -Independence Heroes and Heroines of Tamil Cinema





{Honnappa}
M.K.T
{P.U Chinnapa}


{M.K.Radha{

{Madhuridevi}


{V.N.Janaki}
{Ranjan}
T.R.Rajakumari


V.N.Janaki&Madhuridevi

{.B.S.Saroja}






  Tamil cinema had established a place for itself even before the independence of India.Though technically it was on the way to upgradation,there was no dearth of storyline nor was there any paucity for acting skill. 

  As the stage for drama was well laid much earlier than the inception of cinema,there were men of calibre to lift Tamil Cinema to the next stage.It was not yet the time of mass heroes like MGR and Sivaji Ganesan.Though MGR set his foot in Tamil cinema before India's independence he could establish himself as an independent hero only at the dawn of independence.However there were high sounding heroes of popularity like Honnapa Bhagavdhar,as well as the astounding super heroes like M.K.Thiagaraja Bagavadhar and P.U Chinnappa with their singing voice mould capable of enchanting a huge line of audience.

  Honnappa Bhagavadhar who hailed from the Kannada region was busy with Tamil Cinema from 1941 to 1959.His films like Krishna Kumar,Sri Murugan{in which MGR also joined him}Arundhadhi,Valmiki,Sadha Sukanya, Prabhavadhi,Sodhanai,Deva Manohari,were some of his widely received films.His female pairs were T.R.Rajakumari,U.R.Jeeva Rathinam, N.C.Vasanthakokilam,K.Malathi,Pandari Bhai and P.Bhanumathi.Besides acting Honnappa Bhagavadhar also produced the famous film Uzhavukkum Thozhilukkum Vandhanai Seivom released in 1959.This film had Prem Nazir and E.V.Saroja playing the lead roles and it was directed by M.A.Thirumugam.

 Mayavaram Krishnasami Thyagaraja Bhagavadhar and Puthukkottai Ulakanadha Pillai Chinnappa were contemporary heroes who moved to stardom as the first super heroes creating a conflict of interests between their fans. Bhagavadhar was six years older than Chinnappa and appeared first in Tamil Cinema in 1934 with the film Pavalakodi directed by K.Subramanyan. Chinnappa's first film was Jupiter pictures' Chandrakantha.Both were talented singers but Bhagavadhar's scintillating voice conquered the hearts of music lovers with grace charm and extraordinary reach.Nevertheless both the heroes could make only their short innings because of various depressing events in their life.

 Bhagavadhar's list of films were,Ambikabadhi,Haridas,Sivakavi,Thirneelakandar, Amara Kavi Ashok Kumar Rajamukthi{in both these films MGR also did roles}Naveena Sarangadhara, Sathyaseelan{in which Bhagavadhar did dual roles}Chintamani,Pudhuvaazhvu and Sivakami {which was released after his death}.Bhagavadhar also produced the films Sathyaseelan and Pudhuvaazhvu.His female pairs were,S.D.Subbulakshmi,M.S.Devasena,K.Aswathamma, M.R.Santhanalakshmi,P.Kannamba,S.Jeyalakshmi,N.C.VasanthaKokilam,T.R.Rajakumari, V.N.Janaki,S.Varalakshmi,Lalitha and G.Varalakshmi.Most of his films were great hits and Haridas ran for three years at the Sun Theatre in Broadway,Chennai.

  Though P.U Chinnappa was introduced by Jupiter films,it was Modern Theatres that made him stamp his power of acting through the mega hit film Uthama Puthiran.{Later Venus Pictures came out with Sivaji Ganesan's Uthama Puthiran which was also a great hit}Chinnapa's other films with the Modern Theatres were Thayalan,Dharma Seelan and Manonmani.He did a few more films for Jupiter pictures of which Kannagi and Mahamaya stand out as Chinnapa's prime entries with that production house. His other major hits were Jegadhala Pradhaban,Aariyamala and Mangayarkarasi,all with Pakshiraja films.His film Rathnakumar inducted MGR in an important role.Chinnapa's most frequent female pair was T.R.Rajakumari followed by P.Kannamba and P.Bhanumathi

  Bhagavadhar was entangled in the murder case of Lakshmikanthan along with N.S.Krishnan and suffered imprisonment for two years which demoralised his frame of mind,besides affecting his fortunes.Though he had a spiritual bent of mind and dedicated most of his vocal wield for devotional songs his last days were really miserable and he died before seeing fifty years.Whereas Chinnappa died a sudden,untimely death when he was just thirty five years old.Though he had made a lot of fixed assets as houses in Pudhukottai his unforeseen death created shock waves in the film circle and his death was followed by poverty striking his wife and son,the reasons for which are said to be a case of mystery.

  There was a breezy hero during the pre independence period called M.K.Rdha whose father Madras Kandasamy Mudaliyar was a drama teacher.M.K.Rdhakrishnan who became M.K.Radha was introduced as hero in Sathileelavadhi{1936}directed by Ellis.R.Dungan in which MGR also played a supporting role.The screen play for this film was made by Kandasamy Mudaliyar.Then it was Gemini Studios'S.S Vasan who took M.K.Radha into lime light by his mega hit films like Chandralekha,Aboorva Sagodhararkal{dual roles}Samsaram,Moonru Pillaigal and Avvaiyar.All these films made history in Tamil cinema.

   Some of the other pouplar films of M.K.Radha during the early years were,Chandra Mohana, Maya Macheendra,Vanamohini and Kannamma En Kadhali.Porter Kandan,Pasavalai and Gnana Soundari were the other post independence remarkable entries of M.K.Radha,He then took up the roles of kings in films like Vanangamudi and Uthamaputhiran.The other Sivaji Ganesan films that Radha acted were as Kambar in Ambikapathi and as Padmini's father in Pudhayal.M.K.Radha's famous female pairs were M.S.Gnanambal{who became his spouse}  Pushpavalli, M.R.Sandhanalakshmi,K.Thavamani,P.Kannamba,P.Bhanumathi,G.Varalakshmi and Pandarbhai.Reputed film columnist Randor Guy called M.K.Radha 'the toast of theatre and cinema'.M.K.Radha cherished patriotism on stage and he was awarded Padmashri by the then President of India

   During this period there was an absolutely dynamic and sparkling actor called Ranjan whose original name was Ramanarayana Venkataramana Sarma,who was introduced in the film Ashok Kumar,starring M.K Thyagaraja Bhagavadhar,in the role of Gautama Bhuddha and later he appeared as Rishyasringar in the film bearing his role as title.But it was the most popular film Mangamma Sabadham made by S.S.Vasan that threw Ranjan to limelight.Ranjan rose to fame again as a celebrated villain in the epoch making film Chandralekhan as the power hungry younger brother of M.K.Radha.Movie lovers of those days who are still alive,will be cherishing in their memory the vulpine smile and the sharp dialogues of Ranjan in Chandralekha.

  Ranjan's next film as hero was Devar's Neelamalai Thirudan, in which he was paired with Anjalidevi.The song "Sathiyame Latchiyamaai kolladaa" by T.M.Soundarajan still echoes in audience memory with the musical mode imitating horse's clamps.Ranjan also acted in Minnal Veeran.He was like a flash of lightning on Tamil big screen and faded away all of a sudden.Ranjan was an architect by his academic records and was an avid lover of dance and music.He ran his own music and dance school in Chennai.He is said to have passed  away in New Jersey,United States.

  Yet another great actor of those days was Serukulathur Sama.He appeared in titular roles in Krishnan Thoodhu {1940}Shailak {1940}and Baathruhaari{1944}.In fact his first role itself was as Lord Krishna in Draupati Vastra paharanam{1935} and later in MKT's Chintamani {1937} Then he became Kambar in MKT's Ambikabadhi,Kanvarishi in M.S.Subbulakshmi's Sakuntalai, Sundara mamunivar in P.U.Chinnapa's Manonmani,as vedhiyar in Nandanar,as a sage in MGR's Marmayogi and as a Budhist Monk in Burma Rani.His other notable films were,M.K.T's Rajamukthi,Sivakavi and Thiruneelakandar and other well known films like Ezhai Padum Padu, Panam Paduthum Seyyum,Manithan Maravillai and Pattinathaar. 

  The other notable heroes of the Pre independence era were,K.R.Ramasamy, T.R.Mahalingam and T.R.Ramachandran.Of these,the first two were actors-cum singers and the third hero carried a comic vibe in his acting style.T.R.Mahalingam's singing wield and depth were incomparable.All the three heroes have already found a suitable place in separate articles of this blog. 

    Among the heroines of Tamil cinema, who started their career during the pre independence era many of those paired with MKTand Chinnappa,were not not to be seen with the next generation's two mass heroes MGR and Sivaji Ganesan.However V.N.Janaki who started her career as a dancer in Manmadha Vijayam in 1939,continued her dancing roles in a few more films and became a lead actress in Sakada Yokam.Her next famous film was Raja Mukthi in which M.K.T was the hero and MGR did a supporting role.

  After this Janaki was paired with MGR in films like Mohini and Marudha Naattu Ilavarasi,both Jupiter Pictures' releases.She also acted with MGR in Naam.But her most celebrated film was Aayiram Thalaivaangiya Aboorva Chinatamani produced by the Modern Theatres and she did a dynamic role play as Chintamani.Later she was paired with N.N.Kannappa in Devaki and her last film was Citadel Pictures' Vijayapuri Veeran. She became MGR's life partner and was the first woman chief minister of Tamil Nadu,for a short spell,after the passing away of MGR in 1987.

    Another exsquisite heroine of that period was Madhuridevi who was assigned a small role in M.K.Thyagaraja Bhagavadhar's Ambikapathi {1939}.Then she acted in Pandurangan and Vaayadi but found a significant role in Aayiram Thalaivangiya Aboorva Chintamani along with the main star V.N.Janaki.Following this she shared screen space with Janaki in films like Rajamukthi, Mohini, and Devaki.But she will be ever remebered for her wonderful role in Mandhirikumari and the song'Vaaraai Nee Vaarai'will bring her to audience memory along with the scene showing her push down her evil husband{S.A.Natarajan} to death from a hill top,for the sake of her country. 

   Madhuridevi was paired with MGR in Marmayogi and Kumari,besides doing a strong role in MGR's most popular film Mohini,being paired with T.S.Balaiah.Then in Jupiter Pictures' Kanniyin Kaadhali based on Shakespeare's Twelfth Night,Madhuridevi played dual roles. She also did a vital role in MGR's tragic film En Thangai.Her other notable films were Manidhanum Mirugamum of Sivaji Ganesan, Thai Ullam of Gemini Ganesan,{mentioned as R.Ganesh} Zamindar{another S.A.Natarajan film}Asai Anna Arumai Thambi{with A.P.Naga rajan}Mala Oru Mangala Vilakku and later in Kojum Salangai in a character role.

  There was another a performance oriented heroine called B.S.Saroja,who also like V.N.Janaki, started her career as a dancer in the film Madhanakamarajan{1941} and continued as a dancer in a few films.She was assigned a role in the film Vikatayogi{1946}.Her flair for acting soon enabled her to be paired with MGR in films like Jenoah,Koondukkili and Puthumai Pithan. With a pair of fascinating eyes like T.R.Raja kumari,B.S.Saroja gave impressive performances in films like Modern Theatre's Vannakkili &Kumudham and later as the sister of Arunagirinadhar, in the film bearing the saint's name as title.   

   Actresses like T.R.Rajakumari,P.Kannamba, Pandaribai,P.Bhanumathi,S.Varalakshmi and G.Varalakshmi continued their film journey for quite long.T.R.Rajakumari acted in the titular role in Gemini Studios'epic film Chandralekha and was seen as Sivaji Ganesan's young step mother in Anbu and then as a vamp in his films Manohara and Thangapadhumai.She acted with MGR in Gulebhagavali and Puthumai Pithan and then took up roles as MGR's elder sister in Periya Idathu Penn and finally as his mother in Paasam.She also did an impressive elderly role in SSR's film Vanambadi.She is remembered for her enchanting eyes and captivating delivery of dialogues.She has also been given due space in another article of this blog

  S.Varalakshmi was paired with MGR in Chakravarthi Thirumagal and with Sivaji Ganesan in Veera Paaniya Kattabomman.Later she did powerful mother roles in films like Panama Paasama, Poova Thalaiyaa and positive mother roles in MGR's Maatukkaara Velan and Needhikku Thalai Vanangu.G.Varalakshmi was one of the female pairs of MGR in Gulebagavali. She was paired with Sivaji Ganesan in Naan Petra Selvam.Later she appeared in a formidable mother role in AVM's Kuzhandhaiyum Dheivamum.But her most popular film was Aaravalli.Apart from V.N.Janaki,B.S.Saroja and Madhuridevi all the other actresses listed here,have found their fitting space in separate articles in this blog.

   Above all who can forget the doyen of classical music M.S.Subulakshmi?It was she who took Tamil cinema to its spiritual glory by her two monumental films Meera and Shakuntala.Tamil cinema as well as Tamil film audience literally owe a lot to these founding pillars of Tamil Cinema of whom many were singers-cum actors.This post is a passionate tribute to all of them.

                                       ++++++++++++++I++++++++++++++



Monday, July 26, 2021

Homage to a Multilingual Actress.


    

  Born as Kamala Kumari,the multi lingual actress Jeyanthi is no more today.Her popularity in Kannada cinema was an indicator of her brilliance in performing a variety of roles,that earned her many deserving awards from the state of Karnataka as well as a prestigious medal/award from the president of India.She had shown equal interest and vigour in taking up different roles in Kannada,Telugu,Tamil,Malayalam,Hindi and Marathi films.

  Her first Tamil entry was Yaanai Paagan.After that, she performed as second heroine or supporting actress in films like Mangaiyar Ullam Mangadha Selvam,Kaadhal Paduthum Paadu,Kalai Koil, Manippayal,Sivaji Ganesan's Annai Illam and Karnan{as Draupati} and MGR's Padagotti and Mugarasi.These roles were not mighty enough to exhibit her great acting skills.

  It was K.Balachander,the proud directorial face of Tamil cinema who brought the latent performance potential of Jeyanthi to the broad spectrum of the audience view.The six famous films that she worked for,under her task master,chiselled out her contribution to Tamil cinema in a fitting and fascinating way.Her first film was as a nurse in K.Balachander's Neerkumizhi.Then it was Edhir Neechal in which she was paired with Nagesh{besides Annai Illam}that displayed her ability to play the role of a mentally unsound girl,under enforced circumstances.This role made her get out of her state of insignificance on Tamil Silver screen.Her flair for comedy got enriched in her next film with the veteran comedian Nagesh,in Bama Vijayam.

   Bama Vijayam was a film of total fun from the beginning till the end. Sowcar Janaki,Kanchana and Jeyanthi as the wives of the three brothers Major Sundarajan,R.Muthuraman and Nagesh respectively,made every scene worthy of valuable humour.K.B.memorably handled the plot revolving around  the visit of a film actress Bama{played by Rajashree}and its influence on the routine of the joint family of the three brothers,effectively managed so far,by their disciplinarian father T.S.Baliah.How the three daughters in law controlled their husbands and how their husbands danced to their tunes,created hilarious moments for the audience and the way Jeyanthi controlled Nagesh was the funniest feature of the film.

  Jeyanthi's other three films with K.Balachander formed a totally different kind of journey for her in Tamil Cinema.The three films that amazingly altered the movie making process of Tamil cinema were,Punnagai,Iru Kodugal and Velli Vizha.In all the three films Jeyanthi played the role of a victim of different types and in all the three films Gemini Ganesan was her male pair.

  In Punnagai she was a rape victim whom Gemini Ganesan married not out of sympathy but out of his dedication to the value for truth,that he observed till the end of his life,due to failure of  both his kidneys.Punnagai was one of the finest films of Gemini Ganesan and the role of Jeyanthi as a forlorn woman with her son born of her rapist,being finally accepted by her father in law {S.V.Sahasranamam}into his family's fold,would still be haunting audience memory.It was the character of one of the most pathetic women,in a male centric society and Jeyanthi finely fixed her profile into that character.

   In Iru Kodukal and Velli Vizha,Jeyanthi had to do the role of  a devoted wife facing the predicament of another woman stepping into her conjugal routine.While in Iru Kodukal the other woman{Sowcar Janaki} was actually the first wife of her husband,the film Velli Vizha was about the frequent stormy moments caused as a daily event,by the visits of her husband's female friend {Vanishree}.Iru Kodukal ended up with a positive climax,that brought the two wives of the hero getting ready to give in their husband for the other and finally,the first wife who was a district collector,happily opted out of the conjugal mess.

   Whereas in Velli Vizha,Jeyanthi would die a natural death leaving her children in the hands of her husband to be distantly motivated and brought up by her husaband's friend.In both the films the two women who came in between Jeyanthi and her husband,were made of positive vibes. Inspite of frequent bouts of emotional turbulence between Sowcar Janaki and Jeyanthi,Iru Kodukal beautifully redefined the cult of Indian womanhood deeply rooted to family values.In that way the film proved that both Sowcar Janaki and Jeyanthi were high end performers.

  Whereas Velli Vizha was a breezy tale of  innocence and faith exuberantly reflected in their demonstrative role play,by both Jeyanthi and Vanisri.Velli Vizha could be called one of the cleanest Tamil films,reflecting the scope for maturity in human relationship.Both Jeyanthi and Vanisri with their cordial notes and mutual trust,made the film to be eternally cherished in audience memory.

  Though the pride of Jeyanthi as a meticulous and meritorious performer of roles in Tamil cinema could be atributed to the film making efficacy of K.Balachander,it is an irrefutable fact that Jeyanthi by herself was a greatly talented actress with felicitous feminine grace and enchanting delivery of roles.Her grumbling tone in managing her domestic core in Iru Kodukal and her whimpering style in dialogue delivery were of a unique kind that distinguished her from other actresses.

  Though Tamil cinema did not have many opportunities to bring into its fold,this exsquisite, performance oriented actress,the films of K.Balachander will always bear clear testimony to her ability as a wonderful actress of a special vibration.Her death today,will automatically take regular film viewers who watched those K.Balachander films,in which she did solid roles,for a nostalgic retrospection into the high quality of Tamil cinema,during the last century.

                                            ===========0============

Saturday, July 24, 2021

பரம்பரை பலம்

 


  ஒரு திரைப்படம் துவக்கம் முதல் இறுதிவரை மையப்புள்ளியை நோக்கியே பயணிப்பது எளிதல்ல.ஆனால் அதுவும் முடியும் என்பதை அழுத்தமாகவும் ஆழமாகவும் வெள்ளித்திரை காட்சிகளாய்,பரபரப்புடன் தொடங்கி அதே ஆர்ப்பரிப்புடன் தொடர்ந்து,அசுர வலிமையில் பரம்பரை கௌரவத்தை நிலைநாட்டுவதே,'சார்பட்டா'பரம்பரை.

    குத்துச் சண்டையை குதூகலத்துடன் திரைமுழுக்க கொண்டாடிய வேறு ஒரு தமிழ்ப்படம் இருக்க வாய்ப்பில்லை.இத்திரைப்படத்தின் தனிச்சிறப் பாக விளங்குவது அனைத்து நடிகர்களின் உடல்மொழியும் வாய்மொழியு மாகும். 

  ஆர்யா தொடங்கி,பசுபதி,ஜான் விஜய்,கலையரசன்,துஷாரா விஜயன் பிரியதர்ஷனி ராஜ்குமார்,அனுபமா குமார்,போன்ற எல்லா நடிகர்களுமே செயற்கைத்தனம் சிறிதுமின்றி திரை நிகழ்வுகளில் ன்றிப்போயிருக் கிறார்கள்.கோபமும் ஆக்ரோஷமும் இல்லையெனில்,குத்துச் சண்டை  விளையாட்டு மேடையில்,வீரத்துடன் ஆட்டத்தின் நளினங்களையும் நெளிவுசுளிவுகளையும் துல்லியமாக பிரதிபலிக்க இயலாது 

   கபிலனாக ஆர்யாவின் ஆவேச உணர்வுப்பிழம்புகளும்,வெற்றிச்  செல்வனாக கலையரசனின் ஆற்றாமையும்,வெறியாட்டம் கொண்ட  வெம்புலியாக ஜான் கொக்கனும்,Dancing Rose ஆக அங்க அசைவுகளினால் குத்துச் சண்டைக்கு வித்தியாசமான பரிமாணம் வழங்கிய ஷபீர்  கல்லரக்கலும்{Shabeer Kallarakkal} அற்புதமாய்க் களம் கண்டு நெஞ்சில் நிறை கிறார்கள். 

  'தூள்'திரைப்பட காலத்திலிருந்து பசுபதியின் சென்னைத் தமிழ் தனி அழகுதான்.ஜான் விஜய் தனது நடிப்பு பாணியை முற்றிலும் மாற்றிக் கொண்டு எம்.ர்.ராதாவின்,மணிவண்ணனின் இல்லாமையை,புதுமை யாய் பூர்த்தி செய்கிறார்.

  'மெட்ராஸ்' திரைப்படத்திற்குப் பிறகு ப.ரஞ்சித் இயக்கத் துள்ள லில் வேகத்தைக் காண்கையில்,அவர் 'கபாலி'மற்றும்'காலா'திரைப்படங் களில் நிறையவே ரஜினிக்காக விட்டுக்கொடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

   படம் முழுக்க சென்னைத் தமிழில் குளித்தது போன்ற மனப்பிரமை.               ப.ரஞ்சித்துடன் இணைவதில் எப்போதுமே சந்தோஷ் நாராயனுக்கு தனிக்கொண்டாட்டம் தான்.பின்னணி இசையில் படம் முழுக்க பரவச மூட்டுகிறார். 

  கடந்த நூற்றாண்டின் எமெர்ஜென்சி காலகட்ட நிகழ்வுகளோடு கதைக் களம் அமைந்திருந்தாலும்,கௌரவப்பிரச்சனை கதையின் மூலக்கரு என்பதால்'சார்பட்டா'பரம்பரை கௌரவத்தை முழுமூச்சுடன் நிலை நாட்டுகிறது. 

  இடைவேளைக்குப்பின்னர் வரும் காட்சிகளில் இரைச்சலை சற்று குறைத்திருந்தால்,பரம்பரையின் கம்பீரம் கூடியிருக்கும்.மொத்த படப் பிடிப்பின் பெருமையையும் பிரம்மாண்டத்தையும்,ஜி.முரளி தட்டிக் கொண்டுபோகிறார்.

    திரையரங்குகளில் வெளிவரும் வாய்ப்பைப் பெற்றிந்ததால்,அபரிமித வரவேற்பைப்பெற்று,அதிக நாட்கள் அரங்கம் நிறைந்து சார்பட்டா பரம்பரை,மேலும் பலம்பெற்றிருக்கும்!. 

Tuesday, July 20, 2021

தமிழ்த் திரையில் இலக்கிய தூவல்கள்

    

    இலக்கியத்தில்,குறிப்பாக கவிதைகளில்,உவமைகளும் உருவங்களும், கவிஞரின் கற்பனைக்கும்,கவிதையின் அழகிற்கும்,பலம் சேர்க்கின்றன.  இது போன்று,உவமைகளையும் உருவகங்களையும் திரைப்படத் தலைப் புகளாகவும்,பாடல் வரிகளாகவும் சந்திக்கின்ற வேளையில்,அந்த தலைப் புகளும் பாடல்களுமே,ரசிகர்களை திரையரங்கிற்குள் வசியப் படுத்து கின்றன.

    உவமைகளை உள்ளடக்கிய திரைப்பட தலைப்புகளில்,கடந்த நூற்றாண் டின் ஐம்பதுகளின் இறுதியில் கே.சோமுவின் இயக்கத்தில் உருவான,ஒரு சிறப்பான தமிழ்ப் பழமொழியான'தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை'ன்தை,உவமையுடன் பொருள் கூறும் உன்னத திரைப் படமாகக் கருதலாம்.பின்னர் தமிழ் எழுத்தாளர்களில் தனிமுத்திரை பதித்த ஜெயகாந்தனின்'உன்னைப்போல் ஒருவன்'எனும் புதினம்,திரைப் படமானது.அதற்குப்பிறகு சிவாஜி கணேசன் நடித்து வெளியான 'என்னைப் போல் ஒருவன்'விக்ரமனின்'வானத்தைப் போல'எனும் உவமை சார்ந்த திரைப்படங்கள் வெளியாயின. 

   திரைப்படப் பாடல்களில் உவமை பலநேரம் வலம் வந்திருக்கிறது.  'அன்னையின் ஆணை' திரைப்படத்தில்'அன்னையைப்போல் ஒரு    தெய்வ மில்லை'{கவிஞர் க.மு.ஷெரிப்}எனும் மகத்தான பாடலும்,'பாச மலர்'திரைப்படத்தில்' மலர் களைப்போல் தங்கை உறங்குகிறாள்'  {கவிஞர் கண்ணதாசன்}என்ற  பாடலும்,பாவமன்னிப்பில் 'காலங்களில் அவள் வசந்தம்,என ருவகமாய்த் தொடங்கி அதன் இடையே வரும், 

'பால் போல் சிரிப்பதில் பிள்ளை;

பனிபோல் படர்வதில் கன்னி;

கண்போல் வளர்ப்பதில் அன்னை'{கவிஞர் கண்ணதாசன்}

  எனும் உவமைகளும் 'பாசம்' திரைப்படத்தில் P.B.ஸ்ரீனிவாஸ் எஸ்.ஜானகி குரல்களில் இனித்த

"மாலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் 

மயங்கிய ஒளியினைப் போலே 

மன மயக்கத்தை தந்தவள் நீயே'{கவிஞர் கண்ணதாசன்}

  எனும் இயற்கை போற்றும் உவமையும்,இந்த இயல்பான உவமைகளை பின்னுக்குத் தள்ளி நவீன உவமைகளை உள்ளடக்கிய கவிப்பேரரசுவின் வித்தியாசமான வரிகளைக் கொண்ட 'இந்தியன்' திரைப்படத்தில் ஹரிஹரன் ஹரிணி குரல்களில் நாம் கேட்டு ரசித்த 

டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா 

மெல்போர்ன் மலர்போல் மெல்லிய மகளா 

எனும் இசைப்புயல் ரஹ்மானின்  இசையில் மென்மையாய் மிதந்துவந்த  பாடலும் 

'ஐ'{I} திரைப்படத்தில் என்னோடு நீயிருந்தால் எனும் பாடலுக்கிடையே தோன்றும்

'தேங்காய்க்குள்ளே நீர்போலே, 

உன்னைத் தேக்கிவைப்பேனே' {கவிஞர் கபிலன்}

 எனும் வரிகளும் சேர்ந்து எல்லா காலக்கட்டங்களில் உவமையின் தனிச் சிறப்பினை திரைகானங்களாக வெளிப்படுத்தியுள்ளன  இங்கே குறிப்பிட் டவை மிகக்குறைந்த உதாரணங்களே! 

   உருவகப் பயன்பாட்டினை பொறுத்தவரை,தொழிலாளர் விரோத மனப் பான்மை கொண்ட,முதலாளித்துவத்தின் ஆணவப்போக்கினையும் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே நிலவும் பனிப்போரி னையும்,பகைத்திரையுடன் ஜெமினி ஸ்டுடியோஸ் தயாரித்த,'இரும்புத் திரை'படம் வெளிக்காட்டியது.

   பின்னர் ஸ்ரீதரின்'விடிவெள்ளி'முக்தா ஸ்ரீனிவாசனின்'பனித்திரை'& நிறைகுடம்'ஏ.பீம்சிங்கின்'பாசமலர்'கே.சங்கரின்'பணத்தோட்டம்'மற்றும் 'கலங்கரை விளக்கம்'பி.புல்லையாவின்'ஆசைமுகம்'கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த'இதயவீணை'ஆகிய திரைப்பங்கள் உருவகப் பின்னணியில்,தலைப்புகளை தருவித்தன.இயக்குனர்களில் தனித்தன் மை வாய்ந்த படைப்பாளியான கே.பாலச்சந்தரின்'நீர்க்குமிழி','நாணல்' 'புன்னகை''இருகோடுகள்'''நான்கு சுவர்கள்'விசுவின் 'மணல் கயிறு'  போன்ற  அனைத்து தலைப்புகளுமே ஆழ்ந்த அர்த்தத்தினை உள்ளடக்கி, அறிவு சார்ந்து நின்றன.   

 பாடல்களில் உருவகமாகப் பயணித்த 

காலங்களில் அவள் வசந்தம் 

கலைகளில் அவள் ஓவியம் 

மாதங்களில் அவள் மார்கழி 

மலர்களிலே அவள் மல்லிகை 

எனும் எழில்மிகுப் பாடலும் {பாவ மன்னிப்பு;கவிஞர் கண்ணதாசன் }

"வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் 

கடல்தான் எங்கள் வீடு" 

  எனும் மீனவர் வாழ்வின் சோகத்தை ஒற்றைவரியில் உருவகமாக வடித்துத்தந்த 'தரைமேல் பிறக்கவைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்கவிட்டான் பாடலும்'[படகோட்டி;கவிஞர் வாலி}

"அவள் ஒரு நவரச நாடகம் 

ஆனந்த கவிதையின் ஆலயம் 

தழுவிடும் இனங்களில் மானினம்" 

எனும் ஏகாந்த வரிகளும் {உலகம் சுற்றும் வாலிபன்;  கவிஞர் கண்ணதாசன் }

"தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே 

ஆழியிலே கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே" {சின்னத்தம்பி;  கவிஞர் வாலி } 

எனும் ஒய்யாரத் தாலாட்டும்,திரையிசை உருவகத் தேன்துளிகளில் ஒரு சிலவாம்!   

    திரைப்படப் பாடல்களில்,வருணனையின் விசாலத்தை கண்டு,விழி களை உயர்த்தி வியந்திருக்கிறோம்.உவமை,உருவகம்,இலக்கிய நயம் வருணனை எல்லாவற்றியையும் ஒன்றாகத்திரட்டி கவியரசு கண்ண தாசனின் கற்பனை விருட்சமாய் தழைத்து உயர்ந்து நின்ற,காலத்தால் அழிக்கமுடியாத பாடலே,மாலையிட்ட மங்கை திரைப்படத்தில் இடம்பெற்ற 

சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே

நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே

நின்றது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்

நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்

மணம் பெறுமோ வாழ்வே... ஆ... ஆ.ஆ.ஆ.ஆ.

செந்தமிழ் தேன் மொழியாள்

நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் 

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள்

காற்றினில் பிறந்தவளோ புதிதாய்

கற்பனை வடித்தவளோ

சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ

செவ்வந்திப் பூச்சரமோ

.........................................

கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்கு பெண்ணே பேராசை கொள்ளும்

பேரழகெல்லாம் படைத்தவளோ...

  எனும் தமிழ் மொழியின் தன்னிகரில்லா தேன்சுவையை அள்ளித்தந்த அகம் மகிழும் வரிகள்.டி.ஆர் மகாலிங்கம் தனது ஒப்பற்ற குரலில் பாட, இப்பாடலுக்கு மெல்லிசை மன்னர்கள் அழியாப்புகழ் தேடித் தந்தனர். இன்றைக்கும் இப்பாடலை விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் மேடையில் இளைஞர்கள் பாடக் கேட்பதில்தான் எத்தனை சுகம்!பல தலைமுறைகளை கடந்து நிற்கும் இப்பாடலை,இலக்கிய நயமும்,இசை யின் மகத்துவமும்,காலச் சக்கரத்தின் நிற்கா பயணமாக்கின. 

  இதேபோன்று ,'பாசமலர்'திரைப்படத்தின் காப்பியமாகிய''மலர்ந்தும் மலராத பாதி மலர்போ''பாடலுக்கு இடையே தோன்றும், 

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி 

நடந்த இளம் தென்றலே 

வளர்பொதிகை மலைதோன்றி மதுரை நகர்கண்டு 

பொலிந்த தமிழ் மன்றமே 

  எனும் அமரத்துவம் பெற்ற வரிகளும்,

'போலீஸ்காரன் மகள்'திரைப்படத்தில் எஸ்.ஜானகி P.B ஸ்ரீனிவாஸ்  குரல் களில், 

"இந்த மன்றத்தில் ஓடிவரும் 

இளம் தென்றலை கேட்கின்றேன் 

நீ சென்றிடும் வழியினிலே 

என் தெய்வத்தை காண்பாயோ" 

  எனும் அமுதத்தால் மனம் நிறைத்த பாடலும், எம்.ஜி.ஆரின்'கலங்கரை விளக்கம்' திரைப்படத்தில் கம்பீரமாக எழுந்த, 

"பொன்னெழில் பூத்தது புதுவானில் 

வெண்பனித் தூவும் நிலவே நில்" 

  எனும் மனதில் வேரூன்றிய வரிகளும் 'பயணங்கள்  முடிவதில்லை' திரைப்படத்தில் ஏகாந்தமாக ஒலித்த"இளைய நிலா எழுகிறதே இதயம் வரை நனைகிறதே"பாடலுக்கு நடுவே,இலக்கியத் தூவலாக இணைந்த,

"முகிலினங்கள் அலைகின்றதே 

முகவரிகள் தொலைந்தனவோ 

முகவரிகள் தொலைந்ததினால் 

அழுதிடுமோ அது மழையோ" 

எனும் விண்ணைத்தொடும் வரிகளும்,

  தமிழ்த்திரையின் திரைப்பூங்காவில் பூத்த வண்ணமிகு மலர்களாகக் கருதலாம்.இது போன்ற உருவகம் சார்ந்த எண்ணற்ற தமிழ்த்திரைப் பாடல்கள் உண்டு.எனவே இச்சிறு துளிகளை,பெரும் வெள்ளமாகக் காணலாம்.   

  மேற்கண்ட நான்கு பாடல்களில் முதல் இரண்டை  கவியரசு புனைய, 'கலங்கரை விளக்கம்'பாடலுக்கு பஞ்சு அருணாச்சலமும் 'பயணங்கள் முடிவதில்லை'பாடலை வைரமுத்துவும் இலக்கிய உணர்வோடு திரைக் கவிதையாக்கினர். 

   இலக்கியத்தில் படைப்பாளிகள் சிலநேரம் மனித உணர்வுகளையும் ஆற்றலையும் இயற்கைக்கோ,அல்லது உயிரற்ற,புலன்களுக்கு அப்பாற் பட்ட பொருட்களுக்கோ புகுத்தி,கற்பனையின் ஆதிக்கத்தில் களிப்புறுவ துண்டு.ஆங்கிலத்தில் இதனை 'Pathetic Fallacy'என்று கூறுவர்.

    அவ்வாறு  இலக்கிய கோட்பாட்டில் அமைந்த ஸ்ரீதரின்'இளமை ஊஞ்ச லாடுகிறது'கே.பாலச்சந்தரின்'தாமரை நெஞ்சம்'எஸ்.பி.முத்துராமனின் 'ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது'கே.ரெங்கராஜின்'பாடு நிலாவே' கே.பாக்கியராஜின் 'தாவணிக் கனவுகள்',ராஜிவ் மேனனின்'மின்சாரக் கனவு'பாரதிராஜாவின்'நாடோடித் தென்றல்'பேராசிரியர் ஏ.எஸ்.பிரகா சத்தின்'எச்சில் இரவுகள்'எஸ்.ஜெகதீசனின்'மேகத்துக்கும் தாகமுண்டு' கஸ்தூரி ராஜாவின்'வீரம் வெளஞ்ச மண்ணு''ராபர்ட் ராஜசேகரனின் 'சின்னப்பூவே மெல்லப் பேசு'மிஷ்கினின்'சித்திரம் பேசுதடி'ஸ்ரீதர் பிரசாத் தின்'அள்ளித் தந்த வானம்'போன்ற திரைப்பட தலைப்புகள் இலக்கிய தூவல்களாக,திரைத்துறைக்கு செழுமை சேர்த்தன. 

     இலக்கிய படைப்பாற்றலில் முரண்தொடை{ஆங்கிலத்தில் oxymoron}என்பது இன்னொரு முக்கிய வடிவாகும்.இரண்டு முரண்பட்ட கருத்துக் களை ஒன்று சேர்ப்பதையே முரண்தொடை என்பர்.இந்த வகையில் அமையப்பெற்ற திரைப்பட தலைப்புகளில்,ஏ பீம்சிங்கின் 'படிக்காத மேதை',தேவர் பிலிம்ஸின்'கன்னித்தாய்'கே.பாலச்சந்தரின்'நூல்வேலி' ராபர்ட் ராஜசேகரனின்'பாலைவனச் சோலை'கலைஞரின்'பாலைவன ரோஜாக்கள்'&'நீதிக்கு தண்டனை' I.V.சசியின்'பகலில் ஒரு இரவு'நடிகர் தியாகராஜன் தானே இயக்கி நடித்த'பூவுக்குள் பூகம்பம்' ஆபாவாணனின் 'ஊமை விழிகள்'மணிரத்னத்தின்'பகல் நிலவு''மௌன ராகம்' கமலின் 'உத்தம வில்லன்' ஆர்.அர்விந்தராஜ் இயக்கத்தில் உருவான,விஜயகாந் தின்'கருப்பு நிலா'ரகுவின் இயக்கத்தில் சுரேஷும் சுலக்க்ஷனாவும் இணைந்து நடித்த,'புத்திசாலி பைத்தியங்கள்'கே.பாக்கியராஜின்'மௌன கீதங்கள்'பாலாஜி மோகனின்'வாயைமூடி பேசவும்'ஆகியவற்றை பிரதான முரண்தொடை தலைப்புகளாகக் காணலாம். 

    இதுபோன்ற இக்கிய நயம்கொண்ட பல தலைப்புகளுக்கிடையே கவித்துவம் பெற்ற கே.விஜயனின்'தூரத்து இடி முழக்கம் 'T.ராஜேந்தரின் 'ஒருதலைராகம்'மணிவண்ணனின்'முதல் வசந்தம்'பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்''கடலோரக் கவிதைகள்'கே.பாக்யராஜின் 'சுவர் இல்லா சித்திரங்கள்'கலைஞரின்'பாடாத தேனீக்கள்'பாசிலினின்'கண்ணுக்குள் நிலவு'ராதா மோகனின்'அழகிய தீயே,'எழிலின்'மனம் கொத்தி பறவை' போன்ற அழகுக் கோர்வைகளும்  உண்டு.  

  அடுக்குத் தொடர்களும்,எதுகை மோனையும்,இரட்டைக்கிளவியும்  சிலேடை/இரட்டுற மொழிதலும்,என்றென்றும் தமிழ் மொழிக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் இலக்கிய தோரணங்களாகும்.அடுக்குத் தொடருக்கு உதாரணங்களாக"ஓ மானே மானே மானே உன்னைத்தானே"[வெள்ளை ரோஜா] "அன்ப சுமந்து சுமந்து"{பொன்னுமணி}"சின்ன சின்ன வண்ணக் குயில்,யாரை எண்ணி பாடுதம்மா"{மௌன ராகம்}"கண்ணும் கண்ணும் கொள்ளையடித் தால் காதலென்று அர்த்தம்"{திருடா திருடா} போன்ற பாடல்களை ஒருசில குறியீடுகளாகக் கொள்ளலாம்.திரைப்பட தலைப் புகளில் 'தண்ணீர் தண்ணீர்'' திருடா திருடா''அண்ணே அண்ணே''அன்பே அன்பே''ஓ மானே மானே'என்ற அடுக்குத் தொடர்களை கண்டிருக்கி றோம் .   

    எதுகை மோனைக்கு"ராஜா,வேறெங்கும் தூக்காதே கூஜா'{அக்கினி நட்சத்திரம்}'தில்லானா தில்லானா நீ திதித்க்கின்ற தேனா திக்கு திக்கு திக்கு தில்லானா"{முத்து}"ஒட்டகத்த கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கொ வட்டவட்ட போட்டுக்காரி"{ஜென்டில் மேன்}எனும் பாடல்களையும் சில எடுத்துக்காட்டலாகக் கருதலாம்.இதில்'வட்ட வட்ட'தில்லானா தில்லா னா'அடுக்குத் தொடருக்கும் உதாரணமாகின்.

  எதுகை மோனைக்கு   'பெற்ற மகனை விற்ற அன்னை''முத்து எங்கள் சொத்து' 'பெத்த மனம் பித்து''மண்ணுக்கேத்த பொண்ணு' 'விண்ணுக்கும் மண்ணுக்கும்''கண் சிவந்தால் மண் சிவக்கும்' 'கட்டிலா தொட்டிலா''வீட் டில எலி வெளியில புலி''மேகத்துக்கும் தாகமுண்டு'போன்ற பல போன்ற திரைப்படத் தலைப்புகளை சுட்டிக்காட்டலாம்.து போன்றஇன்னும் எத்தனையோ  தலைப்புகள் தமிழ்த்திரையில் உண்டு.

   இரட்டைக்கிளவிக்கு உதாரணமாக'சமய சஞ்சீவி' திரைப்படத்தில் கேட்ட "கம கமவென நறுமலர் மனம் வீசுதே" எனும் பாடலில்'கம கம'என்பதை இரட்டைக்கிளவி எனக் கொள்ளலாம்.மேலும் மிஸ்ஸியம்மா திரைப்படத் தில் ஏ.எம்.ராஜா பாடிய'பழகத்தெரிய வேணும்'என்ற பாடலுக்கிடையே வரும்"கடு கடுவென முகம் மாறுதல் கர்நாடக வழக்கமன்றோ"எனும் வரி யில் 'கடு கடு'எனும் சொற்கள் இரட்டைக்கிளவியாகும்.அதே போன்று'பல் லேலக்கா' பாடலுக்கிடையே இரட்டைக்கிளவி சார்ந்த பல சொற்களை கேட்கலாம்."தகிட தகிட தகிட தகிட தந்தானா"{சலங்கை ஒலி}எனும் பாட லில்'தகிட தகிட'எனும் இரட்டைக்கிளவி இருமுறை வருவதைக் காண லாம்                  

    இரட்டுற மொழிதலுக்கு உதாரணமாக'பாகப்பிரிவினை'திரைப்படத்தில் கேட்ட"பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளை யாரு?"எனும் டி.எம்.எஸ் குழுவினருடன் பாடிய  பாடலில் 'பிள்ளையார்' எனும் சொல் விநாயகக் கடவுளையும் ஏதேனும் ஒரு நபரையும் குறிக்கும் வகையில்  அமைந்திருந்தது.

  இரட்டுற மொழிதலின் இன்னும் சிறப்பான எடுத்துக்காட்டாக ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான'அன்னையும் பிதாவும்' திரைப்படத்தில் பி.சுசீலா மனமுருகி பாடிய'மலரும் மங்கையும் ஒரு ஜாதி' பாடலின் இடையே வரும் "ஒருக்காலும் இல்லை ஒரு காலும் இல்லை"எனும் வரி 'ஒருபோதும்' எனும் பொருளையும் ஒற்றைக்காலினையும்,அருமையாகக் குறிப்பிட்டது.இதில் முதல் பாடலை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் இரண்டாவதை கவியரசு கண்ணதாசனும் தங்களின் சொல்வன்மையால் புனைந்து, தமிழ்திரையிசைக்கு பெருமை சேர்த்தனர்.

  'வீர அபிமன்யு'திரைப்படத்தில் ஸ்ரீனிவாசும் பி.சுசீலாவும் சேர்ந்து ரம்யமாய் பாடிய 'பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்'எனும் பாடலின் இடையே தோன்றும் 'மலைத்தேன் என நான் மலைத்தேன்'என்ற    வரி மலைத் தேனையும்,வியப்பில் {மலைப்பில்} ஆழ்ந்தேன் எனும் கருத்தையும் இரு பொருளாகக்  கொண்டு,கண்ணதாசனின் இலக்கிய நயத்தையும் கவிதை  ஆற்றலையும் வெளிப்படுத்தியது.       

  இதே போன்று'முதல் மரியாதை' திரைப்படத்தில்"பூங்காற்று திரும்புமா" எனும் மலேஷியா வாசுதேவன்,எஸ் ஜானகி குரலில் ஒலித்த பாடலுக் கிடையே வரும்,"ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டுக்கு நான் பாட்டு பாடி,  சொல்லாத சோகத்தை சொன்னேனடி"எனும் வரியில் 'பாட்டுக்கு' எனும் சொல் பாடலையும்,ஒரு நபரின் போக்கினையும் {ஏதோ என் பாணியில் என்பதுபோல்}குறிப்பதா உணரலாம்.இப்பாடலை வைரமுத்து எழுதி யிருந்தார்.இதுபோல இன்னும் பல இரட்டுற மொழிதல் சொற்கள்  தமிழ்த்திரை காங்களில் ண்டு.  

   திரைப்படத் தலைப்புகளில் 'ஆடிப் பெருக்கு' என்பதில்'ஆடி'எனும் சொல் தமிழ் மாதத்தையும்'நடனம்'எனும் பொருளையும் தருவதுபோல,'காட்டு ரோஜா'எனும் தலைப்பில்'காட்டு'எனும் சொல் 'வனம்' மற்றும் 'காண்பி' எனும் இருபொருள் கூறுவதையும் காணலாம். 

    ஒன்றுக்கு மற்றொன்று பதிலாக அமையும் 'விடிஞ்சா கல்யாணம்' 'விடியும்வரை காத்திரு''போன்ற தலைப்களும்,ஒன்றுக்கு மற்றொன்று   எதிர்மறை விடையாக அமைந்த,'சொல்லத் துடிக்குது மனசு'எனும்  தலைப்பிற்கு'சொன்னால் தான் காதலா'போன்ற தலைப்புகளும்,ஒன்றின் விளைவாக மற்றொன்று அமைவது போல் A. பீம்சிங்கின் 'பார்த்தால் பசிதீரும்'கே.பாலச்சந்தரின் 'நினைத் தாலே இனிக்கும்'காளிதாசின் 'உன்னைக் கொடு என்னைத் தருவேன்' போன்றவைகளும் என்றென்றென் றும் நம் நினைவில் தங்குவதை,நாம் மறுப்பதற்கில்லை. 

   திரைப்பட பாடல்களுக்கு வரிகள் பிறப்பிப்பதும் திரைப்படத் தலைப் புக்கள் அமைப்பதும்,கருத்தரித்து,பெற்றடுத்து,பெயர்சூட்டும் தாய்மைக்கு ஒப்பான தென்றே கருதலாம்.எப்படி அவரவர் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் உரிமை பெற்றோர்களுக்குண்டோ,அதைப் போலவே,தாங்கள்  உருவாக்கும் பாடல்களுக்கு வரிகள் டிபதும்,திரைப் படங்களுக்கு தலைப்புகள் கொடுப்பதும்,சம்பந்தப்பட்ட  கவிஞர்களின்,தயாரிப்பாளர்  ளின் அல்லது இயக்குனர்ளின் உரிமையே!. 

    வழக்கமாக திரைக்கதைக்கும் தலைப்புகளுக்கும்,நாம் தொடர்பு படுத்தி யோசிப்பதில்லை.பொழுதுபோக்கை மட்டும் மனதில்கொண்டு திரைப் படங்கள் பார்ப்பதால் சலிப்பு ஏற்படுத்தாமல் இரண்டரை மணி நேரம் திரைக்கதை சம்பவங்கள் நர்ந்தால்,திருப்தியுடனும் மன நிறைவுடனும் நாம் திரை அரங்கத்தை விட்டு வெளியேறுகிறோம். 

   ஆனால்,திரைப்படத்தின் கதைக்கருவையும் தலைப்பையும்,தொடர்பு படுத்தி பார்க்க முனைவோருக்கு,தலைப்புகளும் தரம் காட்டும் குறியீடே! அந்த வகையில் சமீப காலங்களில்'குண்டக்கா முண்டக்கா'ஜிகர் தண்டா' 'ஜில் ஜங் ஜக்''ஜூங்கா' 'ஜருகண்டி''தகலடி''ஜிங்கிலி புங்கிலி கதவை திற'தில்லுக்கு துட்டு'போன்ற பல வித்தியாசமான தலைப்புகளைக்  கண்டு மிரண்டுபோன நமக்கு,திரைப்படத்  தலைப்புகளை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது.இருப்பினும்,திரைக்கருவை முறையாக நியாயப்படுத்தி நினைவுகூரும்'ஈரம்''சாட்டை''யாதுமாகி''ஏகன்'ஆண் தேவதை''அன்பிற்கினியாள்'போன்ற திரைப்பட தலைப்புகள் மனதிற்கு ஓரளவு ஆதரவு அளிக்கின்றன.  

ப.சந்திரசேகரன் . 

                                 +++++++++++++++++++0++++++++++++++++++

Saturday, July 10, 2021

MGR’s Elder Brother

  



   Cinema celebrates hierarchy and lenience.Pridhviraj kaboor's family hierarchy is one of the most remarkable reference books in the archives of  Bollywood.The hierarchy or lenience may be in the form of parents and children or brothers and sisters.Tamil Cinema has its glorious treasure house of parents,children and grand children,brothers and sisters,contributing their might independently for the growth and prosperity of the film industry. 

   Among siblings if we take the last century as a reference point for Tamil cinema,there were the TKS brothers who made both the stage and silver screen proud by their dramatic and dynamic,demonstration of acting skills.However,the proudest moments for Tamil Cinema were to have on its screens,the elder brother of a Tamil Nadu Chief Minister,who simultaneously ruled both politics and cinema.They were the modest but solid M.G.Chakrabani and his mighty younger brother MGR,who became the invincible crowd puller at the theatres for cinema and on the street stages,for shows of politics.

   M.G.Chakrabani and MGR were initially bound to the stage plays.However both of them were also able to step into the field of Tamil Cinema.Chakrabani's first film was as a police officer in Iru Sagothararkal,directed by Ellis.R.Dungan,an Irish American film maker,who had directed fourteen Tamil films,including Meera &Sakuntala of M.S.Subbulakshmi and MGR's famous film Mandhirikumari.Incidentally,Iru Sakotharrkal was the second film for MGR too,in a supporting role.Then the two brothers worked for films like Thamizhariyum Perumal,Sri Murugan and so on. 

  Chakrabani's first prominent role was as King Needhi Kethu,the father of princess Chinthamani {played by V.N.Janaki}in the film Aayiram Thalaivaangiya Abhoorva Chindamani,made by the Modern Theatres.Then came the film Abhimanyu in which MGR played the role of Arjuna and Chakrabani came as Balaraman.After this both the brothers acted in the most famous film Rajamukthi starring M.K.Thiagarja Baghavadhar and V.N.Janaki in lead roles.

  Chakrabani's next film with MGR was Marudhanaattu Ilavarasi in which MGR and V.N.Janaki played lead roles and Chakrabani doing a negative role as minister Dhurijeyan.The other negative roles he played in MGR films were Jenoa, Naam,En Thangai, Alibhabhavum Naarpadhu Thirudarkalum and his most unforgettable role play as a greedy and caste oriented man of wealth in Thai Magalukku Kattiya Thaali. In MGR'S block buster film Malaikallan,Chakarbani was seen as police inspector in association with T.S.Dorairaj as a constable,who provided the verbal comedy moments,by frequently irritating Chakrabani with silly questions and cheeky remarks.

  The closeness between the two brothers continued by their joint shows in quite a number of films.Chakrabani was MGR's father in Idhaya Veenai and Netru Inru Naalai and as the latter's father in law in Naalai Namadhe.In Mannadhi Mannan Chakrabani,played the role of Karikala Cholan and in Raja Desingu he appeared as Sultan of Delhi.He also did an important role in Raja Rajan.While Chakrabani was directed by MGR in Nadodi Mannan, the elder brother directed MGR's Arasakattalai. Nadodi Mannan made history as a silver jubilee film and earned huge profit at the box office.

  MGR and his elder brother shared their life time for the successful march of Tamil cinema,through their united efforts towards giving great films based on royal and social themes as well as family dramas.Chakrabani also did a few notable films like Mahamaya,Ponmudi,Kudumba Vilakku,Digambara Samiyaaar and Nalla Theerpu starring heroes like P.U Chinnappa,Narasimha Bharadhi,M.N.Nambiyar and Gemini Ganesan respectively.In Mahamaya, Chakrabani performed the role of Neelan,whose character is said to have been evolved from that of the illustrious Indian philosopher Kautilya.

  The voice of Chakrabani would at times resemble that of MGR but it always carried a sobre touch not reaching the dynamic voice vibration of his younger brother. However,his dialogue delivery was always very calculative and contexutally relevant to the sobre roles he played in most of the films.What was extraordinary about his acting was,the time space he would give to words,in rendering dialogues with exact thrust and accent on the words,meant to reach the audience with their intended meanings.

  MGR's magnificent popularity would have naturally made this sobre elder brother  stand behind his younger sibling and happily watch the latter's progressive career,as a mass hero and mass political leader,with a kind of hidden pride and joy. Nevertheless, Tamil cinema cannot afford to ignore the perfect and higly penetrating demonstarion of thespian skill of this elder sibling of MGR,who powerfully displayed his grip over his performance,both as a stage artist and film actor.

                                         ++++++++++++++++++++++++++++++  

    

Thursday, July 1, 2021

தமிழ்த்திரையில் ஒளியின் வீச்சு.

   கலைஞனின் உளியால்,கல்லில் ஒளி பிறக்கிறது.நற்சிந்தனைகளால் நெஞ்சில் தீபமேற்றிய நல்லுணர்வு தோன்றுகிறது. கவிஞனின் கற்பனை ஒளியேற்ற,பூட்டிய கதவுகள் திறக்கையில் ஊடுருவும் ஒளியென,மனமெ லாம் ஒளி ஊடுருவுகிறது. ஊக்கமும் படைப்பாற்றலும், இறைமைக்கு இணையாகும். எனவேதான் வள்ளுவர் ஊக்கமுடை மை ஒளி  ன்றும், ஊக்கமின்மை இழிவென்றும்,தனது 

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

   என்ற ஒப்பற்ற குறள் மூலம் உலகிற்கு உணர்த்தினார்.ஒளியே வாழ்வின் உற்சாகம்.இருள் சாபத்தின் வெளிப்பாடு. இக்கருத்தினை ஒட்டியே சில தமிழ்த் திரைப்பட தலைப்புகளும் திரையிசை வரிகளும் ஒளியின் மாட்சியினை உணர்வுபூர்வமாக்கின. 

  தமிழ்த் திரைப்படங்களில் பிரகாசித்த ஒளியினை'ஞான ஒளி''இருளும் ஒளியும்' 'ஒளி விளக்கு''ஒளி பிறந்தது'போன்ற சிறந்த தலைப்புகளாகக்  காணலாம்.திரைப்படத் தலைப்புகளைக் கடந்து மகாகவி பாரதி எழுதிய, 

"ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா 

உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா

களிபடைத்த மொழியினாய் வா வா வா 

கடுமை கொண்ட தோளினாய் வா வா வா" 

  எனும் எழுச்சிமிகுப் பாடலை,திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவரது உன்ன தக் குரலில் பாடியதைக் கேட்டு கேட்டு, நாம்நாம் பரவசத்தின் உச்சத்தைத் தொட்டிருக்கி றோம்.பின்னர் இதே பாடலை எம்.எல்.வசந்தகுமாரியும் ராதா ஜெயலக்ஷ்மியும்,'பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்'எனும் திரைப்படத்திற் காக ஜி.இராமநாதன் இசையில் பாடினர் எனபது,அதன் சுவையான தொடர்ச்சியாகும் 

   1959-ஆம் ஆண்டு கே.வி.ஸ்ரீனி வாசன் இயக்கத்தில் உருவான,'கண் திறந்தது'எனும் திரைப்படத்தின் தலைப்புப் பாடலாக ஒலித்த,சீர்காழி கோவிந்தராஜன் குழுவினருடன் பாடிய,குணம் செழிக்கும் பாடலான, 

"கண் திறந்தது; 

ஒளி பிறந்தது; 

இருளகன்றது! 

புதுவாழ்வு பெருவோமடா; 

நல்ல புத்தியாய் பிழைத்து என்றும் 

சத்தியத்தை காத்து நின்று, 

புதுவாழ்வு பெருவோமடா"

   எனும் வி.சீதாராமனின் கவிதை வரிகளுக்கு டி.ஆர்.ராஜகோபாலன் திவ்யமாய் இசைவடிவம் அளித்திருந்தார்.அறிவுக்கண் திறக்க,அற நெறி ஒளிவடிவாகி, நல்வாழ்வுக்கு தடம் பதிக்கும்,எனும் வாழ்வியல் சித்தாந் தத்தை சாறாக்கி,சுய உணர்வுகளை சுத்தீகரம் செய்த பாடலாகும் இது.  

  எதிர்காலத்தை எவருமே இருண்டதாக நினைத்துப் பார்ப்பதில்லை; அவ்வாறு நினைத்துப்பார்ப்பின் வாழ்க்கையில் பொருளில்லை. நம்பிக்கை நெஞ்சில் வைத்து வாழ்வோர்க்கு,எதிர்காலம் என்றும் ஒளி நிறைந்ததே.இதைத்தான்'பச்சை விளக்கு'திரைப்படத்தில் டி.எம்.எஸ் ஸின் கணீர் குரலில் ஒலித்த கவியரசின், 

"ஒளி மயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது 

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை என் காதில் விழுகிறது" 

  எனும் காலத்தால் அழிக்கமுடியாத கானம்,நெஞ்சில் ஆழமாய்ப் பதித்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் நாம் கேட்ட ஒப்பற்ற பல பாடல் களில் இதுவும் ஒன்றாகும்.

   கதிரவனின் ஒளி போற்றும் மண்ணில், உயிரினங்களின் உற்சாக ஒளி யாக என்றென்றும் விளங்குவது பெண்மையும் தாய்மையுமாம்.எனவே பெண்ணை ஒளியின்  உருவாக்கிப் பார்ப்பது,பெண்மைக்கு பெருமை சேர்ப்பதோடு நில்லாது,மண்ணில் வாழும் உயிர்களுக்கெல்லாம் கருவின் ஒளியே மூலம் என்பதை,காலம் நம் கண்முன்னே காட்சிப்பொருளாக்கு கிறது.இந்த அடிப்படையில்தான்,'ன்னிப் பெண்' திரைப்படத்திற்காக அவிநாசி மணி எழுதிய,ஒளியின் பிரகாசத்தை பெண்மையின் பேரிசை யாய் ஒலிக்கச் செய்த, 

"ஒளி பிறந்தபோது மண்ணில் உயிர்கள் பிறந்ததம்மா 

இங்கே நீ பிறந்த போது தெய்வம் நேரில் வந்ததம்மா" 

  எனும் மண் மணக்கும் பாடலாகும். என்றும் மறக்கவொண்ணா இப் பாடலை, டி.எம்.சௌந்தராஜனும் எல்.ஆர்.ஈஸ்வரியும் இணைந்து பாட, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வ நாதன் இனிதாய் ப்பாடலுக்கு  இசைத்தேன் கலந்தார். 

  பார்வையற்ற ஒருவருக்கு பெண்மையே காதலியாக, வாழ்க்கைத் துணையாக இருந்து,விளக்கின் தீபமென பார்வை தந்து,வழிகாட்டக் கூடும் என்று,இதமாய் இதயம் தொட்ட வரிகளே,கண்ணதாசன் எழுதி, வி.குமாரின் இசையில்,டி.எம்.எஸ் பாடிய, 

விளக்கே நீ கொண்ட ஒளி நானே 

விழியே நீ கண்ட நிழல் நானே 

எனும்,முக்தா V. சீனிவாசன் இயக்கத் தில் உருவான 'நிறைகுடம்' திரைப் படப் பாடலாகும்.

   கிட்டத்தட்ட'இருளும் ஒளியும்' திரைப்படத்திற்கு ஒப்பான ஒரு கருத் தினை பாடலாக வெளிப்படுத்தியது,மலையாள மொழியிலிருந்து ஒலிச் சேர்க்கை{dubbing} செய்யப்பட்ட 'தேவி' எனும் திரைப்படத்தில் , அன்றைய மலையாளத் திரையின் சூப்பர்ஸ்டார் பிரேம் நசீருக்காக டி.எம்.சௌந்த ராஜன் மிகவும் உருக்கமாய்ப் பாடிய,

"இருள் பாதி ஒளிபாதி கொடுத்தான் 

இறைவன் எதிலுமே சரிபாதி வைத்தான்" 

   எனும் பாடல்.பல்லடம் மாணிக்கம் வரிமைத்த ப்பாடலுக்கு,தட்சிணா மூர்த்தி மென்மையாய் இசையூட்டினார். 

  இருளைக்கீறி அழிக்கும் சக்தி ஒளிக்கு உண்டு என்பதை,மிக துல்லி யமாக வெளிப்படுத்தும் பாடல் ஒன்று அஜித் நடிப்பில் இந்தியிலும்{PINK} தமிழிலும் ஒரே நேரத்தில் தயாராகி திரைக்கு வந்த 'நேர்கொண்ட பார்வை' எனும் திரைப்படத்தில்,யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் கவிஞர் அமுதாதேவி எழுதி,Dhee பாடிய, 

"வானில் இருள் சூழும்போது

மின்னும் மின்னல் துணையே

நானும் நீயும் சேரும்போது

விடையாகிடுமே வாழ்வே.....

.......................................................

விதிகள் தாண்டி கடலில் ஆடும்

இருள்கள் கீரி ஒளிகள் பாயும்

நான் அந்த கதிராகிறேன்" 

  என்ற வரிகளால் நெஞ்சைக் கீறி பாய்ந்தது.நேர் கொண்ட பார்வையின் ஒளியில்,வன்மையும் தீமையும் பொசுங்கிக் கரியும் என்பதை,வித்தி யாசமான சொல்லாண்மையுடன் விளக்கியது இப்பாடல். 

  இறைவனின் ஆலயத்தில் ஏற்றும் நெய்விளக்கிலும்,மெழுகுவர்த்தியிலும் பளிச்சிடும் ஒளியில், இறைமையின் ஒளிப்பிழம்புக்களை ஆத் மார்த்த மாக காணப்பெறுகையில்,மனமுருகி நாம் மறு உலகத்திற்கு பிரவேசிப் பதுண்டு.இன்பமும் துன்மபும் நிறைந்த வாழ்வில்,நம்பிக்கை ஒளியில் இரண்டறக் கலந்து நன்மை நாடுவதே,மனித இயல்பாகும். துன்பம் நேர் கையில் கண்ணீரை இறைவனுடைய பாதத்தில் சமர்ப்பித்து,கருணை ஒளியினை யாசிப்பது,துவண்ட உணர்வுகளைத் துளிர்விடச் செய்யும். இதைத்தான்'ஒளிவிளக்கு'திரைப்படத்தில்,வாலி வரிவடிவம் கொடுக்க, மெல்லிசை மன்னர் இசையமைத்து,பி.சுசீலா மனமுருகிப் பாடிய, 

இறைவா உன் மாளிகையில்

எத்தனையோ மணி விளக்கு,

தலைவா உன் காலடியில்

என் நம்பிக்கையின் ஒளி விளக்கு,

  பாடல் உணர்த்துகிறது.இதே போன்றொரு கருத்தினைத்தான் 'கௌரவம்' திரைப்படத்தில் கவியரசு எழுதிய, 

"மெழுகுவர்த்தி எரிகின்றது

எதிர் காலம் தெரிகின்றது

புதிய பாதை வருகின்றது

புகழாரம் தருகின்றது ..."

   எனும் பாடல் வரிகள் நம்பிக்கையின் நாதமாய்,அமைதியாகவும் அழுத்த மாகவும்,டி.எம்.எஸ் குரலில் மனதோடு கலந்து,நம்மை மெய்மறக்கச் செய்தது.இப்பாடலுக்கும் மெல்லிசை மன்னரின் இதமான  இசையே, கேட்போரின் இதயத் துடிப்பானது.

   முடிவாக,ஒளி என்பது வெளிச்சம் மட்டுமல்ல; ஒளியே அறிவின் அடை யாளம் என்பதைத்தான்,

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்

வான்சுதை வண்ணம் கொளல்.

  எனும் வள்ளுவரின் மற்றொரு குறள் விளக்குகிறது.அதாவது அறிஞர்கள் சபையிலும், அறிவற்றோர் சபையிலும் சரியாக நடந்து கொள்ளத் தெரிந் தவன் அறிவொளி நிறைந்தவன் என்கிறார் வள்ளுவர்.ஒளி வீரத்தின் வீச்சு என்கிறது,புறநானூற்றுப் பாடலொன்றின் இறுதி வரிகளான, 

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்

களிறு றிந்து பெயர்தல் காளைக்கு கடனே! 

   இவ்வரிகளின் உட்பொருளாக நாம் அறிவது,ஒரு போர்வீரனின் வீரம் அவன் கையிலேந்தும் வாளின் ஒளியெனப் பிரகாசிக்கிறது என்பதாகும்.மொத்தத்தில், ஒளியின் ஊட்டம் அறிவாக,உரமாக,வீரமாக, நம்பிக்கை யாக,நன்மைகளாக,மனித வாழ்க்கையை வழிநடத்துகிறது என்பதே, வெளிச்சம் காட்டும் தெளிவான பாதையாகும் .

ப.சந்திரசேகரன்

                               ==============================