Friday, October 1, 2021

காதலில் விழுந்த தமிழ்த் திரை

 

"காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி 

ஓதுவார் தம்மை நன்னெறிக் குய்ப்பது

வேதம் நான்கிலும் மெய்ப்பொரு ளாவது

நாதன் எந்தன் நமச்சி வாயவே" 

    என்று மனமுருகப் பாடினார்,நாயன்மார் அறுபத்துமூவரில்,ரி  நால்வரில் ஒருவரான,திருஞான சம்பந்தர். 'திருச்சிற்றம்பலம்'எனும் சொல்லில் தான் எத்தனை அழகு.!உமையவளின் தாய்ப்பால் பருகிய ஞானசம்பந்தர் எம்பெருமான் சிவன்மீது கொண்ட,உயிருடன் ஒன்றிப் போன ஈர்ப்பினை காதலாக்கி,'அன்பே சிவமென்று'அற்புதமாய் உலகிற்கு உணர்த்தினார்.தேவாரப் பாடல்கள்,வேதம் நான்கின் மெய்ப்பொருளை உள்ளடக்கி உருவாகிட,அவையனைத்தும் நான்மறைக்கு இணையான வையே!

   இவ்வரிகளை பாடலாக 'திருவருட்ச் செல்வர்'திரைப்படத்தில் திருச்சி லோகநாதனின் மகன் டி.எல்.மகாராஜன் சிறுவனாய் இருக்கையில் பாடியதைக் கேட்டு,நாம் அனைவரும் மெய்சிலிர்த்திருப்போம். இப்பாட லுக்கு திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் தெய்வீகமாய் இசையமைத் திருந்தார்.  

   பற்றற்று இறைவனை,'சிக்கெனைப் பற்றினேன் எங்கெழுந்தருள்வது இனியே'எனும் மெய்ப்பொருள் இணைவதே இறைநெறி.இதே போன்று சுயநலம் அகற்றி,முழுமையாய் அன்பும் பரிவும் கொண்டு,தன்னை, தன் மனதை மற்றவர்க்கு,தரமுடன் அர்ப்பணித்து,ஆண் பெண் உறவில் இருமனம் இரண்டற இணைவதே,உன்னதக் காதலாம்.காதலை தலைப்பு களாகவும் கவிதை வரிகளாகவும் கொண்டாதுவதே,வெள்ளித் திரையில் விரிந்த விழாவாகும்.இதில் தமிழ்த்திரை வேறு எந்த மொழிக்கும் எப்போதும் சளைத்தது இல்லை.

   காதலுக்கு ஆலாபனை செய்த தலைப்புகளில்'காதல்''என்றென்றும் காதல்','ரம்பையின் காதல்'காதலன் 'கண்ணன் என் காதலன்,'காதல் மன்னன்''காதல்பரிசு','காதல் கோட்டை', 'காதல் வாகனம்','காதல் பறவைகள்', 'காதலிக்க நேரமில்லை','அந்தமான் காதலி''காதலில் விழுந்தேன்'  'காதலில் சொதப்புவது எப்படி','காதலே நிம்மதி', 'காதலா காதலா'போல இன்னும் எத்தனையோ விதவிதமான தலைப்புகளை,தமிழ்த்திரையில் பார்த்திருக்கிறோம்.  

  'பாதாள பைரவி' திரைப்படத்தில் கண்டசாலா இசையமைத்து பி. லீலா வுடன் சேர்ந்து பாடிய,"காதலே தெய்வீக காதலே"எனும் புனிதமான,காதல் வரிகளாய்த் தொடங்கி,தமிழ்திரையிசையில் கவிதை வரிகள்,காதல்  களத்தில் பல் வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியுள்ளன. 'சக்கரவர்த்தித் திருமகள்'திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக்குரலில்,

"காதலெனும் சோலையிலே ராதே ராதே,

நான் கண்டெடுத்த பொன் மயிலே ராதே ராதே"

 எனும் சுவையான பாடலொன்று, ஜி.ராமநாதன் இசையில்,கு.மா.பால சுப்ரமணியத்தின் கவிதையாய்,காதலை சோலையாக்கி களிப்புற்றது.

  "விழியில் விழுந்து இதயம் நனைந்து உயிரில் கலக்கும்" காதலை மறைப்பதும் மறப்பதும் கடினமே என்பதை,மனதில் பதியவைக்கும் பாடலே,சிவாஜி பத்மினி நடித்து,கலைஞர் வசனத்தில் உருவான 'ராஜா ராணி' திரைப்படத்தில் ஏ.எம்.ராஜா, ஜிக்கி குரல்களில் இதமாய் செவி களில் நுழைந்து நெஞ்சில் நிலைபெற்ற, 

திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலை 

தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ 

  எனும் உண்மை உள்ளடக்கிய பாடல்.ஏ.மருதகாசியின் இந்த அழகான வரிகளுக்கு டி ஆர் பாப்பா இனிமையாய் இசையமைத்திருந்தார்.  

  காதலில் விழுந்த தமிழ்த் திரையின் பயணத்தில்'கல்யாண பரிசு' திரைப்படத்தில்"காதலிலே தோல்வியுற்றான் காளை யொருவன்"/தோல்வியுற்றாள் கன்னியொருத்தி"என்று  பட்டுக்கோட்டை யார் எழுதி, ஏ.எம்.ராஜா இசையமைக்க, ஏ.எம்.ராஜா, பி.சுசீலா குரல்களில், சோகத்தில் ஊறிய பாடல்களில்,மனதை பறிகொடுத்தோம்.

  பின்னர்'பாதகாணிக்கை'திரைப் படத்தில் P.B ஸ்ரீனிவாஸ் J.P சந்திரபாபு குழுவினர் குரல்களில்"காதல் என்பது துவரை கல்யாண காலம் வரும் வரை"என்று காதலுக்கு காலவரையறை கொடுத்தமெல்லிசை மன்னர்கள் சையில் அமைந்த,கண்ணதாசனின் பாடலைக் கேட்டு,சிரித்தோம். 

 'சொல்லத்தான் நினைக்கிறேன்'என்று காதலை,சொல்லத் துடித்து சொல்லாமல் தோற்றுப்போனவர் பற்றியும்,அவர்கள் மத்தியில் 'சொன் னால் தான் காதலா'என்று விதண்டாவாதம் செய்வோரையும், திரைக்கதை நிகழ்வுகளில் பார்த்து காதலிக்காமல் போனவர்கள் எத்தனைபேரோ! 

"ச்சீ ச்சீ"என்று எட்டமுடியா பழத்தினை புளித்ததாகக் கூறும்  நரியின் நகைப்புக் கதையினைப்போல்,கிட்டாக் காதலை, கைக்கு எட்டா காதலை, 

காதல் கசக்குதயா

மனம்தான் லவ் லவ்வுன்னு அடிக்கும்

லவ்வுன்னுதான் துடிக்கும்

தோத்து போனா குடிக்கும்

பைத்தியம் புடிக்கும்

காதல் கசக்குதயா

வர வர காதல் கசக்குதயா!


யாராரோ காதலிச்சு

உருப்படல ஒண்ணும் சரிப்படல

வாழ்கையிலே என்றும் சுகப்படல

காதல்ல படம் எடுத்தா ஓடுமுங்க

தியேட்டரிலே ஜனம் கூடுமுங்க

தேவதாஸ் அவன் பார்வதி

அம்பிகாபதி அமராவதி

கதைய கேளு முடிவ பாரு

கடைசியில் சேராம..........

 என்று கரிசனமின்றி,கிண்டலடிப்பவரும் உண்டு.வாலியின் நகைச்சுவை ததும்பும் வரிகளுக்கு,இசைஞானி இளையராஜா மெட்டமைத்து தானே பாடிய வித்தியாசமான இப்பாடலை,பாண்டியராஜனின் முதல் இயக்கத் தில் உருவான 'ஆண்பாவம்'திரைப்படத்தில் கண்டு கேட்டு, குலுங்கி குலுங்கி சிரித்தோம்! 

  இவற்றையெல்லாம் மிஞ்சிய தேன்சுவைப் பாடலே,'பாலும் பழமும்' திரைப்படத்தில், பி.சுசீலா அனுபவித்துப் பாடிய, 

"காதல் சிறகை காற்றினில் விரித்து 

வான வீதியில் பறக்கவா 

கண்ணில் நிறைந்த கணவர் முன்னாலே 

கண்ணீர் கடலில் மிதக்கவா" 

என்ற எண்ணற்ற இதயங்களை கொள்ளையடித்த பாடல். 

   கண்ணதாசனின் ப்பாடலுக்கு, மெல்லிசை மன்னர்கள் சையமைத் திருந்தனர்.இவையனைத்துமே என்றும் இனிக்கும் திரையிசை காங் களாம். 

  காலத்தை நதியாக்கி அதில் காதலை படகாக்கி,தண்ணீரில் தத்தளிக்கும் படகுபோல காதலில் தவிப்போரின் சோகத்தை,ஓரிரண்டு அழாகான வரிகளில் கவியரசு கண்ணதாசன் வடித்த பாடலே, 

காலம் என்னும் நதியினிலே 

காதல் என்னும் படகு விட்டேன் 

மாலை வரை ஓட்டி வந்தேன் 

மறுகரைக்கு கூட்டி வந்தேன் 

  எனும் பி.சுசீலாவின் அமுதக்குரலில் நாம் பலமுறை கேட்டு மகிழ்ந்த பாடலாகும்.எம்.ஜி.ஆரும் சாவித்திரியும் இணைந்து நடித்து D.யோகா னந்தின் இயக்கத்தில் உருவான, 'பரிசு'திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலுக்கு,திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் மனம் நிறைந்து இசையமைத்திருந்தார். 

  காதலை பொன் வீதியாக்கி,அதில் காதல் வாகனமேறி,இலக்கியப் புரித லோடு காதல் உணர்வுகளை பகிர்ந்துகொள்ளும் காதலரும் உண்டு. அப்படிப்பட்ட அழகியக் காதலை, 'பூக்காரி'எனும் திரைப்படத்தில் கீழ்க்  காணும் கவிதை வரிகளாய், டி.எம்.சௌந்தராஜன் எஸ்.ஜானகி குரல்களில் கேட்டு பரவசமுற்றோம். 

"காதலின் பொன் வீதியில்

காதலன் பண் பாடினான்

பண்ணோடு அருகில் வந்தேன் நான்

கண்ணோடு உறவு கொண்டேன்

காதலின் பொன் வீதியில்

நானொரு பண்பாடினேன்

பண்ணோடு ஒருத்தி வந்தாள் என்

கண்ணோடு ஒருத்தி வந்தாள்'

  பஞ்சு அருணாசலத்தின் ந்தஅழகான வரிகளுக்கு,மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரம்யமாய் இசைமெருகூட்டினார். 

  மெய்மறந்து காதல் வயப்பட்டோரிடம், காதல் என்னவெல்லாம் எதிர் பார்க்கக்கூடும் என்பதை ஆழமாய் சித்தரித்த பாடலே, 'டூயட்'திரைப் படத்தில் எஸ்.பி.பி குரலில் நம் இதயங்களில் இனம்புரியா வலியைத் தோற்றுவித்த, 

என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
சிலுவைகள் சிறகுகள் ரெண்டில்
என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதை கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்
..............................................
காதலே நீ பூவெறிந்தால்
எந்த மலையும் கொஞ்சம் குழையும்
காதலே நீ கல்லெறிந்தால்
எந்தக் கடலும் கொஞ்சம் கலங்கும்
இனி மீழ்வதா, இல்லை வீழ்வதா
உயிர் வாழ்வதா, இல்லை போவதா
அமுதென்பதா விஷமென்பதா
உன்னை அமுத விஷமென்பதா
.......................................................
காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்
இது மாற்றமா தடுமாற்றமா
என் நெஞ்சிலே பனி மூட்டமா
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா.............................

   எனும் விரக்தியில் விளைந்த நரகவேதனையை,காதலின் வினைப் பயனாய் ஆழமான உணர்வுகளுடன் அழுத்தமாய் பிரதிபலித்த பாடல்.  இசைப்புயல் ரஹ்மானின் உள்ளம் கொள்ளையடிக்கும் ஆலமர இசை  நிழலில்,வைரமுத்துவின் வசந்த வரிகள் சோகத்தில் இளைப்பாறின. 

   காதலின் மையப்புள்ளியாய் என்றென்றும் விளங்குவது கண்களே யாகும்."கண்களின் வார்த்தைகள் புரியாதோ?"என்று கேட்பதும் 'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிட மண்ணில் ஆடவர்க்கு மாமலையும் ஒரு கடுகாம்'என்று நினைப்பதும்,கண்களால் கைது செய்யச் சொல்வதும்,காதல் வலையின் மாய லீலைகளாம். இதுபோன்றே, விழிக ளின் வட்டத்திற்குள் சுற்றிவந்த பலதிரைப்பட பாடல்கள் உண்டு. இந்த வகையில் விஜைய்யும்,பூமிகாவும் நடித்து வெளிவந்த 'பத்ரீ'திரைப் படத்தில்,பழனி பாரதி எழுதி,ஸ்ரீனிவாசும்,சுனிதா உபத்ரஷ்தா பாடிய, 

"காதல் சொல்வது உதடுகள் அல்ல

கண்கள் தான் தலைவா" 

  எனும் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்த பாடலும்,லிங்குசாமியின்'பையா' திரைப்படத்தில் அமரர் ந.முத்துக்குமாரின் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா தானே இசையளந்து,உயிர்கலந்து பாடிய, 

"என் காதல் சொல்ல நேரம் இல்லை

உன் காதல் சொல்ல தேவை இல்லை

நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை

உண்மை மறைத்தாலும் மறையாதடி …......

காதல் வந்தாலே கண்ணோடு தான்

கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ

கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

இந்த விளையாட்டை ரசித்தேனடி"

   எனும் அசத்தலான பாடலும், 'செல்லலமே'திரைப்படத்தில் கேகே, சின்மயீ,திம்மி,மஹத்தி இணைந்து,ஹாரிஸ் ஜெயராஜின் அதிவேக இசைக்கு ஆனந்தமாய் பாடிய, 

"காதலிக்கும் ஆசை இல்லை

கண்கள் உன்னை காணும் வரை

உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்

பட்டினத்தார் பாடல் மட்டும்

பாடம் செய்து ஒப்பித்தேன்

கண்ணே நான்

உன்னை காணும் முன்னால்"

  எனும் வைரமுத்துவின் வாலிப வேட்கை உணர்த்தும் வரிகளும்,காதல் கோட்டையின் கவின்மிகு முகப்புகளாகும். 

  காதலில் விழுந்த தமிழ்திரையின் அழியாத கோலங்களில் ஒருசில அழ கான வரைவுகள் மட்டுமே,இப்பதிவில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கின் றன.தமிழ்திரையிசை வரிகளில்'மனித காதலை வென்ற புனித காதல் வரிகள்'இன்னும் எத்தனையோ உண்டு. இவையனைத்துமே வரிகளின் வலிமையால்,இசையின் துடிப்பால்,இதயம் வென்று தமிழ்த்திரையின் பலத்தை பறைசாற்றுகின்றன!. 

ப.சந்திரசேகரன்

                                        ==============0================

 

      

Thursday, September 23, 2021

Gandhimathi,an actor of the rural Tamil soil



    


   Tamil cinema is gifted in several ways.Its proud film makers,its heroes,villains, comedians  character artists,music composers,singers and many others have all made the Tamil film industry hold its unique position in Indian cinema.Of these,the character artists are usually less glorified,may be due to the fact that they get dissipated in the character roles they play.Among women character artists,many have donned the role of mothers or as women of positive and negative vibes.This blog has already given considerable space for distinguished character artists of both genders.In this list, there is one less remembered,but more deserving woman who played quite a lot of character roles,especially the ones clinging her soul to the rural soil.She is late Gandhimathi,who is stated to have acted in about five hundred films.

  Gandhimadhi's first screen appearance was as a little girl of three years in the most famous AVM film Vehdhaala Ulagam released in 1948.Then after seventeen years,she appeared as Chandra,in Jaishankar's debut film Iravum Pagalum in 1965.In the Nineteen Sixties,she did roles in three other films like Kumari Penn,Adimai Penn and Thein Mazhai.She had acted in many Sivaji Ganesan films like Thangaikkaga,Raja,Pattikaadaa Pattanama,En Magan,Vaani Raani, Needhi, Engal Thangaraja,Savaale Samaali, Ponnoonjal, Anbe Aruyire,Thava Pudhalvan,and Dr.Siva.Besides Adimaipenn,the two other MGR films in which she had acted were,Netru Inru Naalai as a doctor and Ninaithathai Mudippavan as MGR's mother.{MGR played dual roles in the film and Gandhimadhi appeared as the mother of the smuggler that MGR potrayed with a negative tinge}.

  In most of the films mentioned above, Gandhimathi would have got only minor or moderate space for roleplay.It is the robust film maker Bharathiraja who in his very first film 'Padhinaaru Vayadhinile',gave her the solid role of a mother character.While Sridevi the daughter was gracefully named Mayilu,Gandhimadhi came as the most rustic Kuruvamma with her soul stuffed within the rural soil.Her role was that of a deserted wife and mother of a beautiful daughter of sixteen,with teenage vagaries. 

  'Padhinaaru vayadhinile' was a cult like village drama,that established the passionate film making credentials of Bharathiraja and enabled him to carry on his endearing journey with Tamil Cinema, by unfolding the umpteen dimesions of the rural grandeur of Tamil Nadu. Kuruvamma became a household rural name and Gandhimathi the unflinching actress,turned visible to all,with her spontaneous acting skill.

  After this Gandhimathi became Karuthamma in Bharathiraja's next film Kizhakke Pogum Rayil playing the role of the elder sister of Radhika,the debut heroine of the film.One of the deeper layers of the storyline was the plight of Gandhimathi in struggling to save her younger sister from the voluptuous waywardness of her husband {unforgettably played by Goundamani}. Gandhimadhi was again seen in Bharathiraja's film Manvaasanai as Ochaayee.She was called Ponnazhagi in Visu's Chidhambara Ragasiyam and Poongavanam in Rajini's Muthu{which was another memorable role for her,as a drama artist}.

  Gandhimathi like Vadivukkarasi was convincingly made a character artist donning elderly roles representing sister and mother characters.She began to don mother roles for many heroes like Prabu,Sathyaraj, Vijayajanth,Karthik Muthuraman,Sarath Kumar and Ramarajan.For a rural hero like Ramarajan she became an exemplary elder of the families bound to traditional values of the village routine,in Tamil Nadu.

  Her most notable films with these heroes were,Chinna Thambi Periya Thambi, Kumbakarai Thangaiah,Malluvetti Minor,Walter Vetrivel,Thirumathi Pazhani Chaami,Manickam Namma Ooru PaatuKaaran,Ninaive Oer Sangeedham, Therkathi Kallan, Thavasi, Namma Annachi, Thangamaana Rasa, Karagaattakaaran,and Vivasaayee Magan.She had also acted in Sridhar's Thendrale Ennai Thodu,Balu Mahendra's Moodu Pani and T.Rajendar's Uyirullavarai Usah&Uravai Kaatha Kili.

   What is distinct about Gandhimadhi's manner of acting was her expertise in delivering Tamil rural slang with extreme sense of compatibility and emotional proximity to the soil.There was an inherent element of love and affection,beautifully blended to her utterance of dialogues so as to make everyone feel that she is an elder woman closest to their heart. She was always true to her acting mode.It was the essence of truth embedded in her genuine absorption of character intricacies,that made her a very homely person on the big screen.

   Gandhimadhi could be added to the list of the  most favoured actresses to play the leading lady of a joint family in any village,with poise and perfection. At times she was loud mouthed and at times in absolute peace with her tone,by which she made herself an estimable elder of the home, that was shown as the scene of action,in any film.If all film makers had utilised her talent as Bharathuraja did, this woman from Manamadhurai in Tamil Nadu,would have seen the limelight like Achi Manorana.Lack of vital opportunities quiten makes very talented persons,to become under privileged and pass away less utilized.Gandhimathi was once such artist,who could have been given greater space in Tamil cinema.This post is a sincere dedication to that great actress, who passed away pathetically as a cancer victim,in the month of September,ten years ago.

                                  ==============0================

Wednesday, September 15, 2021

Musically more deserving men of Tamil cinema.




   














   


   Tamil Cinema has had its long time singers like TMS,Seerkazhi Govindarajan,P.B.Srinivas,  K.J Yesudas,S.B.Balasubramanyam,P.Suseela,S.Janaki and L.R.Eswari.These singers' immortal innings,also included the vast number of songs they had sung.While SPB's songs would have outnumbered those of his male counterparrts,the songs of P.Suseela and S.Janaki would have been more than those of L.R.Eswari. During the days of TMS and P.Suseela there were also other singers like Tiruchi Loganathan, C.S.Jeyaraman,S.C.Krishnan,P.Leela, M.L.Vasanthakumari Jamuna Rani,A.P.Komala,M.S.Rajeswari,Rathnamala and the Soolamangalam sisters.They have all rendered beautiful numbers and added glory to Tamil Cinema.

  Today,we have a huge line of young voices  moving ahead to find a competitive place as playback singers in the tinsel world. However,from the middle or fag end of the last century,we have seen a sizeable number of singers,who with their brief or intermittent stints,have left memorable songs not many in number,but great to remember.

  There was a  singer of amazing musical substance called G.K.Venkatesh,who has left a few beautiful songs like'Villendhum veeranellaam'{Gulebaghavali}'Nilai Maarinaal Gunam Maaaruvaan Poi Needhiyum Nermaiyum pesuvaan manidhan maarivittan'{Paava Mannipu} 'Sondhamumille Bandhamumille'{Halo Mister Zamindar}'Kaalam Seidha komaalithanathil Ulakam Pirandhadhu'{Padithaal Mattum Pothuma}and 'Azhivadhu Pol Thonrum'{Veera Thirumakan].He had a mellifluous tone to make his rendition soothing and intoxicating. G.K.Venkatesh had composed songs primarily for Kannada films.But the important Tamil films that went under his musical composition were,Sabadham{'Thoduvedhenna Thendralo Malargalo' was one of the earliest hits of SPB},Naanum Manidhan thaan,Yaarukkum Vetkamillai,Ponnukku Thanga Manasu{The song 'Thein Sindhuthe Vaanam' is a timeless meldy from this film}and Kannil Theriyum Kadhaikal.

   Who can forget the one beautiful duet song 'Kaana Inbam Kanidhadheno'melodiously sung by T.A.Modhi with P.Suseela,for the rib tickling comedy film Sabash Meena.T.A.Modhi gave his voice for Sivaji Ganesan for that song and P.Suseela's female voice was meant for Malini,who was paired with Sivaji Ganesan in that movie.The song was like a ripple free stream and got stuck to our memory.T.A.Modhi's other memorable duet song was 'Nilaavile Ullaasamaaka Aadalaam'for the other Sivaji hit Manohara.He sang this duet number with T.V.Rathnam

   There were two other singers by name Tharapuram Sundarajan and Kovai Soundarajan. Tharapuram Soundarajan's songs like'Enakaagavaa Naan Unakkaagava'sung with Jamuna  Rani for the film Selvam,'Ayyanaaru neranja Vaazhvu'with P.Suseela for Kaaval Dheivam, 'Jambulingame Jadaadhara'sung with Kovai Soundarajan and Veeramani for Kaasedhaan Kadavuladaa and 'Thanga Mani Paingiliyum'with Veeramani in Sivandha Mann are still remembered.Similarly,besides Jambulingame Jadaadharaa, Kovai Soundarajan's other song'Mella Pesungal Pirar Ketkakoodaadhu'sung with L.R.Eswari for Kasedhaan Kadavulada can be always heard in our memory track.

  Kovai Soundarajan has sung other songs like 'Sonne Poppadi Sona Poppadi with TMS,'Uppai Thinnavan Thanni Kudikkanum'with M.S.Viwanathan and'Engaladhu Bhoomi'with T.M.S, P.Suseela and Veeramani for the films, En Magan,Oru Kodiyil Iru Malarkal and Needhi which are all  remarkable musical entries.Both Tharapuram Sundarajan and Kovai Soundarajan were small time singers during the Nineteen Seventies and Eighties.

   Manickavinayagam an outstanding folkmusic specialist and playback singer,holds the proud position of being the son of dancer Vazhuvoor Ramaiah Pillai and the nephew of last century's singular voice mould singer,C.S.Jeyaraman,who was also his music mentor.He is both a singer and actor.With his gripping and churning voice fabric,he has sung exceptional songs like'Kannuk kulla Keluthi'{Dhil}'Koduva Meesa'{Dhool}'Subbamma Subbamma Suluru Subbamma'{Roja Koottam}'Kattu Kattu Keera Kattu'{Thiruppachi}'Naane Indhiran'{Singam}and a few more captivating numbers.He has also been a composed actor,with imprinting role play in a score of films,of which Thiruda Thirudi,Gambeeram, Perazhagan,Bose,Giri,Thimiru and Vettaikkaran need a significant mention.He has also been an occasional assessor of the performance of buddding singers,at the Vijay Supersinger programme.His contribution to Tamil Cinema is full of sheen and striking vigour.  

   There is another beautiful Malayalam singer called Jolly Abraham,who has sung a few memorable Tamil songs such as 'Aahaa Manmadhan Ratchikkanam Indha Mangaiyar Kaalai kalai'{Oru Thalai Raagam}'Adiyenai Paarammaa Pidivaadham Yenamma'{Vanakkathirkuriya Kaadhaliye}and 'Nadikai Paarkum Naadakam'{Oru Nadikai Naadakam Paarkiraal}.He has also sung for other Tamil films like Ore Vaanam Ore Bhoomi,Dheiva Thirumagal and Katta Panchayathu besides making a guest appearance in the film Kilinjalkal.

  One of the most outstanding musical voices has been that of S.N.Surender whose contribution to Tamil Cinema as a dubbing artist,deserves a dignified recogntition.He has provided his scintillating voice mould for a lot of films of the silver jubilee hero Mohan,whose success point coexisted with the appealing delivery of dialogues,by Surender.Besides for Mohan,S.N.Surender has lent his voice for other heroes like Pratap Pothan{Nenjathai Killaadhe &Manaivi Ready Vijayakanth{Sattam oru Iruttarai &Saatchi}Karthik Muthuraman{Alaikal Oivadhillai&Paadum Paravaikal}Srinath {Rayil Payanangalil} Arjun{Vesham}Rehman{Nilave Malare &Vasantha Ragam}Nedumudi Venu {Anniyan} Kannan {Kaadhal Oviyam}Vijay Babu{Padikkadhavan}and a few more actors.As far as singing is concerned,he has sung a number of songs with other male singers.

   However,some of his duet numbers with S.Janaki,K.S.Chithra,Sujatha and Swarnalatha need a special mention.His sweetest songs with S.Janaki were'Thanimaiyile Oru Ragam'{Sattam Oru Iruttarai}and'Devan Koil,Dheepam Enrum'{Naan Paadum Paadal}.With K.S.Chitra his most notable song was''Paarijaadha Poove' {En Raasaavin Manasile}and with Sujatha'Jalakku Jalakku'{Enrenrum Kadhal}.He has also sung a few songs with Vani Jeyaram and S.P.Shalaja.In addition to dubbing and singing,Surender has acted in films like Naalaya Theerpu, Priyamudan, Chennai 600028 I and II.Though he has received the Kalimaamani award,a louder ovation is due to him.

  T.L.Maharajan and Deepan Chakravarthi the two sons of yesteryear's famous singer Tiruchi Loganathan,have displayed the power of their singing voice in many tamil films,with absolute throw and felicity in their singing.The senior who started his musical career as a boy singer,in AP Nagarajan's Thiruvarutchelvar with the songs 'Kaadhalaaki Kasindhu' &'Sadhuram Marain dhaal',continued to pour the spiritual fervour of his tender but far reaching throat, in films like Thirumaal Perumai and Dasaavadhaaram{made by K.S.Gopalakrishnan}and captured the imagination of the music lovers.

  Later,as a male playback singer his best were 'Sevvaaname Ponmegame'sung in accompaniment with Jyachandran and Kalyani Menon for the Sivaji Ganesan film'Nallodhoru Kudumbam'and the most energetic 'Andhimazhai Megam 'song from 'Nayagan'with P.Suseela.Most of his songs were with other male singers like TMS,Maleshiya Vasudevan and Mano.His high sounding voice like that of his father could have been used independently,for many solo and duet songs.

    When anyone thinks of the film 'Nizhalkal',along with the actor Ravi,the mesmersing song "Poongadhave Thaal Thiravaai" will spontaneously knock at out memory doors with its magical wand. Such a sweet song it was,neatly sung by Deepan Chakravarthi with the female voice Uma Ramanan. His other duet with Uma Ramanan was for the song 'Disco Sangeedhamthaan' {Nambinaal Nambungal}.But his full throated voice conquered the mood of the audience with the title song "Jaggiradha Jaagiradha Chinnaveedu Jaagiradha"of the Bhagyaraj film'Chinna Veedu'.This vigorous song was heard outside the theatres for long.His two other well remembered songs are 'Anne Anne' {Kozhi Koovudhu}and"Oru Dhevaidhai Poloru Penningu Vandhadhu Inru"{Gopura Vaasalile} sung with other male voices. Like T.L.Maharajan,the unblemished voice of Deepan Chakravarthi,beautifully merged with the voices of many male singers like SPB,Mano, S.N.Surendar and several others. .

  Small screen's Sabdha Swarangal fame A.V.Ramanan,has a captivating voice that has rendered songs like Netroru Menagai{Manmadha Leelai}and En Chella Peru{Pokkiri}sung with Sujatha. He has also acted in films like Chatriyan,Ennavale,Boys and Madhurey besides composing music for a couple of films.His musical voice infuses itself into his vocal interactions with people adding a distinct pep to words delivered by him,as conversation and as dialogues on the small screen and  in films.. 

   The latest in this list of meritorious singers has been  Arun Mozhi,with his vibrantly masculine voice.This lovely voice seems to have found a special place in the films of Parthipan,like Pondaatti Thevai,Thalaattu Paadavaa{'Needhaanaa Needhaanaa Nenje Needhaanaa','Vennilavukku Vaanatha Pidikkalaiyaa' and 'Varaadhu vandha Naayagan'were all with S.Janaki and were special songs meant for repeated humming }Pullakuttikaaran,Bharathi Kannamma {'Thenralukku Theriyumaa Themmaangu Paattu'with K.S.Chitra}Nee Varuvaai Ena{'Poonguyil Paattu Pidichirukkaa'with K.S.Chitra}and Ivan.His other two most endearing songs were "Malliga Mottu Manasa thottu"with Swarnalatha for the film'Sakthivel'and "Velli Kolusumani" with K.S.Chitra,for the film'Pongivarum Kaveri'.Arunmuzhi is an exceptional singer whose singing mould gets enriched whenever he sings under the musical composition of Ilayaraja, the prophet of music.The songs that I have listed here are only a few samples of the musical dynamism of Arumozhi. 

  The new generation is witnessing a huge galaxy of musical talents.Days are going to be more and more competitive,in giving each one the place they deserve.The more the talented,the more ticklish the situation is going to be.But this post of the blog writer,has picked up the names of a few singers,who have been in the field of Tamil Cinema for quite a long time and shown their mettle.Unfortunately,most of them have not been given frequent chances for independent contribution even in duet songs.Their voice calbre has waded through the musical waves of other prominent singers,in the form of group songs.The purpose of this post is just to highlight the fact that these musically enriched voices are more deserving ones in Tamil cinema,than they are supposed to be.Let us place them all in their deserving spotlight.

                                          ============0=============




Thursday, September 9, 2021

காலம் வென்ற கவிதைப்பித்தன்


 

  

  "கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி''எனும்'ஜெயம்'திரைப் படத்தில் இடம்பெற்ற இதமான பாடலை,பலரும் கேட்டு ரசித்திருக்கக் கூடும்.கவிதையைக் கனவாகவும்,கனவிலும் கவிதையை நேசித்தும், தங்களின் இதயத்துடிப்பு ஒவ்வொன்றும் கவிதைக்கே அர்ப்பணம் என்று வாழ்ந்த கவிஞர்கள் பலர்.

    தமிழ்த்திரைப்படத்துறையில் கற்பனையால்,கவிதையால் சிகரம் கண்ட,அ.மருதகாசி,கு.மா.பாலசுப்ரமணியன்,ஆலங்குடி சோமு,தஞ்சை ராமையாதாஸ்,பாபநாசம் சிவன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  கவியரசு கண்ணதாசன்,வாலி,வைரமுத்து,நா.முத்துக்குமார்,பா.விஜய் போன்ற எண்ணற்ற கவிஞர்கள் மத்தியிலே,கவிதைப்பித்தனாய் வாழ்ந்த வர்தான்,நேற்று இயற்கை எய்திய புலமைப்பித்தன் அவர்கள்.அவர் கவிதைகளில் காதல்,வீரம் தன்னம்பிக்கை,அறிவுரைச்  சிந்தனைகள், இப்படி பலவகையில் சொற்கள் சுந்தர தாண்டவமாடின என்பதில், எவருக்கும் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

  'குடியிருந்த கோயில்'திரைப்படத்தில் இடம்பெற்ற"நான் யார் நீ யார் நாலும் தெரிந்தவன் யார் யார "பாடல் முதல்'அரிமா நம்பி' போன்ற எத்தனையோ திரைப்படங்களுக்கு அவர் எழுதிய எண்ணற்ற  பாடல்கள், இசையுடன் சங்கமித்து,நினைவுச் சின்னங்களாக வரிகளால் என்றென் றும் ரசிகர்களின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும்.   

   பட்டுக்கோட்டையார் போல,புலமைப்பித்தனின் அறிவுரைப் பாடல் களான, 

 1}சிரித்து வாழ வேண்டும்

 பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே

உழைத்து வாழவேண்டும் 

பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே {உலகம் சுற்றும் வாலிபன்}

2}உன்னால் முடியும் தம்பி தம்பி 

உனக்குள் இருக்கும் உன்னை நம்பி 

3}அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா 

ஆகாச பார்வை என்ன சொல்லு ராசா {உன்னால் முடியும் தம்பி}

4}ஓடி ஓடி உழைக்கணும் 

ஊருக்கெல்லாம் கொடுக்கணும் 

ஆடி ஆடி நடக்கணும் 

அன்பை நாளும் வளர்க்கணும் {நல்ல நேரம்}

5}ஒன்றே குலமென்று பாடுவோம்

ஒருவனே தேவனென்று போற்றுவோம் {பல்லாண்டு வாழ்க }

  போன்ற  அனைத்துமே கருத்துக் செறிவாலும் சொல்லாண்மையாலும், சிரசேறிய அற்புத கவிதை பொக்கிஷங்களாகும்.சிலேடைக்கு எடுத்துக் காட்டாக 'சிவகாமியின் செல்வன்' திரைப்படத்தில் அவர் அழகுடன் வடித்த,

 இனியவளே என்று பாடவந்தேன் 

இனி அவள்தான் என்று ஆகிவிட்டேன் 

  என்பது ஒரு இணையில்லா இலக்கிய தூவலாகும். ஒரே சொல்லை வைத்து,வரிக்கு வரி வித்தை காட்டிய'யார்'எனும் சொல் கரைபுரண்டோ டிய"நான் யார் நீ யார்"பாடலும்,'லா'எனும் ஒற்றைச் சொல்லால் உள்ளங் களை கிரங்கச் செய்த, 

கல்யாண தேனிலா 

காய்ச்சாத பால் நிலா {மௌனம் சம்மதம் } 

  பாடலும் "சித்தமெல்லாம் எனக்கும் சிவமயமே" என்பது போன்று,சொல் பித்தாகி 'சித்தமெல்லாம் எனக்கு சொல் மயமே' என்ற நிலைக்கு சொற் கடலில் முத்துக்குளித்த புலமைப்பித்தனுக்கு,விருதுகளும் அரசவைக் கவிஞர் கௌரவமும்,மிகச் சிறிய அங்கீகாரங்களே!   

   'கல்யாண தேனிலா'பாடலில்கூட,இரட்டுற மொழிதலுக்கு உதாரணமாக, 

நீதானே வான் நிலா 

என்னோடு வா நிலா 

  என்ற வரிகளைக்கூறலாம்.இப்பாடல் குறித்து ஜெயா தொலைக்காட்சி யில் பாடகர் மனோவுடன் நடந்த நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில், புலமைப்பித்தன் அவர்கள் பேசுகையில்,ஒரு பெண் ரசிகை இநத பாடலின் இடையே தோன்றும்,

உன் பார்வை தூண்டிலா 

நான் கைதி கூண்டிலா 

   எனும் வரிகளால்,தன்னைப்போன்று பலரும் கவிஞரிடம் வசியமாகி விட்டதாகச் சொன்னதை,சிரித்துக்கொண்டே நினைவுகூர்ந்தார்.

நளினமும் ரம்யமும் கூட்டும் சொற்களை உள்ளடக்கிய, 

1}ஆயிரம் நிலவேவா 

ஓராயிரம் நிலவேவா 

இதழோரம் சுவை தேட 

புதுப் பாடல் விழி பாட பாட{அடிமைப்பெண்}

2}எங்கே அவள் என்றே மனம்

தேடுதே ஆவலால் ஓடிவா

அங்கே வரும் என் பாடலைக்

கேட்டதும் கண்களே பாடிவா {குமரிக்கோட்டம்}

3}பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த

ஊர்வலம் நடக்கின்றது {நினைத்ததை முடிப்பவன்}

4}இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்தி பூவில் 

தொட்டிலை கட்டிவைத்தேன்{நீதிக்கு தலைவணங்கு}

5}தென்றலில் ஆடும் கூந்தலில் கண்டேன் 

மழைக்கொண்ட மேகம்{மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்} 

  போன்ற புலமைப்பித்தனின் பாடல்கள் பலவும் எம்.ஜி.ஆரின் திரைப் படங்களில் இடம்பெற்றவை ஆகும்.இப்பாடல்கள் போல் பலவும்,தமிழ் மொழிக்கே தனிப்பெருமை கூட்டிடும் என்பதை ,செவிகளில் விழும் அழகான சொற்களே நிலைநாட்டும்!  

    காதலும் பெண்மையும் கவின்மிகு சொற்களும்,புலமைப்பித்தனுக்கு கங்கைக்கரை காற்றே!.

பாடும்போதுநான் தென்றல் காற்று 

பருவ மங்கையோ தென்னங்கீற்று {நேற்று இன்று நாளை }பாடலிலும்,

 ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ

 ராஜசுகம் தேடிவர தூதுவிடும் கண்ணோ {தங்க மகன் }

  பாடலிலும்,கற்பனையின் கம்பீரத்தாலும் சொல் நயத்தாலும்,அவர் காதலில் களிப்புற்றதை நம்மால் உணர முடிந்தது. 

  எதுகை மோனைக்கு ஆலாபனை செய்யும் விதமாக அமைந்திருந்த புலமைப் பித்தனின் பல பாடல்களில்,முக்கியமான இரண்டை குறிப்பிட் டாகவேண்டும். முதலாவதாக,'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலான, 

உச்சி வகுடெடுத்து 

பிச்சிப்பூ வசக்கிளி 

பச்சைமலை பக்கத்துல

மேயுதுன்னு சொன்னாங்க 

 எனும் சந்தத்தேனில் குளித்த சொற்களும்,'உன்னால் முடியும் தம்பி' திரைப் படத்தில் கேட்டு ரசித்த, 

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பொங்கி வரும் கங்கை உண்டு

பஞ்சம் மட்டும் இன்னும்

இங்கு மாறவில்லே

எங்க பாரதத்தின்

சோத்துச் சண்டை தீரவில்லே 

  எனும் சொல்வளமையால் வறுமையை சந்ததிற்கு சொந்தமாக்கிய வரிகளும்,என்றும் நினைவில் போற்றத்தக்கவையாகும்.  

   முடிவாக,மணிரத்னமும் கமலும் இணைந்து தமிழ்த்திரைப்பட வரலாற்றுப் பாதையில் மைல்கல் பதித்த 'நாயகன்'திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் புலமைப்பித்தன் எழுதினார் என்பதும், அப்பாடல்கள் அனைத்துமே என்றென்றும் காலப்பெட்டகத்தில் நிலைத் திருக்கும் என்பதும்,காலம் வென்ற க்கவிஞரின் தனிச்சிறப்பாகும்'நாயகன்'திரைப்படத்தில் வரும்'நான் சிரித்தால் தீபாவளி நாளும் இங்கே ஏகாதிசி,''நிலா அது வானுக்கு மேலே''அந்தி மழை மேகம்''நீ ஒரு காதல் சங்கீதம்'எனும் நான்கு பாடல்களுக்கும் மகுடம் சூட்டியது போல ,

 தென்பாண்டிச் சீமையிலே 

தேரோடும் வீதிவியிலே 

வான்போல வந்தவனே 

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

யாரடிச்சாரோ யாரடிச்சாரோ 

வளரும் பிறையே தேயாதே

இனியும் அழுது தேம்பாதே

அழுதா மனசு தாங்காதே

அழுதா மனசு தாங்காதே 

    எனும் அழுத்தமான வரிகளை இளையராஜாவின் கனமான குரலில்  கேட்கும் போதெல்லாம்,காலம்வென்ற பித்தனின் புலமை ஆற்றலும் கவிதைகளின் தாக்கமும்,நளினங்களாக,நயமாக,வளமாக,வலிகளாக தமிழ் மொழியின்பால் மாறா பற்றுக்கொண்ட அனைவரின் மனக்கதவு களை சொற்களால்,சந்தங்களால்,சத்தான கருத்துக்களால்,இடைவிடாது தட்டிக் கொண்டே இருக்கும்.மரணம் உடலை கொண்டு சென்றாலும், மரணமில்லா பாடல்களால் காலப்பாதையில் கல்வெட்டாகி நிற்கும்,  அமரர் கவிதைப்பித்தனை,விருதுகளுக்கும் அரசவைக்கவிஞர் எனும் அடையாளத்திற்கும் மேலான நிலையில் மனதில் நிறுத்தி,கரங்கொட்டி ஆர்ப்பரித்து,கரங்கூப்பி வணங்கிடுவோம்!

ப.சந்திரசேகரன்

                                  *******************0******************** 

   

Wednesday, September 1, 2021

கிறித்துவம் இஸ்லாமியம் போற்றிய,தமிழ்த்திரைப் பாடல்கள்.

 



   தமிழ்த்திரைக்கு பெருமை சேர்த்த'பாரத விலாஸ்'திரைப்படத்தில் இடம் பெற்ற "இந்திய நாடு என்வீடு;இந்தியன் என்பது என்பேரு"எனும் அற்புத மான பாடலின் இடையே வரும்"எல்லா மதமும் என்மதமே,எதுவும் எனக்கு சம்மதமே''எனும் ஒருமைப்பாட்டுச் சிந்தனையே,கலைத்தாயின் பிரம்மாண்ட பீடமாக விளங்கும்,திரையுலகின் கொள்கையாகும். 

   வெள்ளித்திரை,மொழிகளுக்கும் மதங்களுக்கும் அப்பாற்பட்டு,படைப் பாற்றலால் உலகை ஒன்றாக்குகின்து.மொழி ளும் கவிதை வரிகளி னால்,மதம் கடந்து,மனிதத்தை ஒன்றாகக் காண்பதே,வெள்ளித்திரையின் கோட்பாடு.

  இந்த பேதமகன்ற சிந்தனையின் வெளிப்பாடே,அவ்வப்போது நாம் கண்டு ரசித்த,கேட்டு மனம் நெகிழ்ந்த,எல்லா மதங்களையும் ஒன்றாகக் காணும் காட்சிகளும் பாடல்களுமாகும். இந்த வகையில் தமிழ் திரைப் படங்களில் இடம்பெற்ற,நெஞ்சில் நினைவலைகளாய் ஒலி யெழுப்பும் ஒரு சில பாடல்களை பெருமைப்படுத்துவதே,இப்பதிவின் நோக்கமாகும். 

  ' மிஸ்ஸியம்மா''ஞான ஒளி'ஜீசஸ் அன்னை வேளாங்கண்ணி''குழந்தை ஏசு''உண்மையே உன் விலை என்ன''வெள்ளை ரோஜா'போன்ற முக்கிய மான திரைப்படங்கள்,கிறித்துவ மதத்தின் புனித அம்சங்களை,பல வகை யில் துல்லியமாக வெளிப்படுத்தின.'குலேபகாவலி''அலிபாபாவும் நாற்பது திருடர்களும்''அலாவுதீனும் அற்புத விளக்கும்''முஹம்மதுபின் துக்ளக்'போன்ற திரைப் படங்கள் இஸ்லாமிய மத பெயர்களை தலைப் பாக கொண்டிருந்தாலும்,பிரதானமாக அவைகள் இஸ்லாமிய பெருமை யினை பறைசாற்றவில்லை.ஆனால்,அவற்றின் ஒரு சில பாடல்களும், வேறு ஓரிரண்டு திரைப்படப் பாடல்களும்,இஸ்லாமியர்களின் உணர்வு களையும், இறைநெறியினையும் நமக்கு வெளிப்படுத்தின. 

   இந்து மதமல்லாது,பிறமதம் போற்றும் பாடல்களில் மனதில் ஆழ்ந்த உணர்வுகளைத் தாங்கி,என்றென்றும் மறக்கவொண்ணா பாடலாக அமைந்ததே,ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தமிழிலும்,விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் தயாரித்து திரைக்கு வந்த,'மிஸ்ஸியம்மா'திரைப்படத்தில் கே.ராஜேஸ்வரராவ் இசையில் பி.லீலா பாடிய, 

"எனையாளும் மேரிமாதா 

துணைநீயே மேரிமாதா 

என்றும் துணைநீயே மேரிமாதா 

பரிசுத்த ஆவியாலே 

வரபுத்ரன் ஈன்ற தாயே 

பிரபு ஏசுநாதன் அருளால் 

புவியோரும் புனிதம் அடைந்தார்" 

  எனும் ஏகாந்த கீதம்.ந்தப்பாடல் இப்போது கேட்டாலும்,நம்மை கடந்த காலத்திற்கு இசை வாகனத்தில் இதமாய் பயணிக்கச்செய்யும்.இதே போன்றொரு கருத்தினை இன்னும் ஆணி அடித்தால்போல் வெளிப்படுத் திய பாடலே,'அச்சாணி'திரைப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில் எஸ்.ஜானகி தனது ஆன்மாவுடன் சங்கமித்துப் பாடிய, 

"மாதாவின் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் 

தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்கு காட்டினேன் 

மாதா! 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழி மாறுமே

மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே

மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா

மாதா!"

  என்று நமது இதயங்களை இசையோடு துடிக்கச் செய்த பாடல்.அதுவும் 'மாதா' என்று இரண்டாம் முறை உச்சரிக்கையில்,அந்த ஒற்றைச்சொல் நம் நெஞ்சை உலுக்குவதாக உணரக்கூடும். 

  1971-இல் கே.தங்கப்பன் இயக்கத்தில் உருவான'அன்னை வேளாங்கன்னி' திரைப்படம்,கிறித்துவ மதத்தின் பெருமையினை வலுவாக நிலை நிறுத் தியது.அன்னை வேளாங்கன்னியின் புனித மேலான்மையை வெளிப் படுத்தும் மூன்று கிளைக்கதைகளை முன்னிறுத்தி,ஜெமினி கணேசன் ஜெயலலிதா மற்றும் பலரும் பங்கேற்ற,நினைவுக்குரிய த்திரைப்படத் தில்,டி.எம்.எஸ் மனமுருகிப் பாடிய,

"தேவ மைந்தன் போகின்றான் தேவ தூதன் போகின்றான்

ஜீவ நாடகம் முடிந்ததென்று தேவ மைந்தன் போகின்றான்

தேவ பூமி அழைத்ததென்று மேரி மைந்தன் போகின்றான

உலகை சுமக்கும் தோள்களிலே சிலுவை சுமந்து போகின்றான்

ஒளி வழங்கும் கண்களிலே  உறுதிகொண்டு போகின்றான்

குருதிபொங்கும் வேளையிலும் கோபமின்றி  போகின்றான்

கொடிமுள்ளால் மகுடமிட்டும் கொடுமை தாங்கி போகின்றான்"     

   எனும் அர்த்தப்புள்ளிகளால்,அழகிய கோலம் வரைந்த பாடல். 

   1972-இல்,பி.மாதவன் இயக்கத்தில் திரைக்கு வந்த 'ஞான ஒளி' திரைப் படம்,கிறித்துவ மத கோட்பாடுகளை,குறிப்பாக செய்த பாவங்களை முன் னிறுத்தி,பாவ மன்னிப்பு கோருவதாக பொருளறியப்பட்டு,செவாலியர் சிவாஜி கணேசனின் அற்புதமான நடிப்பில்,அமோக வெற்றி பெற்றது. அந்த கனமான திரைப் படத்தில்,டி.எம்.சௌந்தராஜனின் கம்பீரக் குரலில் வசனமாகவும்,பாடலாகவும் ஒலித்த,

"தேவனே என்னை பாருங்கள்

என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்

ஆயிரம் நன்மை தீமைகள்

நாங்கள் செய்கின்றோம்

நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்"  

எனும் பாடல் காலம் வென்று இன்றும் நெஞ்சில் நிலைக்கிறது.  

  பின்னர் 1973- இல் மலையாளத்தில் பி.ஏ.தாமஸின் இயக்கத்தில் தயாரிக் கப் பட்டு  தமிழில் மொழிமாற்றம் செய்து வெளிவந்த 'ஜீசஸ்'திரைப்படத் தில் முரளிதாஸ் என்பவர் இயேசு கிறிஸ்துவாகவும்,எம்.என்.நம்பியார் ஜூடாஸ் ஆகவும் நடித்திருந்தனர்.ஜெமினி கணேசன்,ஜெயலலிதா,ஜெய பாரதி,மற்றும் பலரும் நடித்திருந்த இத்திரைப்படம் இயேசு பெருமானின் வாழ்க்கை வரலாற்றை வெண்திரை நிகழ்வாக்கியது.

  1983-இல் சிவாஜி கணேசன் பாதிரியாராகவும்,காவல்துறை அதிகாரி யாகவும் இரட்டை வேடம் ஏற்று நடித்து ஏ.ஜெகநாதன் இயக்கத்தில் வெளி வந்த 'வெள்ளை ரோஜா'திரைப்படம் கிறித்துவ மதம் சார்ந்து,மதபேதங் களால் மறைக்கப்பட்ட குற்றங்களை,கருவாகக் கொண்டிருந்தது.அந்த திரைப்படத்தில் பாதிரியாராக தோன்றிய சிவாஜிக்கு குரல் கொடுத்து,  மலேஷியா வாசுதேவன் குழுவினருடன் பாடிய பாடலே, 

"தேவனின் கோவிலிலே

யாவரும் தீபங்களே

பாவிகள் யாரும் இல்லை

பேதங்கள் ஏதுமில்லை

மேரியின் பூமடி மேவிய

தேவனின் கோவிலிலே

யாவரும் தீபங்களே!

தோட்டத்து பூக்களைப்போல்

புன்னகை வீசிடுங்கள்

வாட்டத்தை போக்குகின்ற

வார்த்தையை பேசிடுங்கள்".

   இந்த பாடல் தூய்மை தழுவிய கருத்துக்களினாலும்,வாசுதேவனின் குரல் அழுத்தத்தினாலும்,சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்தியதோடு மட்டுமல் லாது,ஆழ்ந்து சிந்திக்கவைக்கும் பாடலாயிற்று.

   மேலே குறிப்பிட்ட பாடல்களில்'வெள்ளை ரோஜா'படப்பாடலை வாலியும், இதர மூன்று பாடல்களை கவியரசும் எழுதினார்கள் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.இசையைப் பொறுத்தவரை'அச்சாணி'மற்றும் 'வெள்ளை ரோஜா'திரைப்படங்களுக்கு  இளையராஜாவும் 'ஞான ஒளி' படத்திற்கு எம் எஸ் விஸ்வநாதனும் 'அன்னை வேளாங்கன்னி'க்கு ஜி. தேவராஜனும் அற்புதமாய் இசையமைத்திருந்தனர்.

  முதலில் இஸ்லாமிய பெருமையை  திரைக்கு கொண்டுவந்து நினைவில் நிற்கச் செய்தது,எம்.ஜி.ஆரின் வெற்றிப்படங்களில் ஒன்றான 'குலேப  காவலி' திரைப்படத்தில்,மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராம மூர்த்தி ஆகியோரின் இசையில்,தஞ்சை ராமையாதாஸ் எழுதி,நாகூர்  ஹனிபாவும் S.C. கிருஷ்ணனும் பாடிய இஸ்லாமிய புகழும் மத நல்லிணக் கமும் இணைந்து போற்றிய, 

நாயகமே ....................

ஜகமே புகழவே .............

நாயகமே ...........

நாயகமே நபி நாயகமே

நலமே அருள் நபி நாயகமே

நாயகமே நபி நாயகமே

நாயகமே ...........

இணையில்லாத எங்கள் பாதுஷா

பிறந்த இன்ப நாளிலே நாயகமே

இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு

இன்புற வேண்டும் நாயகமே

நாயகமே நபி நாயகமே

நாயகமே ...............

அறியாமை இருள் நீங்கி

இன்ப ஒளி அமைய வேண்டும்

அன்பின் இதயமே 

காணிக்கை செய்வோம்

அருள் தாரும் நபி நாயகமே

நாயகமே நபி நாயகமே

  என்ற அழகும் எளிமையும் கொண்டபாடல்.ப்பாடல்,திரைப்பட வரலாற் றின் தொடக்க காலத்திலேயே,வரிகளால்,இசையால்,இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிது. 

   இஸ்லாமியத்தை நினைவில் நிற்கச் செய்த  இன்னுமொரு பாடல், 'அலிபாபாவும் நாற்பது திருடர்களும்'திரைப் படத்தில் எஸ்.தட்சிணா மூர்த்தியின் இசையில்,கண்டசாலாவின் குரலில்,''அல்லாவின் பெருமை யாலே சொல்லாமல் வந்ததே யோகம்''என்று ஒலித்தது .

  அதற்குப் பிறகு  1961-ஆம் ஆண்டு ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்து திரையரங்குகளில் திருவிழா கண்ட'பாவ மன்னிப்பு'திரைப்படத்தில் என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்க பாடலாக விளங்கிதே,நாகூர் ஹனீபாவும்,டி.எம்.சௌந்தராஜனும் சேர்ந்து,ஒலியாலும் பொருளாலும் உள்ளம் நிறைத்த, 

"எல்லோரும் கொண்டாடுவோம் 

எல்லோரும் கொண்டாடுவோம் 

அல்லாவின் பேரைச்சொல்லி 

நல்லோர்கள் வாழ்வை எண்ணி" 

  எனும் கண்ணதாசனின் வரிகளால்,நல்லெண்ணங்களை நெஞ்சில் விதைத்த பாடல்.இப்பாடலுக்கு இடையே தோன்றும், 

"கடலுக்குள் பிரிவுமில்லை

கடவுளில் பேதமில்லை

முதலுக்கு அன்னை

என்போம் 

முடிவுக்கு தந்தை

என்போம்

மண்ணிலே விண்ணை

கண்டு ஒன்றாய் கூடுவோம்'' 

  எனும் வரிகள் வெறும் கற்பனையாய் நில்லாது,மனித வாழ்வின் அற நெறி கோட்பாடுகளை உன்னதமாய் வெளிப்படுத்தி,மத நல்லிணக்கத்தை உருவாக்கின.தமிழ்த் திரைவரலாற்றின் இந்த திவ்யப் பாடல் வரிகளுக்கு, மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந் தனர்.

   இஸ்லாமிய தத்துவங்களை பழச் சாரென பிழிந்தெடுத்துத் தந்த இணை யில்லாப்பாடலொன்று சோ இயக்கத்தில் 1971-இல் வெளிவந்த'முஹம்மது பின் துக்ளக்'படத்தில் இடப்பெற்றது.மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்  இசையமைத்த அந்த உணர்வு பூர்வமான, 

"அல்லாஹ் அல்லாஹ் 

அல்லாஹ் அல்லாஹ் 

நீ இல்லாத இடமே இல்லை 

நீதானே உலகின் எல்லை 

நிறம் வெளுக்க நீர்தான் உண்டு 

நீர் வெளுக்க  நீ தான் உண்டு

மனம் வெளுக்க யார்தான் உண்டு 

நபியே உன் வேதம் உண்டு 

உடலுக்கு ஒன்பது வாசல் 

மனதுக்கு எண்பது வாசல் 

உயிருக்கு உயிராய்க் காணும் 

ஒருவாசல் பள்ளிவாசல் 

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம் 

இல்லார்க்கு எதுதான் சொந்தம் 

நல்லாருக்கும் பொல்லார்க்கும் 

நாயகனே நீதான் சொந்தம்" 

   என்ற கவிஞர் வாலியின் வற்றா நதியெனப்பாயும் வரிகளை,மெல்லிசை மன்னரின் உச்சக்குரலில் பாடக்கேட்டு,மெச்சாதவர்கள் இருக்க வாய்ப் பில்லை. 

   இறுதியாக 1975 -ஆம் ஆண்டு திரைக்கு வந்த,கலைஞரின் கதை வசனம் தாங்கி,கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் மு.க.முத்துவும் பத்மப்ரியாவும் நடித்த,'அணையா'விளக்கு திரைப்படத்தில்,மு.க.முத்து பாடிய மிகச் சிறந்த பாடலை நிறைவுடன் குறிப்பிட்டாகவேண்டும். எம்.எஸ்.விஸ்வ நாதன் இசையில்,நாகூர் ஆண்டவரின் புகழ் பரப்பும் பாடலான, 

"கூன் பிறையை தொழுதிடுவோம் 

குர்ரானை ஓதிடுவோம் 

மேன்மைமிகு மெக்காவின் 

திசை நோக்கி பாடிடுவோம் 

நல்ல மனதில் குடியிருக்கும் 

நாகூராண்டாவா 

உன்னை மனதில் தினமுமெண்ணி 

நானும் வேண்டாவா 

யாரும் வருவார் யாரும் போவார் 

நாகூர் ஆண்டவன் சந்நிதியில் 

நானும் உண்டு நீயும் உண்டு 

நபிகள் நாயகம் முன்னிலையில்" 

  எனும் வரிகள் மூலம்,மு.க முத்துவின் இனிய குரலில்,இஸ்லாமிய வழி பாட்டுத்தங்களில்,நாகூர் தர்காவினை,தமிழகத்தின் மண்மணத்தோடு  மணக்கச்செய்து,உலக சுவாசத்திற்கு உடமையாயாக்கியது.

   பல மதங்கள் பலமுடனே, மனிதம் காக்கும் இந்திய திருநாட்டில், ஒவ் வொரு மொழியும் அனைத்து மதங்களின் முக்கியத்துவத்தினை திரைப் படங்கள் மூலம் கவிதை வரிகளாய்,இசைத்தேன் கலந்து,செவிகளுக்கும் சிந்தனைக்கும் விருந்து படைக்கின்றன. இந்திய ஒருமைப் பாட்டிற்கு,மத நல்லிணக்கம் நங்கூரமாக நின்று நன்மை பரப்புவதற்கு,திரைப்படங்கள் தலையாய பங்கு வகிக்கின்றன. இந்த வகையில் தமிழ் திரைப்படத்துறை, தமிழையும் தமிழரின் கலாச்சார முதன்மையினையும்,தலைநிமிரச்செய் கின்றது என்பதில்,எள்ளளவும் அய்யமில்லை.  

ப.சந்திரசேகரன்.

                                            ************0*************      

Sunday, August 22, 2021

Remembering Actress Chitra


   



   Chitra known by her brand ambassador name Idhayam Nallennai Chitra was one of the most popular faces of Malayalam cinema who had acted in quite a number of Tamil films,besides acting in a few Telugu and Kannada films.She had made a couple of Hindi entries too.Death has struck her with a maasive heart attack at the age of 56.

  Chitra was always a meek and modest face of Tamil Cinema.Having been introduced by K.Balachander in an uncredited role in Aboorva Ragangal, she had also acted in KB's Manadhil Urudhi Vendum.She had played impressive sister roles as Vijayakanth's sister in Auto Raja,as Prabu's sister in "En Thangachi Padichava {one of the notable early films of Prabu}and as the younger sister of Vijayakumar and Sarathkumar in the most commendable film Cheran Pandian directed by the ace film maker K.S.Ravikumar.She had also acted in Ravikumar's two other films Putham Puthu Payanam and Periya Kudumbam.

  Chitra played the main role paired with Karthik Muthuraman in Thiruppu Munai.She did significant roles in films like Raja Parvai,Oorkaavalan,Ninaivu Chinnam,Edhir Katru,Pondatti Rajyam and Paarambaryam.Chitra had been mostly typecast especially in Malayalam films in the role of  a victim of circumstances,or as a victim of the exploited lot,in the hands of men without morals.In Tamil, her most remembered roles are from En Thangachi Padichava, Oorkaavalan and Cheran Pandian.In all these films she fell a victim of tragic events caused by villainous characters played by Anandaraj,Raghuvaran and K.S.Ravikumar respectively.

  Humility and submission were the trademarks of the role assigned to Chitra and she performed her roles with absolute spirit of modesty and merit,supported by her dedicated role play.She was a worthy addition to many films and it is really worthy to remember her at this moment,with a deep sense of appreciation that she deserves.Let her soul rest in peace.

                                                   ============0=============

 

Friday, August 20, 2021

Tamil cinema's directorial face of elegance


  


   Film directors are mostly of two kinds.Those who reach the audience directly as sun light, lightning and thunder and others who keep radiating their creative flashes into the minds of the audience and make them reflect and react rather than merely enjoy the show.Film makers like K.Balachander,Balu Mahendra,Parthiban,Bala,Gautham Vasudev Menon,Vetrimaran and a few others besides Bharathiraja,who was a poetic narrator of simple and complex human emotions with a substance of subtelity and fascinating felicity,belong to the second category.This second brand would narrate stories either with stark realism,or through their enhanced formulas of imprinting realism,through intricate channels.

  But a majority of  film makers would like to reach the audience directly,with their scope of story falling upon a wide plateau of action field,as events taking place through a grand,make believe power programme.The film viewers are easily carried away by the larger than life events,doing their perceptive progress on the big screen.A gripping story line,an engaging action bonanza, image boosting heroism and an ear invading digital musical parade,call for a little less than three hour celebration at the theatres,with popcorns and snacks as inevitable additions.

  To make a full fledged action movie is not that easy.There is a huge line of action movie makers starting from Shankar.If grandeur is the trade mark of Shanker, speed is second nature for Hari especially in his films like Samy and the Singam series.Bhagyaraj has ever been the most light hearted film maker of action and family dramas.P.Vasu and K.S Ravikumar have been straight film makers,filling their action agenda,with force of dialogues and performance thrust.Of the two the latter,most often took the rural highways for his film journey.Lingusamy made the audience run along with the events of his hit films like Run and Sandakozhi.Dharani's Dhil,Gilli and Dhool were action treats from the beginning till the end.Ezhil's Thullaadha Manamum Thullum,Pennin Manadhai Thottu and Poovellaam Un Vaasam were high breed romantic action dramas.In this list,we have A.R.Murugadoss who in addition to speed and tempo,is capable of adding elegance as something special in his course of narration.

  Murugadoss may not have the Himalayan grandeur of director Shankar.But he has a little bit of magic to transform his heroes with an extra touch of elegance and charm,to perform theri roles with a striking note of difference from their earlier ways of acting.Murugadoss of course failed to achieve this in his first film'Dheena'with Ajith.It was in a way,a raw narration of action sequences and the moderate success of the film was mostly due to the fan base that Ajith had already established.Inspite of the presence of Ajith and the Malayalam action hero Suresh Gopi,the film failed to create the impact it wanted,because it was a usual story of gansterism told in its cliched mode.Moreover,the miracle of elegance that Murugadoss is capable of,was missing in Dheena.

  But his second film 'Ramana' made it to all the theatres, irrespective of the variously classified centres known to the film distributing agencies.I saw a night show of the film in a theatre at Athur,with one of my close friends.Ramana redefined the style and role play of Vijayakanth to the height of elegance. After Chinna Gounder,one could see the underplay of the Captain.But in Ramana,Vijayakanth moved from the rural soil to the urban block.From the very first shot,the film marched on the track of elgance in narration of an action film,with astonishingly reduced decibel,that is the normal practice for an action film.

  The scene showing the hero taking a dead body to a money sqeezing hospital for treatment and the subsequent course of narration,is a single cinematic event to remember how elegantly the crimes of the health sector could be narrated,not only entertainingly,but also with a touch of beautiful common sense.During the course of his elegant narration of the entire film,Murugadoss made even a secondary character like that of a constable {memorably performed by Yugi Sethu}live long by his smart statement'If you hit here,it will pain there'.''Ramana'was on the whole,a neat tale elegantly told.It could also be called one of the most lovable films of the captain, that preceded his last spell of  interesting entries like 'Sokka Thangam','Enga Anna' and Perarasu.

   Next came the film 'Gajini' refreshingly filmed by A.R.Murugadoss.I think it was the first film that showed Suriya in an exuberantly handsome frame,carrying on an exotic romantic experience with Asna,by spinning winnable yarns about his personal side and enjoying at close watch,all the cheeky responses of his most loved woman.But this cute flashback is preceded by a wild Suriya undergoing the trauma of memory loss,with frequent bouts of past events knocking his brain. 'Gajini'was a precise and flawless mix up of brand new romance and beastly villainy,fascinatingly told,tying the audience to their seats.From then on,Suriya's demeanour and demonstration of acting,took an upward trend on the elegant side.Unfortunatley,Murugadoss could not continue his success story with Suriya,in his next most ambitious project,'Ezhaam Arivu'.

   Everybody knows the fan width of actor Vijay since the days of his full fledged action film 'Thirumalai'released by K.Balachander's production house.After 'Thirumalai',Vijay did many powerful roles as action hero.But the style and elegance of Vijay took a new turn in 'Thuppakki' which became a block buster and took action hero Vijay to a more competitive,performing  level with an appeal for the urban elite.His single utterance"I'am waiting"became popular for a repeat by other heroes and even comedians like Santhanam in a few films.

  In between the dismounting and boarding of trains by the hero,a dedicated officer of RAWof the Indian army,'Thuppaakki',took up the entire course of narration of events,on the ladder of elegance.Starting from the scene of bride seeing by the hero,until the culmination of the story's events showing the hero falling into the backwaters of the sea,after setting things for the explosion of the boat carrying the terrorist chief,each and every scene of the film was elegantly framed.The choregraphy of the song' Antartica'{beautifully sung by Krish}was marked by elegant fusion of visuals.Thuppakki was the masterpiece of elegance in the hands of Murugadoss.

  After 'Thuppakki',Vijay joined the Murugadoss wagon twice,for 'Kathi' and'Sarcar'.The story lines of both the films carried political undertones and the latter intelligently scripted the electoral rights of citizens.In elegant narration,Sarcar oudid 'Kathi'.Though'Kathi' would have made money on account of Vijay's dynamic dual role play,there was nothing new in the story line.Moreover, it looked like Vijay's most other films.Sircar's elegant touches were born of novelty in subject matter and exsquisite presentation of the action sequence.

  Finally,Murugadoss got a chance to work with the superstar in 'Darbar'.The elegant frames of this film were,the hero's daughter struggling to get her widowed father married to Nayantara  and her video recording addressed to her father just before her death,caused by gangsters' brutal attack of the car,happily driven by her father,along with her.The other elegant features of 'Darbar'were the Super star's rejuvenated looks and contrasting patterns of levity and gravity in performance.However,Murugadoss could not completely bring the Superstar under his directorial ambit,as he could do it with Vijayakanth and the two younger heroes.This is because, Rajini like MGR,can not completely become a director's actor,on account of his inherent chemistry with his ardent fans.Besides,Rajini's style has its own elegance.

  Apart from directing seven films Murugadoss wrote the script and produced 'Maan Karathe'.He has also produced films like 'Vathi Kuchi','Raja Rani'and'Pathu Enradhukkulla'.Though Murugadoss is a specialist in the action genre,his three films'Ramana','Gajini'and 'Thuppakki' will remain as outstanding exhibits of action drama,when compared to his own other four films.

  This is because the three films marked by me have imbibed special ingredients of elegance in their over all presentation.His action core does not make'sound and fury,signifying nothing'. On the other hand,it opens up the gates to action, gaining numerous notes of charm and beauty,to score an immortal place in the minds of the viewers.It is this singular touch of elegance,that raises the quality of the films of Murugadoss,and makes him different from other action movie makers.

                                       ==============0===================